துரதிர்ஷ்டவசமான உடலமைப்பு கொண்ட கழுதைப்புலி !

0

படைத்தல் என்றொன்று நிகழ்ந்திருப்பதானால், கடவுளுக்கு பிறரைக் கொடுமைப்படுத்தி சிரித்தல் பிடித்திருக்க வேண்டும். கழுதைப்புலி விலங்கினத்தில் பெண் கழுதைப்புலிகள் ஆண் கழுதைப்புலிகளை அடக்கி ஆளும். 

துரதிர்ஷ்டவசமான உடலமைப்பு கொண்ட கழுதைப்புலி !

இதற்கு காரணம் இந்த வகை விலங்கினத்தில், பொதுவாக ஆண் விலங்குகளுக்கு சுரக்க வேண்டிய டெஸ்ட்டோஸ்ட்டீரோன் என்கிற ஆர்மோன் பெண் இனத்திற்கு சுரப்பது தான். 

இதனால் குட்டிகளில் 60 சதவிகிதம் இறந்தே பிறக்கின்றன. சில நேரங்களில் காயம் ஏற்படுகின்றன.  

இதன் காரணமாக, பெண் கழுதைப் புலிகளின் பெண்குறியும் காலப்போக்கில் ஆண்களைப் போன்றே மாறி விட்டது. 

பெண் கழுதைப் புலிகள் ஆக்ரோஷமான உயிரினம். அந்தக் குழுவில் ஆண்கள் பெண்களைச் சார்ந்தே வாழ வேண்டியிருக்கும். இனப்பெருக்கத்துக்கு மட்டுமே அவை பயன்படுகின்றன. 

ஆண் கழுதைப் புலிகளுக்கும் பெண் கழுதைப் புலிகளுக்கும் உடலளவில் எந்த வேறுபாடுகளும் கிடையாது. 

போலி ஆண் குறி

போலி ஆண் குறி

ஆண் கழுதைப் புலிகளுக்கு இருப்பதைப் போன்ற ஆண் குறி பெண் கழுதைப் புலிகளுக்கும் உண்டு. இதற்குப் போலி ஆண் குறி என்று பெயர். 

பெண் கழுதைப் புலிகள் சிறுநீர் கழிப்பது, பிள்ளைகளை பெற்றுக் கொள்வது வரை எல்லாமே அந்தப் போலி ஆண்குறி மூலமாகத் தான். 

உயிரைப் பணயம் வைத்து குழந்தையை காப்பாற்றிய ஊழியர் !

உடலோடு ஒட்டியிருக்க வேண்டிய பெண்குறி, ஹார்மோன் கோளாறால், சில இன்ச் நீளத்துக்கு வெளியே நீண்டு காட்சி தருகிறது. 

ஆண்குறி வழியே குழந்தை

ஆண்குறி வழியே குழந்தை

இதைத் தான் போலி ஆண்குறி என்கிறார்கள். இப்போது ஆண்குறி வழியே குழந்தை பிரசவிப்பதை எண்ணிப் பாருங்கள்.

இந்த உடலியல் வடிவம் உலகின் கொடூரமான வடிவமைப்புகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. காரணம், பிறக்கும் போது குட்டியின் அளவை எண்ணிப் பார்த்தால், அது பிறப்பதற்கு வெறும் ஒரு அங்குல அகலமே வழியாக உள்ளது.

இந்த உடலியல் பிழைக் காரணமாக குழந்தை பெற்றெடுக்கும் போது, பெண் கழுதைப் புலிகளின் ஆண்குறி போன்ற பெண்குறி கிழிய வேண்டும். 

ஆக்சிஜன், தொழிற்சாலைகளில் எப்படி தயாரிக்கப்படுகிறது? - ஆக்சிஜன் தட்டுப்பாடு !

அப்படி கிழியும் சமயத்தில், மிகுதியான குருதிப்போக்கால் தாயும், கிழியாத சமயத்தில் மூச்சுத்திணறலால் குட்டியும் இறக்க 60 விழுக்காடு வாய்ப்பிருக்கிறது.

இனப்பெருக்க நேரத்தில் மூன்றிலிருந்து நான்கு குட்டிகள் வரை ஈனுகின்றன. குட்டிகள் ஈன்ற நாளிலிருந்து நான்கு வாரங்கள் வரை அவை மண்ணுக்குள் வளைத் தோண்டி வசிக்கின்றன. 

போராட வேண்டிய நிலை

போராட வேண்டிய நிலை

வேறு யாரையும் அங்கு அவை அனுமதிப்பதில்லை. யாருக்காகப் போராடுகிறோமோ அவர்களுடனேயே போராட வேண்டிய நிலை ஒவ்வொரு உயிரினத்துக்கும் வரும், அதில் கழுதைப் புலிகளும் விதிவிலக்கல்ல. 

குட்டிகளில் யார் பெரியவன் என்கிற சண்டை சிறு வயதிலேயே கழுதைப் புலிகளுக்குள் வந்து விடும். 

தாய் கழுதைப் புலிகளுக்கு இயற்கையில் குட்டிகளுக்கு பாலூட்ட இரண்டு முலைக் காம்புகள் மட்டுமே இருக்கும். 

இரண்டு காம்புகளில், இருக்கிற நான்கு குட்டிகளில் யார் முதலில் பால் அருந்துவது என்கிற சண்டை குட்டிகளுக்குள் நடக்கும்.  

முதுகுத் தண்டுக்குள் நுழையும் கேமரா எண்டோஸ்கோப்பி... குளோபல் ஹெல்த் !

இதில் பலம் பொருந்திய பெண் குட்டிகள் ஆண் குட்டிகளுடன் சண்டையிட்டு வெற்றி பெற்று விடுகின்றன. சில நேரங்களில் சண்டையின் முடிவில் ஆண் குட்டிகளைப் பெண் குட்டிகள் கொன்று விடுகின்றன. 

தப்பிப் பிழைக்கும் ஆண் குட்டிகள் பருவம் அடைகிற வரை தாயுடன் இருக்கின்றன. பருவம் வந்ததும் குழுவில் இருந்து பிரிந்து வேறு குழுவுடன் இணைந்து கொள்கின்றன. 

ஆண் கழுதைப்புலிகளை அடக்கி ஆளும்

ஆண் கழுதைப்புலிகளை அடக்கி ஆளும்

கழுதைப்புலிகள் ஒரு குழுவாக வாழ்பவை. ஒரு குழுவில் 80 கழுதைப் புலிகள் வரை இருக்கும். அதன் தலைவராக பெண் கழுதைப் புலிகளே இருக்கின்றன. 

ஆண் கழுதைப் புலிகளைக் காட்டிலும் அளவிலும் ஆக்ரோசத்திலும் பெண் கழுதைப் புலிகள் வலுவானவையாக இருக்கின்றன. 

குழுவை ஒருங்கிணைப்பதிலும்  வேட்டையாடுவதிலும் பெண் கழுதைப் புலிகள் சிறப்பாக செயல்படுபவை.  குழுவுக்கென்று  தனி எல்லைகளைக் கழுதைப் புலிகள்  வரையறுத்து வைத்திருக்கின்றன.

தாய்ப்பால் சுரப்பு அதிகமாக பால்சுறா குழம்பு செய்வது எப்படி?
 

அதற்குள் சிங்கம்,  சிறுத்தை, இன்னொரு கழுதைப்புலி கூட்டம்  என்று எந்த உயிரினங்களும் வந்து விடவே  கூடாது. அதில் அவை உறுதியாகவும் இருக்கின்றன. 

தன்னுடைய உடலில் சுரக்கும் ஒருவித வெள்ளை திரவத்தைக் கொண்டு தங்களின் எல்லைகளைத் தீர்மானிக்கின்றன. 

வித்தியாச ஒலியை எழுப்புகின்றன

வித்தியாச ஒலியை எழுப்புகின்றன

அதற்குள் எந்த உயிரினத்தையும் அவ்வளவு எளிதில் அவை அனுமதிப்பதில்லை. பல சண்டைகளுக்கும் உயிரிழப்புகளுக்கும் இதுவே ஆரம்ப காரணமாகவும் அமைந்து விடுகிறது. 

கழுதைப் புலிகளின் ஒவ்வொரு சத்தத்துக்கு ஒரு அர்த்தத்தைக் கொண்டிருக்கின்றன. அவற்றின் எல்லைக்குள் ஏதேனும் உயிரினம் வந்து விட்டால் ஒரு விதமான வித்தியாச ஒலியை எழுப்புகின்றன. 

மாவு சத்து மிக்க ஆலூ பரோத்தா செய்வது எப்படி?

`எல்லைக்குள் புதிதாக ஒருவன் வந்திருக்கிறான் இறை காத்திருக்கிறது என்று அர்த்தம். 

சிங்கமாக இருந்தாலும் சிறுத்தையாக இருந்தாலும் மொத்த கழுதைப் புலிகளும் ஒன்றாகச் சேர்ந்து  விரட்டி விடுகின்றன. 

சிங்கத்துக்கு ஒரே எதிரி கழுதைப்புலி

சிங்கத்துக்கு ஒரே எதிரி கழுதைப்புலி

பெண் கழுதைப் புலிகள் எதற்கும் அஞ்சாமல் எதிர்த்து நிற்கும். சில நேரங்களில் மிகப் பெரிய சண்டைகளே நிகழும். கழுதைப் புலிகளின் எதிரிகளில் ஒன்று சிங்கம். 

ஆனால், சிங்கத்துக்கு இருக்கிற ஒரே எதிரி கழுதைப்புலி. சிங்கம் இரையைத் துரத்துவதில் இருந்து, அதை வேட்டையாடுவதை மறைந்திருந்து பார்த்துக் கொண்டேயிருக்கும். 

சிங்கம் இரையை வேட்டையாடியதும் கழுதைப் புலிகளின் வேலை ஆரம்பமாகும். அப்போது வரை சிங்கத்தைப் பின் தொடர்கிற கழுதைப் புலிகள் சிங்கம் இரையை வேட்டையாடியதும், 

பஞ்சாபில் உருவான உணவு பரோட்டா செய்வது எப்படி?

தன்னுடைய மொத்த குழுவையும் சத்தம் எழுப்பி வரவழைக்கும். சிங்கத்துக்குக் கொடுக்கிற முதல் எச்சரிக்கை ஒலி அது தான். 

அந்த ஒலியைக் கேட்கிற மொத்த கழுதைப் புலிகளும் சிங்கம் இருக்கிற பகுதிக்கு வந்து விடுகின்றன. 

சிங்கம் பொதுவாக தனியாக வேட்டையாடும், வேட்டையை முடித்ததும் அந்த இடத்திலேயே இரையை உண்ண  ஆரம்பிக்கும். 

வேட்டைச் சிக்கியதும் அதை உண்பதில் சிங்கம் கவனம் செலுத்தும். அந்த நேரத்தில் மொத்த கழுத்தைப் புலிகளும் சிங்கத்தைச் `சுற்று' போட்டு விடுகின்றன. 

சிங்கம்  கழுதைப் புலிகளிடம் சிக்கினால்

சிங்கம்  கழுதைப் புலிகளிடம் சிக்கினால்

என்ன தான் சிங்கம் காட்டு ராஜாவாக இருந்தாலும் 80 கழுதைப் புலிகளிடம் சிக்கினால் பீதியாகத் தான் செய்யும். சிங்கம் முடிந்த வரை தன்னுடைய எதிர்ப்பைக் காட்டலாம், 

ஆனால், அவற்றுடன் சண்டை போட முடியாது. `கழுதைப் புலிகளிடம் சிக்கி உயிரை விட்ட சிங்கம்' என்கிற அவப் பெயரை சுமக்க அவை தயாராக இல்லை. 

துரத்திப் பிடித்து வேட்டையாடிய இரையை வேறு வழியில்லாமல் கழுதைப் புலிகளிடம் விட்டு விட்டுச் சென்று விடுகின்றன. கடைசியில் கழுதைப் புலிகளின் சூழ்ச்சி வென்று விடுகிறது. 

புரதம் நிறைந்த பிரட்களை உட்கொள்ளுங்கள் !

இங்கிருந்து தான் சிங்கங்களுக்கு கழுதைப் புலிகளுக்கும் இடையேயான போர் தொடங்குகிறது. 

இதனுடைய பிரதிபலிப்பு வேறு விதமாக இருக்கும். இரையைப் பறி கொடுத்த சிங்கங்கள் தனியாக இருக்கிற கழுதைப் புலிகளை வேட்டையாடிக் கொன்று விடுகின்றன. 

நேரடியாகச் சிங்கத்தை எதிர்த்து நிற்க முடியாத கழுதைப்புலிகள் தனியாக இருக்கும் சிங்கங்களின் குட்டிகளை வேட்டையாடிக் கொன்று விடுகின்றன. 

இதே நிலை தான் சிறுத்தைகளுக்கும். எவ்வளவு தான் பலவீனமான விலங்காகக் கழுதைப்புலி இருந்தாலும்  கூட்டமாய் சேரும் பொழுது அசுர பலத்தைப் பெற்று விடுகின்றன. 

பழங்களை வேக வைத்து சாப்பிடுவது ஏன்?

சிறுத்தைகளும் சிங்கங்களும் இன்றளவுக்குப் பயப்படுகிற என்றால் அவை கழுதைப் புலிகளுக்கு மட்டும் தான். 

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)