வாழ்க்கையை பாசிடிவாக பார்த்த எனக்கே கொரோனா பாசிடிவ்னு வந்துடுச்சு !

0

பிக் பாஸ் கேப்ரியல்லா, ஆஜித் ஆகியோருக்குப் பிறகு தற்போது சென்றாயனுக்கும் கொரோனா தொற்று உறுதியாகி யுள்ளது. மூடர் கூடம் படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் நடிகர் சென்றாயன். 

வாழ்க்கையை பாசிடிவாக பார்த்த எனக்கே கொரோனா பாசிடிவ்னு வந்துடுச்சு !
பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட சென்றாயன் தமிழக மக்களிடையே அதிகமாக பிரபலமானார். 

தற்போது சென்றாயனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “வணக்கம் மக்களே. நான் நடிக்கல, உண்மையாவே ஆவி புடிச்சுகிட்டு இருக்கேன். 

வாழ்க்கையில ஜெயிக்கணும், சினிமாவுல ஜெயிக்கணும் என எப்பவுமே வாழ்க்கையை பாசிடிவாகவே பார்ப்பவன் நான். ஆனா எனக்கே கொரோனா பாசிடிவ்னு வந்துடுச்சு.. 

கொரோனா மலட்டுத்தன்மையை ஏற்படுத்துகிறதா? அதிர்ச்சி செய்தி தெரியுமா?

ஆரம்பத்துல கொரோனா வருமா என கவனக் குறைவாக இருந்த எனக்கே இப்போது கொரோனா தாக்கியுள்ளது. என் வீட்டில் நான் தனிமைப் படுத்திக் கொண்டேன். 

சென்றாயன்

மனைவி, குழந்தைகள் வேறு அறையில் உள்ளனர். ஆரம்பத்துல கொரோனா வருமா என கவனக்குறைவாக இருந்த எனக்கே இப்போது கொரோனா தாக்கியுள்ளது. 

என்னை வீட்டில் நான் தனிமை படுத்திக் கொண்டேன். மனைவி, குழந்தைகள் வேறு அறையில் உள்ளனர். மனைவி மட்டும் அவ்வப்போது உணவு கொடுக்க வருவார். 

கொரோனா ரொம்ப டேஞ்சரஸ். மக்களே கொரோனாவில் இருந்து பாதுகாப்பாக இருங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)