மாத்திரை அட்டையில் உள்ள குறியீடு சொல்லும் கதை என்ன?

0

நாளுக்கு நாள் நோய்களின் வீரியம் அதிகரித்து கொண்டே வருகிறது. இது ஒரு புறம் இருக்க இதற்கான தடுப்புகளும் மற்றொரு புறத்தில் கண்டுபிடித்து கொண்டே வருகின்றனர். 

நம் உயிருக்கே ஆபத்தை உண்டாக்கி விடும்

நோய்கள் அதிகரிப்பதால் மருந்து- மாத்திரைகளின் அளவும் பல மடங்கு உயர்ந்துள்ளது. காலையில் எழுந்ததும் தனது வாழ்வை மாத்திரைகளுடன் தான் பலர் தொடங்குகின்றனர். 

இது உண்மையிலே மோசமான நிலை தான். ஒவ்வொரு பொருளையும் உட்கொள்ளும் போது அவற்றின் தன்மை அறிந்து நாம் எடுத்து கொள்ள வேண்டும். 

இல்லையேல் அவை நம் உயிருக்கே ஆபத்தை உண்டாக்கி விடும். அந்த வகையில் உடல்நல கோளாறுகளை தீர்க்க பயன்படும் மாத்திரைகளும் அடங்கும்.

உடல்நல கோளாறுகளை தீர்க்க

மாத்திரைகளை நாம் நீண்ட நாட்களாக தவறான முறையிலே சாப்பிட்டு வருகின்றோம். 

அதிலும் குறிப்பாக மருத்துவர்கள் அறிவுரை இல்லாமல் நாமே ஒரு சில பிரச்சனைகளுக்கு மருந்து எடுத்துக் கொள்வது பல நேரங்களில் ஆபத்தில் கொண்டு போய் விடுகிறது.

நீண்ட நேரம் வேலை பார்த்தால் பக்கவாதம் அபாயம் !

பொதுவாக எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் முறைப்படி மருத்துவரை அணுகி அவர் பரிந்துரைப்படி மருந்து மாத்திரை சாப்பிடுவது தான் நல்லது.

அதிலும் குறிப்பாக சிவப்பு கோடு போடப்பட்ட மாத்திரைகளை மருத்துவர்கள் பரிந்துரை இல்லாமல் சாப்பிடவே கூடாது. 

அதற்கான எச்சரிக்கை குறியாகத் தான் சிலவகை மாத்திரைகளில் இதுபோன்ற சிவப்பு கோடுகள் போடப்பட்டுள்ளது. அந்த  கோட்டுக்கான சில தகவல்களை இங்கு காண்போம்.

சிவப்பு நிறக்கோடு

மாத்திரை மருந்து கடைகளின் மருந்து அட்டைகளிலும், டப்பாக்களிலும் பெறும்பாலும் சிவப்பு நிறக்கோடு போடப்பட்டு இருக்கும்.

இந்த சிவப்பு நிற கோடானது மருந்து அட்டைகளில் இடது புறமாக ஒரு ஓரத்தில் போட்டு இருப்பார்கள். 

சென்னையில் ராட்டினம் அறுந்து விழுந்து விபத்து !

இது எதற்காக போடப்பட்டுள்ளது என்றால் மருத்துவர் பறிந்துரை (prescription) இல்லாமல் இந்த மாத்திரையை உட்கொள்வது நமக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை சுட்டிக் காட்டுவதற்காக அச்சிடப்பட்ட கோடு தான் அது.

அதாவது மருத்துவர் எழுதி கொடுத்த பரிந்துரை சீட்டை (Prescription) மருந்தகத்தாரிடம் குடுத்தால் மட்டுமே அந்த மருந்து மாத்திரையை அவர்கள் நமக்கு குடுப்பார்கள்.

மாத்திரை அட்டையில் உள்ள குறியீடு சொல்லும் கதை என்ன?

இதுவே சாதாரண அன்னாசின், பாராசிட்டமல் போன்ற சில மாத்திரைகளில் இந்த சிகப்பு காேடு இருக்காது என்பதாலே நம்மால் அந்த மாத்திரிகளை மருந்தகங்களில் எளிதில் கேட்டு பெற முடிகிறது.

ஆதாலால் மருத்துவர் பரிந்துரை இல்லாமல் இந்த சிவப்பு கோடிட்ட மாத்திரைகளை வாங்குவதோ, விற்பதோ சட்ட விரோதமானது.

உடலை வலுவாக்கும் தோப்புக்கரணம் !

சரி இந்த சிவப்பு கோட்டை தாண்டி சில குறியீடுகள் மருந்து மாத்திரை அட்டைகளில் இருப்பதை சற்று கூர்ந்து கவனித்தால் நம்மால் காண முடியும். 

அந்த குறியீடுகள் அனைத்தும் மருத்துவரின் பரிந்துரை நிலையையே குறிக்கிறது. அதில் முக்கியமான சில பின்வருமாறு.

Rx குறியீடு

Rx குறியீடு

Rx குறியீடானது எதற்காக மருந்து மாத்திரைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது  நாம் உடல்நிலை சரியில்லை என்று மருத்துவரிடம் செல்கிறோம், 

மருத்துவர் நமக்கு மருந்து மாத்திரைகளை எழுதிதருவார்..அவ்வாறு எழுதிதந்த மருந்து சீட்டை மருந்தகத்தில் காட்டினால் மட்டுமே இந்த Rx மருந்துகள் குடுக்கப்படும். 

யார் இந்த யூதர்கள்? ஏன் இவர்களை பார்த்து பயப்பட வேண்டும்?

முக்கியமாக அந்த மருந்தை நாம் எடுத்துக் கொண்டு உடல் நிலை சரியாகி விட்டு மீண்டும் சில மாதங்கள் கழித்து அதே போன்று உடல்நிலை சரியில்லை என்றால் நாம் மருத்துவரிடம் செல்லாமல்..., 

ஏற்கனவே அம்மருத்துவர் எழுதி கொடுத்த அந்த Rx மாத்திரை, மருந்துகளை நாம் மீண்டும் மீண்டும் மருந்தகங்களில் வாங்கி பயன்படுத்தலாம் என்பதே இந்த Rx குறியீடானது நமக்கு உணர்த்துகிறது.

NRx குறியீடு

NRx குறியீடு

பொதுவாக NRx என்பதை New Prescription என்று சொல்வார்கள். இந்த NRx வகை மருந்துகளில் சிறிதளவு நம்மை கிளர்ச்சி ஊட்டக்கூடிய போதை மருந்தை (Drugs) கலப்பார்கள். 

இந்த மருந்துகளை Narcotic Drugs என்று குறிப்பிடுவார்கள். இந்த NRx மருந்துகள் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் நமக்கு தர மாட்டார்கள்... 

எதற்காக குளிக்கிறோம்?

குறிப்பாக மருத்துவர் பரிந்துரை சீட்டானது (prescription) 6 மாதம் வரைதான் செல்லுபடியாகும். பின்பு அந்து மருந்து சீட்டானது காலாவதி ஆகிவிடும். 

அதாவது 6 மாதம் கழித்து மருத்துவர் எழுதிக் குடுத்த NRx வகை மருந்துகள் நம்மால் மருந்தகங்களில் பெற முடியாது.

பொதுவாக NRx வகை மருந்துகளை "மனஅழுத்தம், உளவியல், தூக்கமின்மை போன்ற நாேய்களுக்கு மருத்துவர்கள் பரிந்துரை செய்வார்கள். 

XRx குறியீடு

XRx குறியீடு

இந்த மருந்துகளை H, H1 என்று மருந்தகங்களில் வகைப்படுத்தி வைத்துள்ளார்கள். இந்த XRx வகை மருந்துகள் பொதுவாக அதிக அளவு கிளர்ச்சி ஊட்டக் கூடிய போதை மருந்து என குறிப்பிடுவர். 

இவ்வகை மருந்துகளை Narcotic and psychotropic substance based drugs என்று அழைப்பர். இந்த மருந்துகள் அனைத்தும் X என்ற எழுத்தில் வகைப்படுத்தப் பட்டுள்ளது.... 

இந்த மருந்துகள் எல்லாம் அதிக பலம் வாய்ந்த வலி நிவாரணி மற்றும் மயக்க மூட்டிகளாக பயன்படுகிறது. பொதுவாக இந்த XRx மருந்துகள் புற்று நோயாளிகள், மனநோயாளிகள் மற்றும் பெறும் 

அறுவை சிகிச்சைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த மருந்துகளை எல்லா மருத்துவர்களும் பரிந்துரை செய்ய மாட்டார்கள். 

குறிப்பாக மனநல டாக்டர், மயக்கவியல் நிபுணர், புற்றுநோய் மருத்துவர்கள்தான் அதிகம் பரிந்துரை செய்வார்கள்.

இந்த XRx வகை மருந்து சீட்டை பரிந்துரைக்கப்பட்ட அந்த நாளில் ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும். 

கர்ப்பம் வேண்டாம் செக்ஸ் வேண்டும் - எது சரி?

மேலும் மருந்தகத்தார்கள் நோயாளிகளின் தகவல்களுடன் இந்த மருந்து சீட்டை 2 வருடம் பாதுகாத்து வைத்திருத்தல் அவசியமாகும்.

அட்டையில் உள்ள குறியீடு சொல்லும் கதை என்ன?
NRx மற்றும் XRx மருந்துகளுக்கு ஏன் இவ்வளவு கட்டுப்பாடு எனில் இந்த மருந்துகளை சிலர் போதை யூக்கியாக தவறான முறையில் பயன்படுத்துகின்றனர் என்பதாலே.

மேலும் மருத்துவர்கள் இந்த வகை Drugs மருந்துகளை நோயாளிகளுக்கு ஒரே அடியாக நிறுத்த மாட்டார்கள்.

கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்து தான் நிறுத்துவார்கள்..அவ்வாறாக இந்த Drugs களை ஒரே அடியாக நிறுத்தினால் நோயாளிகளுக்கு பக்க விளைவை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings