பணத்துக்காகவே அவரை திருமணம் செய்தேன்... ராக்கி சாவந்த் !

0

அவருடைய பேங்க் பேலன்சுக்காகவே  இங்கிலாந்தை சேர்ந்த தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டதாக பிக் பாஸ் 14 வீட்டில் இருக்கும் பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் தெரிவித்துள்ளார். 

பணத்துக்காகவே அவரை திருமணம் செய்தேன்
காதலும் இல்லை ஒரு மண்ணாங்கட்டியும் இல்லைபணத்திற்காக தான் ரித்தேஷை திருமணம் செய்தேன் என்று கூறியுள்ளார்.

பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கி வரும் இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் 14 வது சீசனில் இந்தி நடிகை ராக்கி சாவந்த் கலந்து கொண்டுள்ளார். 

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களை சில பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்கும் நிகழ்ச்சி நடந்தது. 

பழைய கல்லறைகளைத் தோண்டும் அரசு - கொரோனாவால் உறைந்த பிரேஸில் !

அப்பொழுது ராக்கியிடம் அவரின் திருமணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. தற்போது பிக் பாஸ் வீட்டில் அபிநவுடன் நெருக்கமாக இருக்கிறீர்கள். 

ஆனால் கடந்த ஓராண்டு காலமாக உங்களின் திருமணம் பற்றி பேசப்படுகிறது. ஆனால் இதுவரை யாருமே உங்களின் கணவரை பார்த்தது இல்லை. 

இது விளம்பரத்துக்காக செய்யும் வேலையா என்று பத்திரிகையாளர்கள் கேட்டனர். நான் திருமணமான பெண். என் கணவருக்காக காத்துக் கொண்டிருக்கிறேன்.

பணத்துக்காகவே திருமணம் செய்தேன்

என் வாழ்க்கையில் வந்த சில பிரச்சனை காரணமாக தான், அவசரமாக திருமணம் செய்து கொண்டேன்.

இந்தியாவில் பிரபலமான ஒருவர். அவரின் பெயரை நான் சொல்ல மாட்டேன். நான் யாரையாவது திருமணம் செய்து கொள்ளாவிட்டால் அந்த பிரபலம் என்னை கடத்தியிருப்பார்.

அவர் என்னை மிரட்டினார். ஆனால் நான் அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை என்றார் ராக்கி.

பெட்ரோலியம் ஜெல்லியின் 23 வகையான பயன்கள் !

உங்களை மிரட்டியவர் யார் என்று கேட்டதற்கு ராக்கி கூறியதாவது, நான் அந்த நபரின் பெயரை சொன்னால், என்னை கடத்தி விடுவார். என் கணவர் ரித்தேஷ் மீது எந்த தவறும் இல்லை.

என்னை திருமணம் செய்து கொள்ளுமாறு நான் ரித்தேஷை கேட்டுக் கொண்டேன். நான் அவரை பார்த்தது இல்லை, அவருடன் பேசியது இல்லை. 

ராக்கி சாவந்த்

அவரின் பேங்க் பேலன்ஸை மட்டுமே பார்த்தேன் என்றார். நான் என் கணவருக்கு துரோகம் செய்யவில்லை. அபிநவுக்காக என் இதயம் துடிக்கிறது, நான் என்ன செய்ய?. 

நான் பாலிவுட்டை சேர்ந்தவள் என்பதால் மீடியாவுக்கு உங்களின் ஒரேயொரு புகைப்படத்தை வெளியிடுங்கள் என்று கணவரிடம் கேட்டேன். ஆனால் அவர் முடியாது என்று கூறி விட்டார். 

தன் அடையாளத்தை வெளியிட்டால் தன்னை அசிங்கப் படுத்துவார்கள், பிசினஸ் பாதிக்கும், நஷ்டம் ஏற்படும் என்று அவர் நினைக்கிறார். 

விவாகரத்து செய்து கொள்வதே நல்லது என்கிறார். அதனால் தான் நான் அமைதியாக இருக்கிறேன் என ராக்கி தெரிவித்தார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings