தன் கணவருக்காக தெரியாதவருடன் பாலுறவு கொள்ளும் பெண்கள் !

0

வரா - இது அந்தப் பெண்ணின் உண்மையான பெயர் அல்ல. வரா தனது 20 வயதுகளில் இருக்கும் போது தனது வருங்கால கணவரை சந்தித்தார். அவர் குடும்ப நண்பர் ஒருவரின் மூலம் வராவிற்கு அறிமுகமானவர். 

தன் கணவருக்காக தெரியாதவருடன் பாலுறவு கொள்ளும் பெண்கள் !

திருமணத்திற்கு பிறகு அவர்கள் குழந்தை பெற்று கொண்டனர் ஆனால் அப்போதிலிருந்து அவர் தன்னை துன்புறுத்த தொடங்கியதாக வரா தெரிவிக்கிறார்.

பணம் வேண்டும் என்று முதல் முறையாக அவர் தன்னை துன்புறுத்த தொடங்கியதாக வரா தெரிவித்துள்ளார்.

ஸ்லீப்பர் பஸ்ஸில் தனியே சென்றால் அந்த பெண் ரெடி !

எனது முடியை பிடித்து தரதரவென இரண்டு அறைகளைத் தாண்டி வெளியே இழுத்துக் கொண்டு வந்து வீட்டை விட்டு வெளியே துரத்த முயற்சி செய்தார்.

சில சமயங்களில் அவர் மிகவும் மோசமாக நடந்து கொள்வார். ஆனால் இந்த நிலை மாறும் என வரா நம்பினார். 

ஆனால் அவர் கணவரின் நடத்தை அதைவிட மோசமாகத் தான் மாறிக் கொண்டிருந்தது குறுஞ்செய்தியின் வழியாக அவரை விவாகரத்து செய்யும் அளவிற்கு அவரின் நடத்தை மோசமாக இருந்தது.

நான் குழந்தைகளுடன் வீட்டில் இருந்தேன். அவர் தனது அலுவலகத்தில் இருந்தார். எங்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதை தொடர்ந்து, `தலாக், தலாக், தலாக்` என்று அவர் குறுஞ்செய்தி அனுப்பினார்.

பிரிட்டனில் இம்முறையின் மூலம் எத்தனை பெண்கள் விவாகரத்து பெற்றுள்ளனர் என்ற தகவல்களை அறிய வாய்ப்பில்லை. 

இந்த விவாகரத்து முறை, பல இஸ்லாமிய நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ள போதிலும் சில இடங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தன் கணவருக்காக தெரியாதவருடன் பாலுறவு கொள்ளும் பெண்கள் !

அலைப்பேசி என்னிடம் இருந்தது, அதை நான் எனது தந்தையிடம் காண்பித்தேன், அவர் உடனே உனது திருமணம் முறிந்து விட்டது, 

நீ அவரிடம் திரும்ப செல்ல முடியாது. என்று தெரிவித்தார் என்று நடந்ததை விவரிக்கிறார் வரா.

"என் மனம் சுக்குநூறாகிப் போனது. ஆனால் என்னுடைய முன்னாள் கணவருடன் சேர்ந்து வாழ விரும்புகிறேன் ஏனேன்றால் அவரை நான் மிகவும் நேசித்தேன்"

அதே போல, தனது முன்னாள் கணவரும் அவரை விவாகரத்து செய்தது குறித்து வருத்தமடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதனால் சர்ச்சைக்குரிய ஒரு திருமண முறையான ஹலாலாவை வரா அணுக நேர்ந்தது; இந்த திருமண முறை முஸ்லிம்களில் ஒரு சிறிய குழுவினரால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. 

அவர்கள் மும்முறை தலாக்கையும் எற்றுக் கொள்கிறார்கள். தம்பதிகள், விவாகரத்து செய்து கொண்ட பின்னர் மீண்டும் இணைய விரும்பினால் ஹலாலா முறை தான் ஒரே வழி என்று அவர்கள் நம்பினார்கள்.

ஃபாஸ்ட்புட் தயாரிப்பின் அசிங்கமான செயல்கள் !

ஹலாலா என்பது விவாகரத்து ஆன ஒரு பெண், முகம் தெரியாத வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு முழுமையாக அவருடன் இணைந்து வாழ்ந்து பின் விவாகரத்து பெறுவது. 

இவ்வாறு செய்தால் மட்டுமே அவரால் திரும்பவும் முதல் கணவரை திருமணம் செய்து கொள்ள முடியும்.

தன் கணவருக்காக தெரியாதவருடன் பாலுறவு கொள்ளும் பெண்கள் !

இந்த முறை பெரும்பாலான முஸ்லிம் மக்களால் வண்மையாக கண்டிக்கப்படுகிறது. 

மேலும் விவாகரத்து குறித்த இஸ்லாமிய சட்டத்தை சிலர் தவறாக புரிந்து கொண்டிருப்பதே இதற்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது.

ஆனால் சில சமயங்களில் ஹலாலா சேவையை கோரும் பெண்கள் பெருமளவு பணத்தை இழக்கும் நிலை ஏற்படுகிறது. 

மோசடிக்கு உள்ளாக்கப்பட்டு, அச்சுறுத்தப் படுகிறார்கள், பாலியல் ரீதியாகவும் துன்புறத்தப் படுகிறார்கள், 

ஏன் பாலியல் துன்புறுத்தலுக்கும் உள்ளாக்கப் படுகிறார்கள். அதில் பெரும்பாலானோர், தற்காலிக திருமணங்களை செய்து கொள்வதற்கு பெண்களிடம் ஆயிரக்கணக்கான பவுண்டுகளை வசூலிக்கின்றனர்.

விவாகரத்து ஆன ஒரு பெண் 2500 பவுண்டுகளை செலுத்தி, அவருடன் உடலுறவு வைத்துக் கொள்ள வேண்டும்,  பிறகு ஹலாலா திருமணம் "முழுமையடைந்த" பின் அவருக்கு விவாகரத்து வழங்கப்படும்.

தனது கணவருடன் மீண்டும் இணையும் தீவிர எண்ணத்தில் இருந்த வரா, ஹலாலா திருமணத்திற்கு இசையும் ஒரு நபரை தேட தொடங்கினார்.

மார்பில் அதிக முடி? அதிர்டமா?

குடும்பங்களின் ஆதரவுடன் இதனை செய்யும் சில பெண்களை எனக்கு தெரியும். 

அவர்கள் இது போல திருமணம் செய்து கொண்டு பிறகு, அவர்கள் பல மாதங்கள் பயன்படுத்திக் கொள்ளப்பட்டார்கள் என வரா தெரிவிக்கிறார்,

தன் கணவருக்காக தெரியாதவருடன் பாலுறவு கொள்ளும் பெண்கள் !

விவாகரத்து குறித்து பெண்களுக்கு ஆலோசனை வழங்கும் கிழக்கு லண்டனில் உள்ள இஸ்லாம் ஷரியா கவுன்சில், இந்த ஹலாலா திருமணங்களுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறது.
பெண்களை கவர ஆண்கள் அணிய கூடாத உடை !

இது ஒரு போலியான திருமணம், இது பணம் சம்பாதிபதற்கான வழியாகக் கருதப்படுகிறது. 

மேலும் பலவீனமானவர்கள் இதனால் பாதிக்கப்படுகின்றனர் என அந்த அமைப்பைச் சேர்ந்த கோலா ஹசன் தெரிவிக்கிறார்.

அவர்கள் மசூதிக்கு செல்வார்கள். அங்கு இதற்காக ஒதுக்கப்பட்ட அறையில் அந்த சேவையை அளிக்கும் நபர்களுடன் பாலுறவு கொள்ள வேண்டும். 

பிறகு அவர்கள் வேறு நபர்களையும் அப்பெண்ணிடம் பாலுறவு கொள்ள அனுமதிப்பார்கள். இது மன்னிக்க முடியாத கொடுமை. 

ஹலாலா திருமணத்தை தவிர்க்க உதவிகளை நாடலாம் அல்லது ஆலோசனை பெறலாம். எவரையும் இந்த ஹலாலா திருமணத்தை செய்து கொள்ள அனுமதிக்க மாட்டோம்" என்று அவர் தெரிவித்தார்.

சர்க்கரைக்குப் பதிலாக எத்தனால் & எரி சாராயம் !

இதையெல்லாம் கேட்ட பிறகு, ஹலாலா திருமணம் செய்து, அதில் பல கொடுமைகளை அனுபவித்து, அதன் பிறகு தனது முதல் கணவருடன் மீண்டும் சேரும் முடிவிலிருந்து பின் வாங்கிவிட்டார் வரா.

தன் கணவருக்காக தெரியாதவருடன் பாலுறவு கொள்ளும் பெண்கள் !
ஆனால் என்னைப் போல ஏராளமான பெண்கள், எப்படியாவது தீர்வு கிடைக்காதா என்று துடித்துக் கொண்டிருக்கிறார்கள் என எச்சரிக்கிறார் வரா.

விவாகரத்து பெற்று விட்டு வலியை அனுபவித்து கொண்டிருக்கும் என்னை போன்றவர்களின் நிலையில் இருந்தால் ஒழிய, பெண்களின் வலியை புரிந்து கொள்ள முடியாது.

பெண்களுக்கு 'அந்த' இடத்தில் துர் நாற்றம் நீங்க?

இப்போது என்னைக் கேட்டால் நான் இந்தக் காரியத்தை ஒரு போதும் செய்ய மாட்டேன். ஒருவரிடம் சேர்ந்து வாழ இன்னொருவருடன் என் உடலைப் பகிர்ந்து கொள்ள மாட்டேன். 

ஆனால் அந்த நேரத்தில், எனது முன்னாள் கணவருடன் சேர்ந்து எந்த ஒரு நடவடிக்கைக்கும் நான் தயாராகவே இருந்தேன் என்கிறார் வரா.

நன்றி :bbc

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)