வயிற்றுப்போக்கு காரணமும் சிகிச்சையும் !





வயிற்றுப்போக்கு காரணமும் சிகிச்சையும் !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0

வயிற்றுப் போக்கால் ஆண்டுதோறும் 13 இலட்சம் குழந்தைகள் மரணம் அடைகின்றனர் என்றும் குழந்தைகள் மரணத்திற்கு இதுவே இரண்டாவது பெரும் காரணம் (This is the second leading cause of death in children.). 

வயிற்றுப்போக்கு காரணமும் சிகிச்சையும் !

கடுமையான வயிற்றுப் போக்கினால் நீர்ச்சத்து குறைந்து போகிறது. குறிப்பாக இளம் பிள்ளைகளுக்கும், சத்துணவின்றி👈 போனவர்களுக்கும், நோய்த்தடுப்பு சக்தி குறைந்தவர்களுக்கும் இது உயிருக்கே ஆபத்தானதாகும். 

தினமும் காலை மலம் கழிப்பது இயற்கையானது (It is natural to defecate every morning.). உடலில் இருக்கும் கழிவுகளை இது வெளியேற்றுகிறது (It flushes out wastes in the body). இது இயல்பானது. காலை மாலை இரண்டு வேளையும் கூட சிலர் மலம் கழிப்பார்கள் . 

இவையும் ஒன்று ஆரோக்கிய குறைபாடு👈 இல்லை. ஆனால் ஒரு நாளைக்கு மூன்று அல்லது அதற்கு மேல் இளகிய நிலையில் அதிகப்படியான நீருடன் மலம் கழிப்பதையே வயிற்றுப்போக்கு அல்லது டயரியா என்கிறோம்.

வயிற்றுபோக்கு காரணம்

வயிற்றுபோக்கு காரணம்

இது மட்டுமே காரணம் என்று வரையறுக்க முடியாது என்பதால் ஒரே நாளிலோ ஒரே மாத்திரையிலோ இவை குணமடைவதில்லை. பெரும்பாலும் உணவு ஒவ்வாமை, பாக்டீரியா, வைரஸ் தொற்று, ஒட்டுண்ணிகள் போன்றவை காரணமாகிறது.

மேலும் அசுத்தமான நீரைக் குடிப்பவர்கள், உடலில் நோய் 👉எதிர்ப்ப்புசக்தி குறைவாக இருப்பவர்கள், அசுத்தமான இடத்தைச் சுற்றி இருப்பவர்கள், 

குழந்தைகளாக இருந்தால் தாய்ப்பால் குடிக்காத குழந்தைகள் போன்றவர்கள் எளிதில் வயிற்றுபோக்கு பிரச்சனையைச் சந்திக்கிறார்கள்.

வயிற்றுப்போக்கு பாதிப்புகள்

வயிற்றுப்போக்கு பாதிப்புகள்

வயிற்றுப்போக்கு உண்டானால் முதலில் உடலில் இருக்கும் நீர்ச்சத்து அளவு குறையும், இதனால் நீர்ச்சத்து பற்றாக்குறை உண் டாகும். 

அடுத்து உணவுகள் செரிமானமாகாததால் உணவிலிருந்து உடல் பெறக்கூடிய ஊட்டச்சத்துகள் கிடைக்காமல் இருக்கும். அதனால் போதிய 👉ஊட்டச்சத்தின்றி ஊட்டச்சத்து குறைபாடும் இணையும்.

நீருடன் வெளியேறும் வயிற்றுப்போக்கால் உடலில் இருக்கும் நீரின் அளவு மட்டும் வெளியேறாமல் நீரில் இருக்கும் நுண் சத்துகளும் வெளியேறி விடும். இவை தொடரும் போது உடல் வலுவிழக்க தொடங்கும் (When these continue the body will begin to weaken) . 👉கண்கள் நீரின்றியும் வாய் உலர்ந்தும் போக வாய்ப்புண்டு.

என்ன செய்யலாம்?

வயிற்றுபோக்கை உணர்ந்ததும் சுத்தமான நீரை காய்ச்சி வடிகட்டி ஒரு தம்ளர் எடுத்து அதில் கால் டீஸ்பூன் உப்பு மற்றும் அரை தம்ளர் சர்க்கரை சேர்த்து குடிக்கலாம். 

வயிற்றுப்போக்கு என்ன செய்யலாம்?

தொடர்ந்து ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை குடித்து வாருங்கள். வெள்ளை சர்க்கரை சேர்க்காத பழச்சாறுகள் எடுத்து கொள்ளலாம். 

எலக்ட்ரோலைட், உப்பு சர்க்கரை கலந்த எலுமிச் சைச்சாறு, ( கோடை காலமாக இருந்தால்) மோர், மருந்து வடிவில் கிடைக்கும் ஓஆர்எஸ் பாக்கெட்டை வாங்கி கொதிக்க வைத்து நீரில் கலந்து குடித்து வரலாம். 

இளநீர் குடிக்கலாம். வெளியேறும் நீரின் அளவுக்கேற்ப அதை ஈடு செய்யும் வகையில் தண்ணீர் ஆகாரம் எடுத்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள் மருத்துவர்கள்.

சற்று வயிற்றுப்போக்கு மட்டுப்பட்டவுடன் புழுங்கலரிசியை வாணலியில் வறுத்து மிக்ஸியில் மெல்லிய ரவையாக பொடித்து கஞ்சி காய்ச்சி குடிக்கலாம். 

ஒரு தம்ளர் கஞ்சிக்கு ஒரு டீஸ்பூன் வீதம் கலந்து கஞ்சி கெட்டிப்பதமாக இல்லாமல், தண்ணீர் போல் திரவமாக இருக்கும்படி காய்ச்சி குடிக்கலாம் (Drink distilled to be as liquid as water.). இக்காலத்தில் கடினமான உணவை தவிர்த்து, மென்மையான உணவுகளை எடுத்து கொள்வது நல்லது (It is better to take soft foods.).

முதல் சிகிச்சை

வயிற்றுப்போக்கு முதல் சிகிச்சை

வயிற்றுப்போக்கு தீவிரம் மற்றும் உடல் நிலை இரண்டையும் கவனிக்க வேண்டும். வயிற்றுப்போக்கு இருந்தாலும் (Despite the diarrhea) உடல் சோர்வு இல்லாமல் (Without physical fatigue), இருப்பவர்கள் பயப்படவேண்டியதில்லை. 
ஆண்களுக்கான குழந்தையின்மை பிரச்சனைகள் - ஆண்மைக் குறைபாடு !

ஆனால் வயிற்றுப்போக்கோடு வாய் உலர்ந்தும், தாகம் இருந்து கொண்டே இருப்பவர்களும் கவனிக்க வேண்டும். சிறுநீரின் நிறம் எப்படி இருக்கிறது என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். 

வயிற்றுப்போக்கால் தீவிரமாக பாதிக்கப்பட நேரிடும். எப்போதும் சுருண்டு படுக்க தோன்றும். சிறுநீர்👈 கழிப்பது குறையும். இவர்களுக்குத்தான் முதல் சிகிச்சை தேவைப்படும்.

தாமதமின்றி மருத்துவரை அணுகுங்கள்

தாமதமின்றி மருத்துவரை அணுகுங்கள்

வயிற்றுப்போக்கு உண்டாகும் போது 👉சிறுநீர் வெளியேறாமல் வாந்தி, காய்ச்சல், சோர்வு, கடுமையான வயிறு வலியுடன் கூடிய வயிற்றுப்போக்கு, 

வயிற்றுப்போக்கு கழியும் போது இரத்தம் வெளியேறுதல் இந்த அறிகுறிகள் வயிற்றுப்போக்கு உண்டான 48 மணி நேரத்துக்குப் பிறகும் தொடரும் போது மருத்துவரை உடனடியாக அணுகுவது நல்லது.

வெந்தய டீ குடிச்சா என்ன நன்மைகள் கிடைக்கும்?

இப்படி வயிற்றுப்போக்குடன் இரத்தம் சளி கலந்து வெளியேறுவது சீதபேதி என்று சொல்வார்கள்.

தவிர்க்க வேண்டியவை

வீட்டையும் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைக்க வேண்டும். சிறு குழந்தைகள் இருக்கும் வீட்டில் குழந்தைகள் கீழிருக் கும் பொருள்களை எடுத்து வாயில் வைக்காதவாறு அப்புறப்படுத்தி வைக்கவும். 

குழந்தைகளைக் கை கழுவிய பிறகே எதையும் சாப்பிட பழக்கவும். ஈ மொய்த்த உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். 

வயிற்றுப்போக்கு தவிர்க்க வேண்டியவை

வேக வைக்காத காய்கறிகள், அரைவேக்காடு உணவுகளை கண்டிப்பாக வயிற்றுபோக்கு இருக்கும் போது போது தவிர்க்க வேண்டும்.

சமைக்க சாப்பிட பயன்படுத்தும் பாத்திரங்கள் சுத்தமான நீரில்👈 நன்றாக கழுவிய பிறகு பயன்படுத்துவது நல்லது. தண்ணீரை அப்படியே குடிக்காமல் நன்றாக காய்ச்சி குடிக்க வேண்டும். குளிக்க பயன்படுத்தும் நீரும் சுத்தமானதாக இருக்க வேண்டும்.

4 கி.மீ நடை, 2 கி.மீ சைக்கிளிங்... 87 வயதில் துறையூர் தாத்தா !

வெளி இடங்களில் சுகாதாரமற்ற இடத்தில் எதையும் வாங்கி உண்ணக்கூடாது. திரவ ஆகாரமாக இருந்தாலும் வெளியில் குடிப்பதைத் தவிர்ப்பது நல்லது.

ஆரோக்கியத்தின் அடிப்படையே சுத்தத்திலிருந்து தான் தொடங்குகிறது என்னும் போது நம்மையும் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்துக் கொண்டால்  ஆரோக்கியமாக வாழலாம்.

கொஞ்சம் ஆங்கிலம்...
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)