உதவி ஆய்வாளரைக் கொலை செய்த காரணம் தெரியுமா?

0
ஜனவரி 8ஆம் தேதி காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் களியக்காவிளை சோதனை சாவடியில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப் பட்டார். 
உதவி ஆய்வாளரைக் கொலை செய்த காரணம்


சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது கொலை செய்தது தவுபிக், அப்துல் சமீம் என்பது தெரியவந்தது.

இருவரையும் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா காவல் துறையினர் தீவிரமாக தேடிவந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் கர்நாடக மாநிலம் உடுப்பி ரயில் நிலையத்தில் கைது செய்யப் பட்டனர். 

இவர்கள் இன்று அதிகாலை தவுபிக், அப்துல் சமீம் இருவரும் சாலை மார்க்க மாக களியக்காவிளை அழைத்து வரப்பட்டனர்.
பின்னர் பாதுகாப்பு காரணங்களுக் காக தக்கலை அழைத்துச் செல்லப் பட்டனர். அவர்களிடம் தக்கலையில் கியூ பிரிவு போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விசாரணையில் இருவரும் முக்கிய தகவல்களை வாக்குமூலமாக அளித்துள்ளனர். 


அதில் தாங்கள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும், தங்களது அமைப்பைச் சேர்ந்தவர் களை காவல் துறையினர் தொடர்ந்து கைது செய்து வருவதால்

அதற்கு பழி தீர்க்கும் விதமாக சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனை கொலை செய்தோம் என ஒத்துக் கொண்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லி, குஜராத் போன்ற இடங்களில் அசம்பாவித சம்பவங்களை நிகழ்த்த திட்ட மிட்டதும் விசாரணையில் தெரிய வந்தது. 
தங்களை கொன்று விடுங்கள் என இருவரும் போலீஸிடம் கேட்டுக் கொண்டதாகவும் தகவல் வெளியாகி யுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)