ஆட்டோவில் திரும்பி பார்த்த பெண்ணுக்கு அதிர்ச்சி - வாலிபர் செய்த கொடுமை !

0
சென்னையில் ஷேர் ஆட்டோவின் பயன்பாடு இன்றியமையாத ஒன்றாகி விட்டது. பள்ளி குழந்தைகள் முதல் வேலைக்கு செல்பவர்கள் வரை தினமும் ஷேர் ஆட்டோவில் பயணம் செய்பவர்களை ஏராளம். 
ஆட்டோவில் திரும்பி பார்த்த பெண்ணுக்கு அதிர்ச்சி


பேருந்திற் காக நீண்ட நேரம் காத்திருக்காமல் சிறிய செலவு மூலம் நினைத்த இடத்தில் இறங்கிக் கொள்ளும் வகையில் ஷேர் ஆட்டோ பெரும் சேவையாற்றி வருவதாகவே சென்னை வாசிகளின் கூற்று.

இந்த நிலையில் சென்னை அமைந்தகரையில் 23 வயதுதக்க இளம்பெண் ஒருவர் நேற்று ஷேர் ஆட்டோவில் ஏறினார். 

அவருடைய இருக்கைக்கு பின்னால் இரண்டு வாலிபர்கள் இருந்துள்ளனர். ஆட்டோ சிறுதூரம் சென்ற பின்னர் அவருடைய கூந்தலை யாரோ கடினமாக தொடுவதை போல் உணர்ந்துள்ளார்.
இதை யடுத்து திரும்பி பார்க்கும் போது அவருடைய கூந்தல் பாதியாய் வெட்டப் பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி யடைந்த அவர், கூச்சலிட்டு ஆட்டோவை நிறுத்தினார். 

இதனை அறிந்துகொண்ட ஆட்டோ டிரைவரும், மற்ற பயணிகளும் இளம் பெண்ணின் பின்னால் அமர்ந்திருந்த வாலிபர்களை விசாரித்த சோதனை நடத்தினர்.


அப்போது அதில் ஒரு வாலிபரின் பாக்கெட்டில் வெட்டப்பட்ட முடி இருந்ததை கண்டனர்.

பின்னர் இரு வாலிபர் களையும் அழைத்து சென்று அமைந்தகரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இளம் பெண்ணின் முடியை வெட்டியதற்கு முன் விரோதம் அல்லது பில்லி சூனியம் வைப்பதான காரணங்கள் ஏதேனும் உள்ளதா என்ற அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். 

ஆனால் வாலிபர்கள் தரப்பில் எந்த நோக்கமும் இல்லை, சும்மா வெட்டினோம் என்றுள்ளனர். 
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணும் புகார் அளிக்க மறுத்ததால் போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யாமல் எச்சரித்து அனுப்பினர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)