ஜாமியாவில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு - ஒருவர் காயம் !

புதுடெல்லி உள்ள ஜாமியா இஸ்லாமியா பல்கலைக் கழகப் பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.
ஜாமியாவில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு


இந்த போராட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள், பொது மக்கள் என பலர் கலந்து கொண்டு குடிரியுரிமை திருத்தச் சட்டம்,

தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு எதிராக கடந்த சில போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஜாமியாவில் இன்று போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த இடத்திற்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் அங்கு கூடியிருந்த போராட்டக் காரர்கள் மீது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார்.

இதனால் அதிர்ச்சி யடைந்த போராட்டக் காரர்கள் அலறிடித்துக் கொண்டு ஒடினர். அந்த மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஜாமியா பல்கலைக் கழக மாணவர் ஒருவர் காயமடைந்தார்.
இதை யடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும், காயமடைந்த நபரை மீட்டு அருகில் உள்ள மருத்துவ மனையில் சிகிச்சைக் காக அனுமதித்தனர்.

சிஏஏ போராட்டத்தின் போது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் டெல்லி ஜாமியா பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
Tags:
Privacy and cookie settings