அத்தை குடும்பத்தை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய கொடூரன் !

இந்தியாவில் உள்ள ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் இருக்கும் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் இருக்கும் கடியம் துல்லா கிராமத்தை சார்ந்தவர் ஸ்ரீனிவாஸ். 
குடும்பத்தை பெட்ரோல் ஊற்றி கொளுத்தியவன்


இவர் இதே பகுதியில் இருக்கும் தனது அத்தை சத்தியவதி என்பவரின் மகளை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். 

மேலும், கடந்த 6 மாதமாக தங்களின் மகளிர் திருமணம் செய்து கொடுக்க கூறி அத்தையிடம் முறையிட்டு வந்துள்ளார்.

ஸ்ரீனிவாஷின் நடவடிக்கை பிடிக்காத சத்தியவதி, தனது மகளுக்கு மற்றொரு வரன் பார்த்து திருமணம் செய்து வைத்துள்ளார். 

இதனால் அத்தையின் குடும்பத்தினர் மீது கடுமையான ஆத்திரத்தில் ஸ்ரீனிவாஸ் இருந்து வந்துள்ளார். இதனையடுத்து தனது அத்தை குடும்பத்தி னரை பழிதீர்க்க திட்ட மிட்டுள்ளார்.

இந்த நேரத்தில், கடந்த நான்கு நாட்களுக்கு முன்னதாக ஸ்ரீனிவாஸ் சத்தியவதி யின் இல்லத்திற்கு சென்று பெண் கேட்டு தகராறு செய்யவே, இந்த தகராறில் ஸ்ரீனிவாஸ் அவரது அத்தை சத்தியவதியை தாக்கி யுள்ளார். 
மேலும், அவரது கணவர் ராஜ முந்திரியையும் தாக்கி யுள்ளார். இவனது தொந்தரவு தாங்க இயலாத சத்தியவதி அங்குல காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, 

இது தொடர்பான புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு ஸ்ரீநிவாஸை எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர். 

இதனால் கடுமையான ஆத்திரத்துக்கு ஸ்ரீனிவாஸ் உள்ளாகி யுள்ளார். இதனை யடுத்து நேற்றிரவு சுமார் ஒரு மணியளவில் அங்குள்ள பெட்ரோல் நிலையத்தில் பெட்ரோல் வாங்கி விட்டு, சத்யவதியின் இல்லத்திற்கு சென்று நோட்ட மிட்டுள்ளார். 
பெட்ரோல் ஊற்றிய கொடூரன்


இந்த நேரத்தில், வீட்டில் அனைவரும் உள்புறமாக தாளிட்டு உறங்கிக் கொண்டு இருந்துள்ளனர்.

பின்னர் வீட்டின் வெளித்தாழை கொடூரன் இட்டு பெட்ரோல் ஊற்றி கொளுத்தி யுள்ளான்.

வீடு மளமளவென தீப்பற்றி எரிந்த நிலையில், வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் அலறவே,

அதிர்ச்சி யடைந்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு படை யினருக்கு தகவல் தெரிவித்து, தங்களால் இயன்றதை செய்துள்ளனர். 

இந்த கொடூர சம்பவத்தில் சத்தியவதி யின் 18 வயது மகன் ராமு மற்றும் 5 வயது சிறுமி விஜயலட்சுமி ஆகியோர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந் துள்ளனர்.
மேலும், சத்தியவதி, அவரது சகோதரி துர்கா மற்றும் அவரது மகள்கள் ஆகியோரும் ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது. மேலும், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறை வாக இருக்கும் ஸ்ரீனிவாசனை தேடி வருகின்றனர்.
Tags:
Privacy and cookie settings