மூலநோயின் பற்றிய விளக்கமும், காரணமும்?

மூலநோய் ஏற்படுவதற்கு காரணமும் அதை பற்றிய விளக்கமும் அதில் எண்டோஸ்கோபி சிகிச்சையைப் பற்றிய கேள்வி களுக்கு கோவை என்.ஜி. மருத்துவ மனையின்


நிறுவனர் மற்றும் லேபராஸ்கோபி மற்றும் எண்டோஸ்கோபி சிகிச்சை நிபுணர் டாக்டர். மனோகரன் M.S., FAIS.,FICS.,FIAGES., பதில் அளிக் கிறார்.

மூல நோய் என்றால் என்ன? மூல நோய்க்கு காரணம் என்ன? அதற்கான சிகிச்சை முறைகள் என்ன?

மூலநோய் என்பது மலக் குடலிலுள்ள ரத்த நாளங்களில் ஏற்படும் வீக்க மாகும். மூலநோய் ஏற்படுவதற்கு ஆசன வாயின் நரம்பு களில் ஏற்படக் கூடிய அழுத்தம், குழந்தை பிறப்பு, நாள்பட்ட மலச் சிக்கல், அதிகப் படியான உடல் பருமன், வயிற்றுப் போக்கு, 


மிக கனமான பாரத்தை தூக்குதல், நீண்ட நேரம் நிற்கும் அல்லது அமரும் சூழ்நிலை, குடும்ப வரலாறு மற்றும் துரித உணவு போன்றவை காரணங் களாகும். மூல நோயை அறுவை சிகிச்சை, பேண்டிங் போடுதல் மற்றும் ஸ்டாப்ளர் சிகிச்சை போன்ற சிகிச்சை களால் சரி செய்யலாம்.

எந்த மாதிரியான உணவு உட் கொண்டால் மூலநோய் தவிர்க்கலாம்?

நார்சத்து மிகுந்த உணவை உட்கொள்வதால் எந்த பிரச்னையு மில்லாமல் எளிதாக மலம் வெளி யேறும். துரித உணவு மற்றும் தண்ணீர் சரியாக அருந்தாம லிருக்கும் போது மலம் இறுகி வெளி வருவதற்கு சிரமம் ஏற்படும்.

எனவே, கடின மாக முயற்சி செய்து மலத்தை வெளி யேற்றும் போது மூலம் வெளியே வர நேரிடும்.

மூல நோயின் அறிகுறிகள் யாவை?

ஆசன வாயில் அரிப்பு, அசெளகரியம், ரத்தப் போக்கு ஆகியவை ஆகும். சில சமயங்களில் மலம் சளி போன்று காணப்படும். எனது கர்ப்ப காலத்தின் போது பைல்ஸ் பிரச்னை யால் மலம் கழிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

இதனால் அறுவை சிகிச்சை செய்தேன். ஒருமுறை செய்தால் மீண்டும் செய்ய வேண்டி வருமா?


ஒரு முறை அறுவை சிகிச்சை செய்து கொண்டால் மீண்டும் செய்ய வேண்டிய அவசிய மில்லை. பொதுவாக ஆரம்ப நிலை யிலுள்ள மூலத்திற்கு அறுவை சிகிச்சை தேவை யில்லை. 

சிறிது அதிகமாகும் போது பேண்டிங் முறையில் சரி செய்யலாம். மிகவும் அதிக மான நிலையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். மீண்டும் வராமல் தடுக்க சரியான உணவு முறையை கடை பிடிக்க வேண்டும்.

எனக்கு வெளிமூலம் உள்ளது. இது வரை எந்த சிகிச்சை க்கும் செல்ல வில்லை. மலம் கழிப்பதிலும் சிக்கல் இல்லை. நான் கொலொ னோஸ்கோபி பரிசோதனை செய்ய வேண்டுமா?


வெளிமூலம் என்பது உள்ளிருந்து வெளியே தள்ளப் படுவதாகும். ஆகவே, உள்ளே பெருங்குடல் பகுதியில் ஏதேனும் பிரச்சினை இருக்கக் கூடும்.

எனவே, கொலொ னோஸ்கோபி பரிசோதனை செய்து பார்ப்பது நல்லது. மூலம் உள்ளவர் களுக்கு கொலொ னோஸ்கோபி கருவி யால் சிகிச்சை மேற்கொள்ள முடியுமா?
மூல நோய் வராமல் பாதுகாத்துக் கொள்வது? 
பாதம் மரத்துபோனால் எந்த நோயின் அறிகுறி? 
ஆமெனில் அதனால் நோயாளிக்கு அப்பகுதி யில் காயம் ஏற்படுமா?

மூலம் உள்ளவர் களுக்கு கொலொ னோஸ்கோபி பரிசோதனை மூலம் எந்தவித காயமும் ஏற்படாமல் உறுதி செய்யப் பட்டு அறுவை சிகிச்சை செய்யப் படும்.

கொலொ னோஸ்கோபி பரிசோதனை க்கு வயது வரம்பு உள்ளதா?

காலொ னோஸ்கோபி பரிசோதனை க்கு வயது வரம்பு இல்லை. பெருங்குடல் பகுதியில் பிரச்சினை ஏதேனு மிருந்தால் எந்த வயதினரும் கொலொ னோஸ்கோபி பரிசோதனை மேற்கொள் ளலாம்.
Tags:
Privacy and cookie settings