நாச்சியார்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்ற 2 வாலிபர்களை தாக்கி ஷூ காலால் எஸ்ஐ எட்டி உதைத்தார்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த வண்டு வாஞ்சேரியை சேர்ந்த கிருஷ்ண மூர்த்தி மகன் ராஜேஷ் (30). விவசாயி. இவரது நண்பர் வீரமணி (36).
ஆட்டோ டிரைவர். நேற்று முன்தினம் வீரமணிக்கும், வண்டு வாஞ்சேரியை சேர்ந்த மற்றொரு ஆட்டோ டிரைவரான தினேஷ் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது.
இது குறித்து புகார் அளிக்க நாச்சியார்கோவில் காவல் நிலையத்துக்கு நண்பர் ராஜேஷை அழைத்து கொண்டு வீரமணி சென்றார்.
அப்போது அங்கு பணியில் இருந்த போலீஸ் எஸ்ஐ கபீர்தாஸ் என்பவர் இருவரையும் சாதியின் பெயரை கேட்டு தகாத வார்த்தை களால் திட்டியதாக கூறப்படுகிறது.
மேலும் தான் அணிந்திருந்த ஷூ காலால் இருவரையும் எட்டி உதைத்துள்ளார். இதனால் ராஜேசுக்கும், வீரமணிக்கும் வாந்தி ஏற்பட்டது.
இதில் படுகாயமடைந்த இருவரும் கும்பகோணம் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டனர். இது குறித்து, புறக்காவல் நிலையத்தில் இருவரும் புகார் செய்தனர்.
அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து எஸ்.ஐ. கபீர்தாஸ் கூறுகையில், ராஜேசும், வீரமணியும் சொல்வது தவறானது.
சாதி மோதலை ஏற்படுத்த முயன்ற இருவரையும் கண்டித்தேன். இதனால் என் மீது வேண்டும் என்றே பழிசுமத்து கின்றனர் என்றார்.
Thanks for Your Comments