கோவை மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மனித - மிருக மோதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
குறிப்பாக, ஆனைகட்டி, வால்பாறை, மதுக்கரை ஆகிய பகுதிகளில் யானைகள் காட்டிலிருந்து மனிதர்களின் வாழ்விட த்திற்குள் வருவதால்
உயிரிழப் புகளும், விபத்துகளும், விவசாய நிலங்களில் சேதமும் ஏற்படுகின்றன.
இந்த ஆண்டு 'சின்னத் தம்பி' என்ற பெயர் சூட்டப்பட்ட யானை மிகுந்த சிரமங்களுக்கு பின்னர் வனத்துறையால் பிடிக்கப்பட்டு தற்போது கும்கி யானையாக மாற்ற பயிற்சி பெற்று வருகிறது.
இதனைத் தொடர்ந்து, கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே கடந்த மூன்று மாதங்களாக சுற்றி வந்த காட்டு யானையை வனத்துறை இன்று மயக்க ஊசி செலுத்தி பிடித்துள்ளனர்.
குடியிருப்பு பகுதிகளில் இருந்த அரிசியை விரும்பி சாப்பிட்டதால் இந்த யானைக்கு 'அரிசி ராஜா' என ஊர் மக்கள் பெயர் சூட்டியிருந்தனர்.
இந்த யானை தாக்குவதால் அப்பகுதியில் தொடர்ந்து உயிரிழப்புகள் ஏற்படுவதாக பொது மக்கள் போராட்டம் நடத்தினர்.
இதனை யடுத்து, ஞாயிற்று கிழமை முதல் யானையைப் பிடிக்க வனத்துறை யினர் தீவிரமாக ஈடுபட்டனர்.
காட்டு யானையைப் பிடிக்க டாப் சிலிப்பில் இருந்து 2 கும்கி யானைகள் அர்த்தநாரி பாளையம் பகுதிக்கு லாரிகள் மூலம் ஞாயிற்றுக் கிழமை வரவழைக்கப் பட்டன.
யானையைப் பிடிக்க மயக்க ஊசி செலுத்த மருத்துவா் குழுவினரும் அர்த்தநாரி பாளையதில் முகாமிட்ட ருந்தனர்.
முதற்கட்டமாக, காட்டு யானை எங்குள்ளது, மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதா என்பவை குறித்து ஆய்வு செய்யப் பட்டது.
காட்டு யானையைப் பிடிக்கும் பகுதிக்கு பொது மக்கள் யாரும் வரவேண்டாம் என்றும், பாதுகாப்பாக இருக்கும் படியும் வனத் துறையினா் சார்பில் அறிவுறுத்தப் பட்டது.
அப்பகுதியில் மலைக் குன்றுகள், பள்ளங்கள் போன்றவை அதிக அளவில் இருப்பதால் காட்டு யானையைப் பிடிக்கும் பணி சவாலாக இருந்தது.
மேலும், மழை பெய்ததாலும் யானையை பிடிப்பதில் காலதாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில், சுமார் மூன்று நாட்கள் முயற்சிக்கு பிறகு இன்று வியாழக்கிழமை அதிகாலை யானை இருக்குமிடம் கண்டு பிடிக்கப்பட்டு, மயக்க ஊசி செலுத்தப் பட்டது.
பின்னர், கும்கி யானைகளின் உதவியோடு வாகனத்தில் ஏற்றப்பட்ட “அரிசி ராஜா” யானை வால்பாறை யில் உள்ள
முகாமிற்கு கொண்டு செல்லப் பட்டது யானை பிடிக்கப் பட்டதை அடுத்து ஊர் மக்களும், விவசாயிகளும் நிம்மதி அடைந்தாலும்,
தொடர்ந்து இது போன்று ஆண் யானைகள் இடம்மாற்றப் படுவதால் யானைகளின் இனப்பெருக்கம் பாதிக்கப்படும் என்கின்றனர் வன உயிரின ஆர்வலர்கள்.
இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய ஓசை அமைப்பைச் சேர்ந்த காளிதாசன், ''வளர்ந்த யானைகள் ஒரு நாளுக்கு சுமார் 250 கிலோ அளவிற்கு உணவு உட்கொள்ளும்,
150 லிட்டர் வரை தண்ணீர் குடிக்கும். எனவே, உணவைத் தேடி பல மைல் தூரம் இவை நடந்து செல்லும்.
காட்டில் பெருகிவரும் களைச் செடிகளின் தாக்கத்தாலும், வாழ்விடங்கள் சுருக்குபப ட்டதாலும், வாழ்விடங் களை இணைக்கும் வலசைப் பாதைகள் அழிக்கப் பட்டதாலும்
உணவு தேடி விவசாய நிலங்களை யும், குடியிருப்பு களையும் நோக்கி விலங்குகள் வருகின்றன. அதனால் உயிர் சேதமும் பயிர் சேதமும் ஏற்படுகின்றன.
உயிர் சேதங்களையும், பயிர்கள் அழிக்கப் படுவதை தடுக்கவும் வனத்துறை யினர் யானைகளை பிடித்து முகாம் களுக்கு கொண்டு செல்கின்றனர்.''
''பொதுவாக, இவ்வாறு பிடிக்கப் படுபவை ஆண் யானை களாகவே உள்ளன.
சமீபத்திய கணக்கெடுப்பு களில் இந்தியா வில் உள்ள மொத்த யானைகளின் எண்ணிக்கை 28 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை இருப்பதாக கண்டறிய பட்டுள்ளது.
இவற்றில், ஆண் யானைகளின் எண்ணிக்கை வெறும் மூவாயிரம் மட்டுமே இருக்கும் என்று மதிப்பிடப் படுகிறது.
இது போன்று, தொடர்ந்து ஆண் யானைகள் காட்டி லிருந்து முகாம் களுக்கு கொண்டு செல்வது, யானைகளின் இனப்பெருக்க த்திற்கு பாதிப்பு களை ஏற்படுத்தும்.
எனவே, யானைகள் பாதுகாப்பிற் கான திட்டங்கள் வகுக்கப்பட்டு, முறையான நிதியை ஒதுக்கி மனித மிருக மோதல் களை தடுத்து நிறுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார். பிபிசி செய்தி...
Thanks for Your Comments