சமூக வலைத்தளத்தில் ஆபாச படங்களை வெளியிட்ட இளைஞர் !

0
சென்னையில் சமூக வலைத் தளத்தில் பெண்களின் ஆபாச புகைப் படங்களை வெளியிட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
ஆபாச படங்களை வெளியிட்ட இளைஞர்


சென்னை அடுத்த அம்பத்தூரை சேர்ந்த காயஸ் முகமது என்பவர் பெண்களின் ஆபாச படங்களை பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்து வருவதாக அவரின் தோழி ஒருவர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். 

இதை யடுத்து காயஸ் முகமதை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், வீதிகளில், பேருந்துகளில், ரயில்களில் பெண்கள் செல்லும் போது, 

அவர்களுக்கு தெரியாமல் அவர்களை ஆபாசமாக படம் எடுத்து பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்து வந்ததாக தெரிவித் துள்ளார்.

ஃபேஸ்புக்கில் போடப்படும் பெண்களின் முகத்தை மறைத்து, மார்பிங் செய்தும் வெளியிட்டு வந்ததால், தம் மீது யாரும் புகார் தெரிவிக்க வில்லை என்றும் அவர் கூறி யுள்ளார். 

காயஸ் முகமது, உடன் வேலை பார்க்கும் பெண்கள் மட்டும் அல்லாது, குடும்ப உறுப்பினர்கள், நண்பர் களையும் ஆபாசமாக படம் எடுத்து பதிவேற்றம் செய்ததும் விசாரணை யில் தெரிய வந்துள்ளது. 

கைது செய்யப்பட்ட காயஸ் அகமதை போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)