இருசக்கர வாகனம் மீது தடியை வீசிய உதவி ஆய்வாளர் !

0
பொள்ளாச்சி அருகே நிற்காமல் சென்ற இருசக்கர வாகனம் மீது உதவி ஆய்வாளர் தடியை வீசியதால், இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர்.
வாகனம் மீது தடியை வீசிய ஆய்வாளர்


கோவை மாவட்டம் பொள்ளாச்சி சங்கம் பாளையம் பகுதியில் சிறப்பு உதவி ஆய்வாளர் சம்பந்தம், வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். 

அப்போது ஒரு இருசக்கர வாகனத்தில் மூவர் வந்ததை பார்த்த உதவி ஆய்வாளர், அந்த வாகனத்தை நிறுத்த முயன்றுள்ளார். 

ஆனால் அவர்கள் நிற்காமல் சென்றதால், உதவி ஆய்வாளர் தாம் வைத்திருந்த தடியை வாகனத்தின் மீது வீசியுள்ளார்.

இதனால் இருசக்கர வாகனத்தில் சென்ற மூன்று இளைஞர் களும் நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர்.

இதையடுத்து அவர்களை பொது மக்கள் மீட்டு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே காவல் துறையின் அத்துமீறலை கண்டித்து பொது மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையை அடுத்து கோட்டூர் உதவி ஆய்வாளர் சம்பந்தத்தை பணியிடை நீக்கம் செய்து கோவை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சுஜித்குமார் உத்தர விட்டார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)