பெற்றோரைக் கொன்று விட்டேன் - போலீஸை அதிர வைத்த திருச்சி வாலிபர் !

0
திருச்சி, பொன்மலை கணேசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் திருச்சி மாநகராட்சியில் துப்புரவுப் பணியாளராக பணியாற்று கிறார். இவரின் மனைவி பாப்பாத்தி பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வந்தார். 
பெற்றோரைக் கொன்று விட்டேன்


இவர்களின் மகன் பிரகாஷ் என்பவருக்கும், ஒட்டன் சத்திரம் பகுதியைச் சேர்ந்த வெண்ணிலா வுக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

திருமணத் துக்குப் பிறகு, கணவன் மனைவிக்குள் சுமுகமான உறவு இருந்தாலும், மாமியார் - மருமகளுக்கும் இடையே பிரச்னைகள் இருந்ததாம். 

இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. தகராறில், பாப்பாத்தி மருமகள் வந்த நேரம் சரியில்லை எனக் கூறி வந்ததாகக் கூறப்படு கிறது. 

தொடர்ந்து குடும்பத்தில் தகராறு ஏற்படவே, மனைவி வெண்ணிலாவை அழைத்துச் சென்று, மாமனார் வீட்டில் விட்டு விட்ட பிரகாஷ் நேற்று அதிகாலை வீட்டுக்கு வந்துள்ளார்.

கோபத்தில் இருந்த அவர், தூங்கிக் கொண்டிருந்த தாய் பாப்பாத்தியை எழுப்பி, இனி தகராறு செய்ய ஆளில்லை நிம்மதி யாகத் தூங்கு எனக் கூற, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. 


வாக்குவாதம் முற்ற கோபத்தின் உச்சிக்குச் சென்ற பிரகாஷ், வீட்டுக்குள் சென்று, உடற்பயிற்சி செய்யும் கருவியை எடுத்து வந்து அடிக்கப் பாய்ந்துள்ளார். 

உடனே பாப்பாத்தி பாத்ரூமில் பதுங்கிக் கொள்ள பிரகாஷை தடுக்கப் போன தந்தை ஆறுமுகத் துக்கும் அடி விழுந்துள்ளது.

தலையில் படுகாய மடைந்த ஆறுமுகம், ரத்த வெள்ளத்தில் சரிந்தார். 

கணவரின் அலறல் சத்தம் கேட்டு, ``கொலைகாரப் பாவி, பெற்ற அப்பனையே இப்படி செஞ்சுட்டியே!" எனக் கதறியபடி பாப்பாத்தி ஓடிவர அடுத்த நொடி, தாயையும் பிரகாஷ் தாக்கியுள்ளார். 

அதில் பாப்பாத்தியும் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். அதை யடுத்து தான் பிரகாஷ், பைக்கை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.

அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், ரத்த வெள்ளத்தில் கிடந்த பாப்பாத்தி மற்றும் ஆறுமுகத்தை மீட்டு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், பாப்பாத்தி வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

பிரகாஷின் தந்தை ஆறுமுகம், திருச்சி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ள நிலையில், பாப்பாத்தியின் உடலைக் கைப்பற்றிய பொன்மலை போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.
கொலைகாரப் பாவி


இதற்கிடையே, பொன்மலை பகுதியில் பைக் ஒன்று அதிவேக மாகச் சென்றுள்ளது.

அப்பகுதியில், ரோந்துப் பணியில் இருந்த பொன்மலை போலீஸார், பைக்கை மடக்கிப் பிடித்தனர். 

அது கொலை செய்து விட்டு தப்பித்த பிரகாஷ் என்பது தெரிய வந்துள்ளது.

விசாரித்த போது, ``பெற்றோரை கொலை செய்துட்டேன்” என்று கூலாகச் சொல்லி போலீஸாரையே அதிர வைத்தாராம்.

போலீஸார் விசாரணையில், பிரகாஷுக்கு எவ்வித கெட்டப் பழக்கமும் கிடையாது. மனைவிக்கும் தாயிக்குமான தகராறில் கடந்த 15 நாள்களாக யாரிடமும் பேசாமல் அமைதியாக இருந்தாராம். 

இந்த நிலையில், மனைவியை அவரது பெற்றோர் வீட்டில் விட்டு விட்டு வந்து, இப்படி நடந்து கொண்டது தெரிய வந்துள்ளது.

மனைவியிடம் ஏற்பட்ட தகராறில் ஆத்திர மடைந்த மகன், தாய் மற்றும் தந்தை மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியதில் தாய் கொல்லப்பட்ட சம்பவம் திருச்சி பொன்மலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)