கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த இளம் பெண் - செல்ஃபி மோகம் !

0
சென்னை ஆவடி அருகே செல்ஃபி மோகத்தால் கிணற்றில் தவறி விழுந்து இளம் பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
கிணற்றில் விழுந்து உயிரிழந்த பெண்


ஆவடி மிட்டனமல்லி கண்டிகை பகுதியில் கடந்த வாரம் மெர்சி - அப்புவிற்கு நிச்சயதார்த்தம் ஆனது.

இருவரும் இன்று செல்ஃபி எடுக்க முயன்றனர். 

அப்போது எதிர் பாரத விதமாக இருவரும் விவசாய கிணற்றில் தவறி விழுந்ததில், நீரில் மூழ்கி மெர்சி பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர், உயிருக்கு போராடிய அப்புவை மீட்டு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். 

மெர்சியின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனை க்கு அனுப்பி வைக்கப் பட்டது. செல்ஃபி மோகத்தால் நிச்சயமான இளம் பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)