மனைவியை பள்ளத்தில் தள்ளி கொன்ற கணவர் !

0
கன்னியாகுமரி சிலுவை நகர் பகுதியைச் சேர்ந்த மரிய டல்லஸ், அவரது மனைவி அருள் சுனிதா இருவரும், நடமாடும் வண்டியில் பேன்ஸி பொருட்களை விற்பனை செய்து வந்தனர். 
மனைவியை பள்ளத்தில் தள்ளி கொன்ற கணவர்




திருமணமாகி 17 ஆண்டுகள் ஆன இவர்களுக்கு, ஒரு மகளும், மகனும் உள்ளனர். குடும்பப் பிரச்சனை காரணமாக கணவன் - மனைவி இடையே, அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. 
சனிக்கிழமை ஏற்பட்ட தகராறில், மனைவியை மரிய டல்லஸ் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. 

இதில் வலி தாங்க முடியாமல் ஓடிய சுனிதாவை, துரத்திச் சென்ற மரிய டல்லஸ், வீட்டின் முன்பிருந்த 50 அடி பள்ளத்தில் தள்ளினார்.




பின்னர் அவர் மீது கல்லைப் போட்டதாக தெரிகிறது. இதில் படுகாய மடைந்த சுனிதா, மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
சுனிதாவின் தாயார் ரீத்தம்மாள் அளித்த புகாரின் பேரில், மரிய டல்லசை கைது செய்த போலீஸார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings