நடக்கும் மனிதனே நீண்ட நாள் வாழ்வான் !





நடக்கும் மனிதனே நீண்ட நாள் வாழ்வான் !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0
நீண்ட தூரம் நடப்பவன் நெடுநாள் வாழ்வான் என்று ஒரு பழமொழி உண்டு. இன்றைய மனிதன் உடையைக் கவனிக்கும் அளவிற்கு நடையைக் கவனிப்ப தில்லை. 
நடக்கும் மனிதனே நீண்ட நாள் வாழ்வான்
நடைகளில் அன்ன நடை, கம்பீர நடை, பொடி நடை, ராஜ நடை, ஒய்யார நடை, வேக நடை, மித நடை என்று பல நடைமுறைகள் இருந்தாலும் நடைமுறையில் காணாமல் போய்க் கொண்டிருக் கிறது.

நடைக்கும், உடைக்கும் எப்போதுமே ஒரு தொடர்பு இருப்பதால் தான் எல்லோருமே நடையுடை யாக இருப்பதையே விரும்புகிறோம். 

ஏனெனில் நடக்கிற மனிதனே வெளியே புறப்படும் போது உடை உடுத்த வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. 

பழங்காலத்தில் நடப்பதனால் உடலுக்கும் மனதிற்கும் ஏற்படும் நன்மைகளை உணர்ந்தே பாதயாத்திரை செய்தார்கள். 

யாத்திரை செய்யும் பாதங்களே நல்ல நித்திரையை கண்களுக்கு கொடுப்பதோடு மாத்திரை களையும் மறக்கச் செய்கிறது. 

இறை நினைவோடு அவன் எடுத்து வைத்த அடிகள் தான் மன நிறைவோடு நலமுடன் வாழச்செய்தது. 

குழந்தையில் நடை வண்டியில் நடக்கப் பழகிய நாம் காலங்கள் கடக்க கடக்க நடக்கவே மறந்து போனோம். 
வீழ்ந்து எழும் குழந்தைகளே வீழ்ச்சிக்குப் பிறகும் வெற்றி என்பதனை உணர்ந்து கொள்கிறது. இன்று நடை வண்டிகளையும் நாகரிகம் ஆட்கொண் டதால் மழலைகள் நடக்கு முன்னே பறக்க முனைகிறது. 

அல்லும் பகலும் ஆசனத்திலேயே அமர்ந்து வேலை செய்பவர்கள் யோக ஆசனங்களை செய்யத் தொடங்கி விட்டார்கள். 

அசையாமல் அமர்ந்தே பணி செய்பவர்கள் நடந்தே பிணி போக்க முயன்று கொண்டிருக்கி றார்கள். உழவனுக்கும் தொழிலாளி க்கும் நடைக்குப் பயிற்சி தேவையில்லை. 

அவன் அசைவுகள் அத்துணையும் ஆரோக்கிய பயிற்சிகள் தான். 

வேலைகளை மூளைகளால் மட்டுமே செய்வோரும் உடல் அசைவின்றி உழைப்போரும் நாளெல்லாம் நாற்காலியில் அமர்ந்து கொண்டு 

சொந்தக் காலிலே நிற்கிறேன் என்று சொல்வோரும் உடல் உழைப்புக்கு நீண்ட ஓய்வு கொடுப்போரும் நடைப் பயிற்சி நாள் தோறும் செய்வது சிறந்தது. 
உடல் உழைப்பு இல்லாமல் போனால்
காரணம் உடல் உழைப்பு இல்லாமல் போனால் நோய்கள் நம் உள்ளுறுப்புக் களை உறுதியாகப் பிடித்துக் கொள்ளும். எடுத்து வைக்கும் முதல் அடியே ஆயிரம் மைல் பயணத்திற்கும் அஸ்திவார மிடுகிறது. 

நடந்து கொண்டே இருப்பதால் எறும்பின் கால்களும் இரும்பாக மாறும். மான்களின் கால்கள் மலையையும் தாண்டும். 

நண்டுக் கால்களும் தண்ணீரிலும் தரையிலும் எதிர் நீச்சல் போடும். குதிரையின் கால்கள் பல குதிரை சக்திகளை வெளிப்படுத்தும்.

சிலந்தியின் கால்களும் சிற்பங்களை செதுக்கும். ஆனால் மனிதக் கால்கள் மட்டும் மறத்துப் போகலாமா?. நடக்க மறந்தும் போகலாமா? 

உலக சுகாதார நிறுவனம் வாரம் 5 நாட்கள் நாளொன்றுக்கு 30 நிமிடங்கள் வீதம் 150 நிமிடங்கள் நடந்தாலே நல்ல பலனைப் பெறலாம் என்று பரிந்துரைக் கிறது. 

உடற் பயிற்சியின் அரசன் நடைப் பயிற்சி தான். எளிமை யானதும் எந்த செலவு மில்லாதது. 

அதிகாலை எழும் பறவையே அதிக தூரம் பறந்து செல்லுமாம். நடைப் பயிற்சிக்கு காலை 5 மணி முதல் 7 மணி வரையிலும் மாலை 5 லிருந்து 6.30 மணி வரை உகந்த நேரம்.

நிசப்தமான சூழலும் பறவைகளின் பரவச ஒலியுடனும் இயற்கை காற்றை இன்பமாய் சுவாசித்து நடையைத் தொடங்குவது நாட்களுக்கே நல்ல தொடக்க  மாகும். 
தொற்று நோய் தாக்காதவாறு பல காலணிகளை அணிந்து கொண்டு நடந்தாலும் வெறுங்கால் களால் நடக்கும் நடைப் பயிற்சியே நல்ல பலன்களை தருவதாக ஆய்வுகள் கூறுகிறது. 
கால்கள் மண்ணில் படும் பொழுது பூமியிலுள்ள எலக்ட்ரான் களுக்கும் உடம்பிற்கும் உறவுப் பாலம் ஏற்பட்டும் மண்ணின் சக்தி மனித சக்தியை உயரத்துகிறது.

எனவேதான் மண்ணிற்கும் மனிதனுக்கும் சம்பந்தம் உண்டு என்று உணர்த்தவே மசக்கையி லும் மண்ணைத் திண்கிறார்கள் பெண் என்று கூறுவதுண்டு. 

டைப்-2 வகை சர்க்கரை நோயாளிகள் நடைப் பயிற்சியின் போது கால்களில் காயங்கள் ஏற்படாதவாறு தடுக்கவும் 

நகரங்களில் உள்ளவர்களை தொற்று நோய் தாக்காதவாறு காக்கவும் எளிய பாதுகாப்பான காலணிகளை அணிந்து கொள்வது தவிர்க்க முடியாதது.

சகோதரர்கள் இருவர் ஒருஜோடி செருப்பு வாங்கினார்கள். அண்ணன் பகலிலும் தம்பி இரவிலும் அணிந்து கொள்வதாகவும் பேச்சு. செருப்பு தேய்ந்தும் மறுஜோடி செருப்பு வாங்க அண்ணன் தம்பியிடம் கேட்டான். 
இரவு முழுவதும் நடந்து நடந்தே என் தூக்கம் தான் கெட்டுப் போனது என்றான் தம்பி. செருப்பை மட்டும் தேய்க்கும் நடைகள் பயனற்றது. 

நடக்கும் பொழுது குதிகால் முதலில் தரையில் படும் படியும் பிறகு முன் பாததசைகள் படும் படியும் நடக்க பழகிக் கொள்வது சிறந்தது. 

நன்கு கைகளை வீசி நிமிர்ந்து நடத்தல் அவசியம். கை வீசம்மா கைவீசு கடைக்குப் போறேன் கைவீசு என்ற குழந்தைப் பாடல் நடைப் பயிற்சியையே குறிக்கிறது. ‘ஓடி விளையாடு பாப்பா’ என்றான் பாரதி. 

இன்று வீடியோ கேம்ஸ் விளையாடு பாப்பா வீட்டை விட்டு வெளியே விளையாடாதே பாப்பா என்று நாம் மாற்றி விட்டதால் குழந்தைகளை யும் நடை பயிற்சியில் பழக்குவது நல்லது.

பள்ளிகளில் விளையாட்டு முறைகள் குழந்தைகளின் உடல் உழைப்பினை மேம்படுத்தும் வகைளில் இருப்பது அத்தியாவசிய மாகிறது. உடல் எடையை குறைப்பதில் நடைப்பயிற்சி நல்ல பலனை தருகிறது. 

நொறுக்குத் தீனிகளையும் காபி டீயும் இடை யிடையயே சாப்பிட்டுக் கொண்டே நடப்பதனால் கலோரிசக்தி அதிகமாகும் தவிர குறையப் போவதில்லை. 
நடக்கும் மனிதனே நீண்ட நாள் வாழ்வான் !
உடல் எடை நடைப் பயிற்சிக்குப் பிறகு குறைந்தி ருக்கிறதா என்று நாயுடன் நடைப்பயிற்சி செல்பவரிடம் கேட்டார்கள். 2 கிலோ குறைந்தி ருக்கிறது எனக்கல்ல என் நாய்க்கு என்று பதில் வந்தது.

அரைமணி நேர நடை 300 கலோரி சக்திகளை எரித்து எடையை குறைக்கிறது. உயர் ரத்த அழுத்தம் சீர்படவும் இரத்த ஓட்டம் சீராக இருக்கவும் நடைபயிற்சி உதவுகிறது. 

தீமை விளைவிக்கும் எல்.டி.எல் கொலஸ்ட்ரால் அளவை குறைத்து நன்மை விளைவிக்கும் எச்.டி.எல் கொலஸ்ட்ரால் ரத்தத்தில் அதிகரிக்கவும் நடை பயிற்சியே நன்மை புரிகிறது. 

உலக சுகாதார நிறுவனம் உலகெங்கும் இதய நோயினால் ஆண்டுக்கு 25 லட்சம் மக்கள் மரண மடைகிறார்கள் என்றும் இந்தியாவில் 100ல் 14 பேருக்கு தற்போது இதய நோய்கள் இருப்பதாகவும் கூறுகிறது.

இளமையிலேயே நடக்கத்தொடங்கி யவர்களின் இதயம் முதுமையிலும் நன்கு சுருங்கி விரிவதாகவும் இதயத் தசைகள் பலமுடன் செயல்படுவ தாகவும் ஆய்வுகள் கூறுகிறது. 

நுரையீரல் நன்கு விரிந்து பிராண சந்திகளின் பரிமாற்றம் நன்கு நடைபெற்று. கல்லீரல் கணையம் இதயம் செரிமான உறுப்புகள் நன்கு செயல்பட நடைபயிற்சி பயன்படுகிறது. 
மனிதனுக்கு மானத்தைப் போல் பராமரித்து பாதுகாக்கப்பட வேண்டியது செரிமானமும் தான். என்சைம்களை அதிகளவு உற்பத்தி செய்து 

உடம்பின் மெட்டபாலிச செயல் பாடுகளை தூண்டி செரிமானத்தை சீராக்க நடைபயிற்சி முக்கிய பங்காற்றுகிறது.

இன்று சர்க்கரை நோயை விரட்ட அக்கறை உள்ளவர்கள் எல்லாம் நடை பயிற்சியை நங்கூரமாக வைத்திருக் கிறார்கள். சர்க்கரை எனும் நீரழிவு நோயால் இந்தியாவில் 50 பேர் இறக்கிறார்கள். 

உலகளவில் 51.1 கோடியாக இருக்கும் சர்க்கரை நோய் 2030-க்கும் 63.4 கோடியாக அதிகரிக்கும் என்றும் 

இந்தியாவில் சுமார் 1 லட்சம் குழந்தைகள் நீரழிவு நோயினால் பாதிக்கப் பட்டுள்ளனர் என்றும் இந்தியாவில் சுமார் 7 கோடி பேரும் சீனாவில் 11 கோடி பேரும் பாதிக்கப் பட்டிருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகிறது. 

டைப் 2 வகை நீரழிவு நோயாளிகள் நடைப் பயிற்சியால் நல்ல முன்னேற்றம் அடைகிறார்கள். 

கணையத்தில் உள்ள பீட்டா செல்கள் தூண்டப்பட்டு தடைப் பட்டிருக்கிற இன்சுலின் உற்பத்தியை அதிகப் படுத்தி சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க நடைபயிற்சி உதவுகிறது.
நடக்கும் மனிதனே நீண்ட நாள் வாழ்வான் !
புதிதாக நடைபயிற்சி செய்வோர் எடுத்தவுடன் அதிக தூரம் நடக்காமல் முதல்நாள் 25 நிமிடங்கள் குறைந்த தூரத்தை நிர்ணயித்து நடைபயிற்சி பழக்கப் பட்டவுடன் சிறிதுசிறிதாக தூரத்தை அதிகப் படுத்தலாம். 

இதயநோய் அடிக்கடி மயக்கம் மூச்சுத் திணறல் போன்ற அறிகுறி யுடையோர் மருத்துவரின் ஆலோசனை பெற்று நடைபயிற்சி செய்வது சிறந்தது. 

தொடர்ந்து நடை பயிற்சி செய்வோரின் தசைகள் எலும்புகள் நன்கு பலப்படுவ தால் மூட்டுவலி, முதுகுவலி பிரச்சினைகள் வராது. 

ரிஷிகளும், முனிவர்களும், ஞானிகளும் ஞானத்துடன் விளங்க அவர்களின் நடையும் காரணமாகும்.
நடை பயிற்சியால் ஞாபக சக்தியுடன் தொடர்புடைய மூளையின் கிப்போகாம்பஸ் பகுதி தூண்டப்பட்டு நல்ல ஞாபகசக்தி பெறப்படுகிறது. 

அமெரிக்காவில் மனநல மையங்களில் முதியோர்களின் மனஅழுத்தம் போக்க நடைபயிற்சி முக்கிய பயிற்சியாக அளிக்கப் படுகிறது. 
எடுத்து வைக்கும் அடியும் மனமும் ஒரே சிந்தையுடன் இருக்க வேண்டும். கைபேசியில் பேசிக் கொண்டும் நண்பருடன் உரையாடிக் கொண்டும் நடப்பதும் செல்லாத நடை பயிற்சியாகும். 

கால்கள் துரிதமாக செயல்பட தொடங்கினால் நோய்கள் நம்மீது செய்பட தயங்கும். 

ஆகையால் நமது உடம்புக்கு நன்மை நடக்க வேண்டுமா நாம் ஒன்று செய்ய வேண்டும் அது தான் நடக்க வேண்டும். நடப்பதெல்லாம் நன்மைக்கே. கே.கோவிந்தசாமி, இயன்முறை மருத்துவர்,ஆலங்குடி.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)