என்னது தாமரை அழிஞ்சி போச்சா? தமிழிசை !

0
தாமரை வடிவில் போடப்பட்ட கோலங்களை தேர்தல் அதிகாரிகள் அழித்ததால் கோபப்பட்ட தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் கண்டனம் தெரிவித் துள்ளார்.
என்னது தாமரை அழிஞ்சி போச்சா?


ஸ்ரீவில்லி புத்தூர் ஆண்டாள் கோவிலில் பொது மக்களால் வரையப்பட்ட கோலங்களில், தாமரை வடிவத்திலான கோலங்கள் இருந்த்தால் இது தேர்தல் விதிமுறை களை மீறி யுள்ளதாக அந்த கோலங்களை அழித்துள்ளனர்.

இதற்கு தமிழிசை கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட் டுள்ளார். அதில், ஸ்ரீவில்லி புத்தூர் ஆண்டாள் கோவிலில் பொது மக்களால் வரையப்பட்ட தாமரை கோலத்தை அழித்த அதிகாரிகளை வன்மையாக கண்டிக்கிறேன்.

தாமைரையை பக்தி நோக்கத்தோடு பொது மக்கள் வரைந்திருக் கின்றனர். இது தேர்தல் நோக்கத்தோடு வரையப் பட்டது அல்ல. அப்படி பார்த்தால், கை ஒரு கட்சியின் தேர்தல் சின்னம், அதற்காக கையை உடம்பி லிருந்து அகற்றி விடுவீர்களா?

தினமும் சூரியன் உதிக்கின்றது. சூரியனும் ஒரு கட்சியின் தேர்தல் சின்னம். எனவே சூரியனை மறைத்து விடுவீர்களா? என கேள்வி எழுப்பி யுள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings