லாட்ஜில் மாடல் அழகியுடன் குளியலறையில் இருந்த இளைஞர் !

0
மாடல் அழகி ஒருவர் இளைஞரை குளிய லறையில் வைத்து பூட்டி விட்டு அவரது காரை திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
லாட்ஜில் மாடல் அழகியுடன் இளைஞர்
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம் பள்ளியை சேர்ந்தவர் சக்திவேல் (39). இவருக்குத் திருமணமாகி, மனைவி மற்றும் 3 வயதில் மகன் உள்ளனர். 

சக்திவேல் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் சக்தி வேலிற்கு சீனு என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

சக்திவேல் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி சீனுவிடம் பணம் வாங்கி யுள்ளார். ஆனால் சொன்னபடி வேலை வாங்கித் தரவில்லை. 

கொடுத்த காசை திரும்பி தரும்படி சீனு கேட்டதற்கு சக்திவேல் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். 

இதனால் சீனு தஞ்சையைச் சேர்ந்த சுவேதா (26) என்ற மாடல் அழகியை சக்தி வேலிடம் அறிமுகப் படுத்தி யுள்ளார்.

இந்நிலையில் சக்திவேல் சுவேதாவை தனது காரில் அழைத்துக் கொண்டு ஏலகிரிக்கு சென்றார். அங்கு இருவரும் ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கினர். 

சக்திவேல் குளிப்பதற் காக குளிய லறைக்கு சென்றார். அப்போது சுவேதா, சக்திவேலின் கார் சாவியை எடுத்துக் கொண்டு குளிய லறையின் கதவை பூட்டி விட்டு அங்கிருந்து எஸ்கேப் ஆனார். 
இதை யடுத்து சக்திவேல் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க, லாட்ஜிற்கு வந்த போலீஸார் குளிய லறையில் இருந்த சக்திவேலை மீட்டனர். 

அந்நேரம் சக்திவேலின் செல்போனிற்கு ஒரு மெசேஜ் வந்தது. சக்திவேலின் போனை போலீஸார் வாங்கி பார்த்தனர். 

அதில் ஸ்வேதா உன் காரை எடுத்து சென்றுள்ளேன். சீனுவிற்கு கொடுக்க வேண்டிய 2 லட்சத்தை தந்து விட்டு காரை வாங்க்கொள் என மெசேஜ் அனுப்பி யிருந்தார். 

இதை யடுத்து போலீஸார் மாடல் அழகியான சுவேதா மற்றும் சீனுவை தேடி வருகிறார்கள்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings