அதிமுக கூட்டணி யில் தேமுதிக வுக்கு 4 தொகுதிகள் !

0
நீண்ட இழு பறிக்குப் பின் அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள தேமுதிக வுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப் பட்டுள்ளன. மக்களவை தேர்தலில் அதிமுக தலைமை யிலான கூட்டணியில் தேமுதிக வுக்கு தொகுதி பங்கீடு செய்வதில் இழுபறி நீடித்து வந்தது. 
தேமுதிகவுக்கு 4 தொகுதிகள்


இந்த நிலையில், அதிமுக வின் கூட்டணி பேச்சு வார்த்தை குழுவினர் நடத்திய பேச்சு வார்த்தையில் தேமுதிவு க்கான தொகுதி பங்கீடு இறுதி செய்யப் பட்டது.

இதை யடுத்து கூட்டணி தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடு வதற்காக ஆழ்வார் பேட்டையி லுள்ள கிரவுன் பிளாசா நட்சத்திர விடுதிக்கு அதிமுக ஒருங்கிணைப் பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப் பாளர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் மற்றும் தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த், சுதிஷ் ஆகியோர் சென்றனர்.

சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்திய பின் செய்தி யாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அதிமுக கூட்டணியில் தேமுதிக வுக்கு 4 மக்களவை தொகுதிகள் ஒதுக்கப் பட்டுள்ள தாக தெரிவித்தார். வேட்பு மனு தாக்கலுக்கு முன்னதாக கூட்டணி இறுதி செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

40 மக்களவை தொகுதிகளி லும் வெற்றி பெறுவோம் என்று தெரிவித்த பிரேமலதா விஜயகாந்த், உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி தொடரும் என்றார்
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings