இனி வாழ்க்கையே சந்தோஷம்தான்- ஹரிணியின் பெற்றோர் !

0
100 நாள்களு க்குப் பிறகு குழந்தை ஹரிணி கண்டு பிடிக்கப்பட்ட நிலையில், அவரது பெற்றோர் குழந்தையை ஆரத்தழுவி முத்தம் கொடுத்தனர். ``எங்கப் பொண்ணு கிடைச்சிட்டா. இனி வாழ்க்கையே சந்தோஷம் தான்" என்று ஆனந்தக் கண்ணீர் வடித்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், மானாமதி கிராமத்தைச் சேர்ந்த நாடோடி இன தம்பதியான வெங்கடேசன், காளியம்மாளின் இரண்டு வயது மகள் ஹரிணி. 

கடந்த செப்டம்பர் 15-ம் தேதி அணைக்கட்டு காவல் நிலையம் அருகே இரவில் படுத்து உறங்கிய போது ஹரிணி காணாமல் போனார். 


இது குறித்து தந்தை வெங்கடேசன், அணைக்கட்டுக் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதை யடுத்து, காஞ்சிபுரம் மாவட்டக் காவல்துறை தனிப்படைகள் அமைத்து ஹரிணியைத் தேடி வந்தது. 

ஆனால், ஹரிணி பற்றி எந்தத் தகவலும் கிடைக்க வில்லை. கர்ப்பிணி யான தாயார் காளியம்மாள், மகள் ஹரிணி காணாமல் போன கவலையில் இருந்து வந்தார். அவரது உடல் நிலையும் பாதிக்கப் பட்டது. 
`எனது மகள் கிடைக்கும் வரை அணைக்கட்டுக் காவல் நிலையத்தை விட்டு நகரமாட்டோம்' என்று கிடந்தனர் பெற்றோர்.

இதனிடையே, கரூரைச் சேர்ந்த `இணைந்த கைகள்' என்ற சமூக அமைப்பு, `ஹரிணியைக் கண்டு பிடித்துக் கொடுப்பவர் களுக்கு ஒரு லட்சம் பரிசு' வழங்கப்படும் என்று அறிவித்ததோடு, சமூக வலை தளங்களில் பரப்பினர். 
இதனிடையே, ஹரிணியின் பெற்றோரை போனில் அழைத்து தைரியப் படுத்திய லதா ரஜினிகாந்த், மும்பையில் ஹரிணிபோல் இருக்கும் ஒரு குழந்தை பற்றியும் அதை மீட்க தனது பீஸ் ஆப் சைல்டு அமைப்பு மூலம் முயல்வதா கவும் குறிப்பிட்டார். 

இதனால், சுறுசுறுப்படைந்த காஞ்சிபுரம் காவல் துறையும் அணைக் கட்டுக் காவல் நிலைய போலீஸாரும் ஹரிணியைக் கடத்திய நபரை அடையாளப் படுத்தி இருக்கிறார்கள்.

இந்த நிலையில், காஞ்சிபுரம் காவல்துறை அருகில் உள்ள திருப்போரூரில் சிறுமி ஹரிணி கண்டு பிடிக்கப் பட்டுள்ளார். கடப்பாக்கம் காவல் நிலையத்தில் ஹரிணியைக் கண்டதும் வெங்கடேசனும் காளியம் மாளும் அழத்தொடங்கி விட்டார்கள். 


பேசுவதற்கு அவர்களிடம் வார்த்தைகள் இல்லை. காவல் துறைக்குக் கண்ணீரால் நன்றி தெரிவித்த காளியம்மாள், குழந்தை ஹரிணியைத் தழுவி முத்த மிட்டுக் கொஞ்சினர்.
ஹரிணியின் தந்தை வெங்கடேசனிடம் பேசினோம். ``காலையில போலீஸ்காரங்க கடப்பாக்கம் வாப்பான்னு கூப்பிட்டாங்க. குழந்தை அடையாளத்தைப் பார்க்கச் சொன்னாங்க. கழுத்துல சுடுதண்ணி பட்ட தழும்பை வைத்து இது ஹரிணி தான் எனச் சொன்னேன். 
இதைச் சொன்னதும் குழந்தையை என்னிடம் கொடுத்து விட்டார்கள். ஹரிணிக்குத் தலைமுடி வெட்டி கொலு செல்லாம் போட்டிருக் காங்க. அது என்னோட கொலுசு இல்லை. கழட்டிடு ங்கன்னு சொன்னேன். பரவா இல்லை போட்டுக் கட்டும்னு சொல்லிட்டாங்க. 

உலகத்துல இன்றைக்கு இருக்குற சந்தோஷம் போதும். வாழ்க்கை முழுவதும் சந்தோஷமா இருப்பேன். திருப்போரூர்ல தான் குழந்தை கிடைச்சதா சொன்னாங்க. குழந்தையை கடத்திய வர்களை கொண்டு வரப்போவ தாகச் சொல்லி இருக்கிறாங்க. 

அவங்க முகத்தைப் பார்க்கணும்னு நினைக்கிறேன். எங்களை செய்யூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு வரச்சொல்லி இருக்கிறார்கள்” என்றார்.

காஞ்சிபுரம் மாவட்டக் காவல் கண்காணிப் பாளர் சந்தோஷ் ஹதிமானி யிடம் பேசினோம். ``குழந்தை கடத்தியதாக ஒருவரை பிடித்து விசாரணை செய்து வருகிறோம். 

மேலும்
மேலும் இரண்டு பேரை தேடிவருகிறோம். விசாரணை முடிவில் என்ன நடந்தது எனப் பின்பு தெரிவிக்கிறோம்” என்கிறார் சுருக்கமாக.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings