​ஸ்மார்ட் நகரங்கள் உருவாவது ஏன்? அதனால் பயன்கள் என்ன?

0
ஸ்மார்ட் நகரங்கள் உருவாவதால் ஏற்படும் பொருளாதார வளர்ச்சி, வாழ்க்கைத் தரம் மேம்பாடு உள்ளிட்டவை பற்றி விரிவாக பார்ப்போம். 
பொருளாதார வளர்ச்சி, நகர்ப்புற வளர்ச்சியை விரைவுபடுத்தும் விதமாக இந்தத் திட்டத்துக்கு அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய உள்ளது. 

இதன் மூலம் ஒவ்வொரு ஸ்மார்ட் நகரத்திற்கு ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் கிடைக்கும். 


இதற்கான நகரங்கள் போட்டி மூலம் தேர்ந்து எடுக்கப்படும். இருக்கும் சொத்துக்கள், வளங்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை கொண்டு 

தூய்மையான, வசதிகள் நிறைந்த ஸ்மார்ட் நகரங்கள் உருவாக் கப்படும். இதில் பங்கேற்கும் குடிமக்களுக்கு சிறப்பு முன்னுரிமை வழங்கப்படும். 

ஸ்மார்ட் சிட்டியை உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக தூய்மையான தண்ணீர், கழிப்பிட வசதி, திடக்கழிவு மேலாண்மை, போக்குவரத்து வசதி, ஏழைகளுக்கு வீட்டு வசதி, மின் வசதி, மின்னணு ஆளுமை உள்ளிட்ட வற்றுக்கு முன்னுரிமை வழங்கப்படும் .

இதே போன்று, பொது மக்கள் பாதுகாப்பு, சுகாதாரம், கல்வி, நிலையான நகர்ப்புற வளர்ச்சி ஆகிய வற்றுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும்.

அடிப்படை சேவைகள், குழந்தைகளின் தேவைகள், மழைநீர் வடிகால் அமைப்பு, பசுமையை பாதுகாக்க பூங்காக்கள் ஆகியவை நிறை வேற்றப்படும். 


நகர்ப்புற சீர்திருத்த த்தை மேற்கொள்ளும் வகையில், மின் ஆளுமை தொழில் முறை நகராட்சி பணிநிலை, நகராட்சி வரி மதிப்பீடு நகர்ப் பகுதிகளில் சீர்திருத்தங்கள் ஆகியவை மேற்கொள்ளப்படும். 

அடல் மிஷன் எனப்படும் அம்ருத் திட்டம் மூலம் 500 நகரங்களில் வளர்ச்சி திட்டங்கள் 50 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும். 

சில முக்கிய நதிகள், மாநில தலைநகரங்கள், முக்கிய நகரங்கள், மலை பகுதிகள், சுற்றுலா மையங்களை ஒட்டி ஸ்மார்ட் நகரங்கள் ஏற்படுத் தப்படும். 

10 லட்சம் மக்கள் தொகை கொண்ட நகரங்களின் திட்டத்திற்கு மத்திய அரசு 50 சதவிகிதமும், 10 லட்சத்து க்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களுக் கான திட்டத்திற்கு மூன்றில் ஒரு பங்கும் மத்திய அரசின் பங்களிப்பாக இருக்கும். 

இதற்கான மத்திய அரசின் நிதியுதவி மூன்று தவணை களாக அளிக்கப்படும். நூறு ஸ்மார்ட் நகரங்களை அமைப்பதன் மூலம் கிராமங்கள் - நகரங்கள் இடையே உள்ள இடைவெளி குறையும். 

ஏழை மக்களின் பொருளாதார மேம்பாடு, வேலை வாய்ப்பு ஆகிய நோக்கங் களும் நிறைவேறும் என்பது மத்திய அரசின் உறுதியான நம்பிக்கை ஆகும். 


ஸ்மார்ட் நகரங்கள் என்றால் அனைத்து விதமான கட்டமைப்பு- பொருளாதார, நிதி, சமுதாய மற்றும் உள் கட்டமைப்பு, நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி நகர மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்து வதற்கான திட்டமாகும்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)