ஏரிகள் உருவான வரலாறு !

பூமித்தாய் உருவாக்கிய அதிசயங்களில் ஏரிகளும் முக்கிய மானவையே. தண்ணீர் பாய்ந்து வந்து நிறைகிற வெற்றிடமோ, பள்ளமோ நாளடைவில் ஏரியாகி விடும்.
ஏரிகள் உருவான வரலாறு !
தண்ணீர் ஊறி மண் வழியே வெளியேறாத நிலமும், அணைக் கட்டுகளுக்குப் பின்னால் உள்ள இடங்களும் தான் ஏரிக்கு ஏற்றவை. பூமித்தட்டின் நடனமும் பனிக்கட்டி உருகுதலுமே பல ஏரிகள் ஏற்பட காரணம்.
யாரேனும் நினைத்தால் விக்கல் வருமா?
படிப்படியாக பூமித்தட்டு மேலே எழும் போது அணைகள் போன்ற அமைப்புகளும், கன்னா பின்னா வென இயக்கம் ஏற்படும் போது அகன்ற, ஆழமான ஏரிகளும் உருவா கின்றன.

ஆப்ரிக்காவை யும் ஆசியாவை யும் வெட்டியது போல பிரிக்கும் ரிஃப்ட் பள்ளத்தாக்கு, பல கன்னா பின்னா ஏரிகள் அமையக் காரணமாக இருந்தது.
உதாரணம் சாக்கடல் என்றழைக்கப் படுகிற டெட் ஸீ, நயஸா ஏரி. உருகும் பனிக்கட்டிப் பாறைகள் தரையைத் தேய்த்து, சுத்தம் செய்து பள்ளங்களை உருவாக்கு கின்றன.

அதோடு அங்கே நிறைய வீழ்படிவு களையும் கொண்டு வந்து சேர்த்து, ஒரு முகடு அல்லது வரப்பு போன்ற அமைப்பையும் ஏற்படுத்தி விடுகின்றன.
சுவாசிக்கும் முன் யோசி!
இதனால் இயற்கை அணைக் கட்டுகள் உருவாகின்றன. வட அமெரிக்காவின் பிரமாண்ட ஏரிகளும், ஐரோப்பாவின் ஆல்பைன் ஏரிகளும் இப்படித் தோன்றி யவையே.

ஹைதராபாத் நகரத்தை அருமையான சுற்றுலாத் தலமாக மாற்றிய பெருமை ஹுசைன் சாகர் என்ற ஏரியைச் சேரும்.
Tags: