மன சஞ்சலத்தை போக்கும் தியானம் செய்யும் முறை !

எந்த தெய்வத்தை நாம் தியானிக்க விரும்பு கிறோமோ அதனை இஷ்ட தெய்வம் என்கிறோம். தியானிக்க நினைக்கும் சாதகன் தனது மனதிற்கு இயைந்த இஷ்ட தெய்வத்தை எண்ணி தியானிக்கலாம்.
மன சஞ்சலத்தை போக்கும் தியானம் செய்யும் முறை !
அந்த தெய்வம் என்பது அவனது குலதெய்வமாகவோ அல்லது வேறெந்த தெய்வமாகவோ இருக்கலாம். 
ஃபுட் பாய்சன் பற்றி பாரம்பரிய மருத்துவம் சொல்வது என்ன?
சிலர் தனக்கான குருவை மான சீகமாக எண்ணியிருப்பார்கள். அவர்கள் அந்த குருவிடம் தீட்சை பெற்று தியானத்தை தொடங்கலாம்.

தியானம் செய்யும் முறை :

1. உங்கள் இஷ்ட தெய்வத்தை தேர்ந்தெ டுத்துக் கொள்ளவும். அது உங்கள் குல தெய்வமா கவோ உங்களுக்கு பிடித்த வேறு தெய்வ மாகவோ இருக்கலாம்.

2. தியானத்தி ற்காக ஒரு நாளில் இரண்டு நேரங்களை தேர்ந் தெடுத்துக் கொள்ளுங்கள். 

(எடுத்துக் காட்டாக காலை 5 அல்லது 6 மணி. மாலை 6.30 அல்லது 7.30 மணி) முடிந்த வரை குறிப்பாக அந்த நேரத்திலேயே தியானம் செய்ய முயற்சி செய்யவும்.

3. வீட்டில் ஒரு இடத்தை தியானத் திற்காக தேர்ந்தெ டுங்கள். அது பூஜை யறை யாகவோ, வேறு அமைதியான இடமாக வோ இருக்கலாம். 
 
பூஜையறை இல்லை யெனில் இஷ்ட தெய்வத்தை வைப்பதற்கு ஒரு சிறு இடத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம்.
4. அங்கு ஆசனத்தை விரித்து அதில் அமரவும். தலை, கழுத்து மற்றும் முதுகெலும்பு நேராக இருக்கும் படி பார்த்துக் கொள்ளவும். கைகள் மடி மீது இருக்கட்டும். கண்களை மூடிக் கொள்ளவும்.
பார்வையைப் பறிக்கும் செயற்கைத் திரை !
5. சூரியன், நிலவு, நட்சத் திரங்கள், மேகங்கள் எதுவும் இல்லாத பரந்த எல்லை யற்ற ஆகாயம் மங்கிய ஒளியில் இருப்பதாக சில நிமிடங்கள் கற்பனை செய்யவும். 

இது உங்கள் உடலையும், உள்ளத் தையும் தளர்த்தி அமைதிப் படுத்த உதவும்.

6. இப்போது உங்கள் உணர்வு மையத்தை இதயத் திற்கு எடுத்து செல்லவும். அங்கு பன்னிரெண்டு இதழ்கள் கொண்ட சிவப்பு தாமரையை அங்கு கற்பனை செய்யவும். 
 
உங்கள் இஷ்ட தெய்வம் அதில் உயிருணர்வுடன் அமர்ந்திருப்பதை எண்ணவும்.

7. இப்போது இஷ்ட தெய்வத்திடம் மனமுருகி பிரார்த் திக்கவும். நல்ல உடல், அமைதியான மனம், நம்பிக்கை, பக்தி, விவேகம், பற்றின்மை ஆகியவற் றிற்காக பிராத்தி க்கவும்.
8. ஐந்து, பத்து நிமிடங்கள் இஷ்ட தெய்வத்தை தியானி க்கவும். மனம் அங்கும் இங்கும் ஓடினாலும் அதை இழுத்து வந்து இஷ்ட தெய்வத் திடம் நிறுத்தவும்.

9. பின்பு இஷ்ட தெய்வத்தின் நாமத்தை ஜபம் செய்யவும். உங்கள் இஷ்ட தெய்வம் ராமராக இருந்தால் ராம, ராம என்று தொடர்ந்து ஜெபம் செய்யவும்.
குறைந்த பட்சம் 108 முறை யாவது ஜபம் செய்ய வேண்டும். அதிகமாக செய்ய விரும் பினால் அது 108 இன் மடங்காக இருக்க வேண்டும்.
10. தியாத்தி ற்கு பிறகு உடனடி யாக எழுந்திருக்க வேண்டாம். தொடர்ந்து சிறிது நேரம் அமர்ந்து மனதுக்கு அமைதி தரும் ஆன்மீக புத்தக ங்களை படியுங்கள்.
Tags: