30 லட்சம் பாம்புகள், 600 மக்கள்... வினோத கிராமம் !





30 லட்சம் பாம்புகள், 600 மக்கள்... வினோத கிராமம் !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0
சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள செஜியாங் மாகாணத்தின் கடைக் கோடியில் இருக்கும் குக்கிராமம் சிசிகியாவ். 
30 லட்சம் பாம்புகள், 600 மக்கள்...  வினோத கிராமம் !
சுமார் 600 மக்கள் மட்டுமே வாழும் இந்த கிராமத்தில் உள்ளவர்களில் பெரும் பாலானவர்கள்  தங்களது உடல்களின் பல பகுதிகளில் பாம்புக்கடி அடையாளங் களுடன் தான் வாழ்ந்து வருகின்றனர். 
இவர்களுக்கு ஏன் இந்த நிலை?

சீனர்களின் அசைவ உணவில் பாம்புக்கறிக்கு முதலிடம் உண்டு. மிகவும் வறட்சியால் பாதிக்கப் பட்ட  இந்த கிராமத்தில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னர் பாம்புகள் நடமாட்டம் அதிகமாக இருந்துள்ளது. 

நிலப்பரப்பில் மட்டு மின்றி, இங்குள்ள நீர் நிலைகளிலும் மீன்களை விட பாம்புகளின் ஆதிக்கம் தான்.

பசிக்கு உணவாக பயன் படுத்தப்பட்ட பாம்புகள் இங்குள்ள மக்களுக்கு செல்வத்தை அள்ளித்தரும் அமுத சுரபியாக பிற்காலத்தில் மாறின. 

இதனால், பிற பகுதிகளில் உள்ள மக்கள் இந்த கிராமத்தை ‘பாம்பு கிராமம்’ என்றே பிற்காலத்தில் அழைக்க தொடங்கி விட்டனர்.

இறைச்சி யாக மட்டுமின்றி, பல்வேறு கொடிய நோய்களை தீர்க்கும் அருமருந் தாகவும் பாம்புகள் பயன் படுவதால் 

பாம்புப் பண்ணைகளும், பாம்பு வர்த்தகமும் இங்கு நாளடைவில் பல்கிப் பெருகியது. குறிப்பாக, கொடிய நச்சுத்தன்மை உள்ள பாம்புகளில் இருந்து எடுக்கப்படும் விஷம், 
30 லட்சம் பாம்புகள், 600 மக்கள்...  வினோத கிராமம் !
அதிகமான விலைக்கு வெளிநாட்டு மருந்து உற்பத்தி நிறுவனங் களால் கொள்முதல் செய்யப் படுவதால், 

இங்கு வீட்டுக்குவீடு பெரியதும், சிறியதுமாக பாம்பு வளர்ப்பு தொழில் குடிசைத் தொழிலாகவே மாறிப் போனது.

இந்த தொழிலுக்கு ஆரம்பத்தில் பிள்ளையார் சுழி போட்டவர் யாங் ஹாங்சாங். இவரை உள்ளூர் மக்கள் பாம்புகளின் ராஜா (snake king) என்று அன்புடன் அழைத்து மகிழ்கின்றனர்.
1970-ம் ஆண்டு வாக்கில் முதன் முதலாக பாம்பு பண்ணையை ஏற்படுத்தி, பாம்பு முட்டைகளை சேகரித்து, அடைகாத்து, 

குஞ்சுகளை பொறிக்க வைக்க யாங் ஹாங்சாங் முயன்ற போது அது பெரிய அளவில் கைகொடுக்க வில்லை. வெறும் பத்து சதவீதம் முட்டைகள் மட்டுமே பொறித்தன.

ஆனால், மனம் தளராமல் இவர் எடுத்த பெரு முயற்சிகளின் பலனாக அடுத்த ஆண்டிலேயே சுமார் 30 ஆயிரம் முட்டைகள் 

குஞ்சு பொறித் திருந்ததால் அந்நாட்களில் மிகப்பெரிய பாம்பு பண்ணையின் அதிபராக மாறினார் யாங்.

1983-ம் ஆண்டுவாக்கில் சீனாவில் வாழ்ந்த மக்களின் சராசரி ஆண்டு வருமானம் வெறும் 10 ஆயிரம் யுவான் களாக மட்டுமே இருந்த போது, 

யாங் ஹாங்சாங்-கின் ஆண்டு வருமானம் சுமார் ஒன்றரை லட்சம் யுவான்களாக இருந்தது. 

இதை வைத்தே இவரது வளர்ச்சி யையும், பாம்பு பண்ணை தொழிலில் கிடைத்த லாபத்தையும் யூகித்து கொள்ள முடியும்.

மருத்துவ தேவைகளும் பெருகப் பெருக சிவப்பு கட்டு விரியன், கருநாகம் உள்ளிட்ட பாம்பு விஷத்துக் கான மருந்து நிறுவனங்களின் தேவைகளும் பெருகின.
30 லட்சம் பாம்புகள், 600 மக்கள்...  வினோத கிராமம் !
விளைவு? ஒரு கிராம் பாம்பு விஷம் சுமார் 5 ஆயிரம் யுவான்கள் வரை விலை போவதால் அன்று வறட்சியால் நொடிந்துக் கிடந்த சிசிகியாவ் கிராமம் இன்று செல்வந்தர்களின் பூமியாக மிளிர்கிறது.

ஆண், பெண், குழந்தைகள் என ஒட்டு மொத்த கிராம மக்களும் இதே தொழிலில் ஊறிப்போய் கிடக்கின்றனர். 

கூடவே உடல் முழுவதும் பாம்புகளின் பாசத்தீண்டல்களின் அடை யாளமாக கடிபட்ட காயங்களும் அனைவரிடமும் காண ப்படுகிறது.

காலப் போக்கில் மீன் பண்ணை, பட்டு நெசவு என்று வேறு தொழில் தேடி சில இளைய தலை முறையினர் வெளியூர் களுக்கு சென்று விட்டாலும்
ஆண்டுக்கு சுமார் 2 டன் எடைக்கு பாம்பு விற்றால் போதும் 4 லட்சம் யுவான்கள் வரை பணம் சம்பாதிக்க முடியும் என்பதால் 

இங்குள்ள சுமார் 600 மக்கள் சுமார் 30 லட்சம் பாம்புகளுடன் இரவும், பகலும் வாழ்ந்து வருகின்றனர்.

இங்குள்ள பண்ணைகளில் சேகரிக்கப்படும் கொடிய பாம்புகளின் விஷம் உறைய வைக்கப்பட்டு, பொடியாக்கி தென்கொரியா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடு களுக்கு ஏற்றுமதி செய்யப் படுகிறது. 

மேலும், பாம்புகளின் கல்லீரல் மற்றும் பித்தப்பை போன்றவை சில கொடிய நோய்களை தீர்க்கும் அரு மருந்தாக பயன் படுகிறது. பாம்புத் தோலுக்கும் சர்வதேச சந்தையில் நல்ல விலை கிடைக்கின்றது.

பாம்புகளை போட்டு ஊற வைத்த ஒயின் மற்றும் பாம்புக்கறி உணவுக்கும் சீன மக்களிடையே கடும் கிராக்கியும் தேவையும் இருப்பதால் 
பல உணவ கங்களில் ‘மெயின் டிஷ்’ ஆகவும் பாம்புக்கறி சக்கைப்போடு போடுகிறது. இதனால், வேறு எந்த தொழில் செய்வதையும் விட பாம்புப் பண்ணை தொழில்தான் சிறப்பானது - லாபகர மானதும் கூட. 

எனவே, இந்த தொழிலை ஒரு நாளும் கைவிடப் போவதில்லை என்று இந்த கிராமத்து மக்கள் உறுதியுடன் கூறு கின்றனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)