சிறையில் சசிகலா லஞ்சம் கொடுத்தாரா? லஞ்ச ஒழிப்புதுறை !

0
டிடிவி தினகரன் ஆதரவாளர் புகழேந்தி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க கர்நாடக லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
சிறையில் சசிகலா லஞ்சம் கொடுத்தாரா? லஞ்ச ஒழிப்புதுறை !
கர்நாடக மாநில அதிமுக செயலாளராக இருந்தவர் புகழேந்தி. சசிகலா வின் தீவிர ஆதர வாளரான இவர், 

பெங்களூர் சிறையில் உள்ள சசிகலா வுக்கு சிறப்பு சலுகைகள் செய்து தர போலீஸ் அதிகாரி களுக்கு ரூ.2 கோடி வரை புகழேந்தி லஞ்சம் அளித்ததாக புகார் எழுந்துள்ளது.

சசிகலா சிறையில் உல்லாச வாழ்க்கை வாழ்வதாக கர்நாடக மாநில சிறைத்துறை டிஐஜி யாக இருந்த பெண் அதிகாரி ரூபா வெளியிட்ட பரபரப்பு தகவல் அதிர்ச்சியை ஏற்படுத் தியது. 

சிறைத்துறை டிஐபி சத்ய நாராயணா ரூ.2 கோடி லஞ்சம் வாங்கிக் கொண்டு சசிகலா வுக்கு வசதிகள் செய்து கொடுக்க ஒத்துழைப்பு கொடுத்ததாக ரூபா தெரிவித்தார்.
ரூபாவுக்கு எதிராக சத்ய நாராயணா மான நஷ்ட வழக்கை தொடர்ந்தார். இந்த பரபரப்பு குறித்து கர்நாடக லஞ்ச ஒழிப்புத் துறை விசாரித்து வருகிறது. 

இது தொடர்பாக புகழேந்தி ஜூன் 29ம் தேதி ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பப் பட்டுள்ளது. நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க தயார் என புகழேந்தி தெரிவித்தார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)