ஹிட்லரே செய்யாததை செய்த இந்திரா... அருண் ஜெட்லி !

0
நெருக்கடி நிலை காலத்தில், ஹிட்லரே செய்யாததை கூட இந்திரா காந்தி செய்தார் என்று அருண் ஜெட்லி கூறியுள்ளார்.
ஹிட்லரே செய்யாததை செய்த இந்திரா... அருண் ஜெட்லி !
1975-ம் ஆண்டு ஜூன் 25-ந் தேதி, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, நாடு முழுவதும் நெருக்கடி நிலையை பிரகடனம் செய்தார். நேற்று அதன் 43-வது நினைவு தினம் ஆகும். 

நெருக்கடி நிலை காலத்தில் சிறையில் அடைக்கப் பட்ட எதிர்க்கட்சி பிரபலங் களில் தற்போதைய மத்திய மந்திரி அருண் ஜெட்லியும் ஒருவர். அவர் தனது அனுபவங்களை பேஸ்புக் பக்கத்தில் 3 பகுதிகளாக கட்டுரை எழுதி வருகிறார். 

அதன் 2-வது பகுதியை நேற்று வெளியிட்டார். அதில் அவர் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை, ஜெர்மன் சர்வாதிகாரி ஹிட்லருடன் ஒப்பிட்டு இருந்தார். 

அவர் கூறி இருப்பதாவது:-

நெருக்கடி நிலை காலத்தில் நான் அம்பாலா சென்டிரல் ஜெயிலுக்கு கொண்டு செல்லப் பட்டேன். அப்போதைய சிறை விதிகளின்படி, கைதி ஒருவருக்கு தினப்படி பட்ஜெட்டில் ஒதுக்கீட்டு தொகை ரூ.3 மட்டுமே. 

இதில் தான் உணவு உள்ளிட்டவைகளை நிர்வகிக்க வேண்டும். 1933-ம் ஆண்டு ஜெர்மனியில் ஹிட்லரின் நாஜி படைகள் அத்து மீறலை முன் மாதிரியாக 

கொண்டு தான் 1975-ம் ஆண்டு நெருக்கடி நிலை கொண்டு வரப்பட்டதோ என்று தோன்றுகிறது. ஹிட்லரும், இந்திரா காந்தியும் அரசியல் சட்டத்தை ரத்து செய்ய வில்லை. 
மாறாக, குடியரசு அரசியல் சட்டத்தை பயன்படுத்தி, ஜனநாயக த்தை சர்வாதி காரமாக மாற்றினர். இந்திரா காந்தி ஒருபடி மேலே சென்று, இந்தியாவை பரம்பரை ஜனநாயகமாக மாற்றினார்.

ஹிட்லர், தனது செயல்கள் அரசியல் சட்டத்தின் 4 மூலை களுக்குள் இருக்குமாறு பார்த்துக் கொண்டார். அதே போல், இந்திராவும் அரசியல் சட்டப் பிரிவு 352-ன் கீழ், நெருக்கடி நிலை பிரகடனம் செய்தார். 

இதில் அடிப்படை உரிமை களுக்கான 359-ம் பிரிவை முடக்கி, செயலிழக்க செய்தார். 

ஹிட்லரும், அவரது நாட்டு அரசியல் சட்டத்தின் 48-வது பிரிவை சுட்டிக் காட்டி, ‘மக்களை பாதுகாப்பது’ என்ற பெயரில் சர்வாதிகார செயல்களை நியாயப் படுத்தினார்.

ஹிட்லர், எதிர்க்கட்சி தலைவர் களை கைது செய்தது போலவே, இந்திரா காந்தியும், எதிர்க்கட்சி எம்.பி.க்களை கைது செய்து, 

நாடாளு மன்றத்தில் செயற்கையாக மூன்றில் இரண்டு பங்கு பெரும் பான்மையை உருவாக்கினார். அதை வைத்து அருவறுப்பான அரசியல் சட்ட திருத்த மசோதாக் களை நிறை வேற்றினார். 

இதில், 42-வது சட்டத் திருத்தம், ஐகோர்ட்டுகளின் அதிகாரங் களை நீர்த்துப் போக செய்வதாகும். அரசியல் சட்டப்பிரிவு 368-ஐ திருத்தி மாற்றியதன் மூலம், அரசியல் சட்ட திருத்தத்தை நீதிமன்ற பார்வைக்கு அப்பாற் பட்டதாக ஆக்கினார். 
ஹிட்லர் செய்யாத சில விஷயங் களை கூட இந்திரா காந்தி செய்தார். அரசமைப்பு சட்டம், மக்கள் பிரதி நிதித்துவ சட்டம் ஆகிய வற்றை திருத்தினார். 

நாடாளு மன்ற நிகழ்வு களை பொது மக்களுக்கு சென்றடையா வண்ணம் ஊடகங்கள் அதைப் பற்றி எழுத தடை விதித்தார். இதை ஹிட்லர் கூட செய்ய வில்லை. 

ஹிட்லரின் சர்வாதி காரத்தை ‘புரட்சி கரமானது’ என்று எப்படி கோயபல்ஸ் பேசினாரோ, அதே போல், காங்கிர சாரும் இந்திரா காந்தியின் செயல் பாடுகளை ‘புரட்சி’ என்று பேச வைக்கப் பட்டனர்.

இந்திராவும், ஹிட்லரும் செயல் படுத்திய ஊடக தணிக்கை முறை கிட்டத் தட்ட ஒரே மாதிரி யானது தான். ‘ஜெர்மனி யில் ஒரே அதிகாரம் தான் உள்ளது, அது ஹிட்லர்’ என்று ஒரு நாஜி தலைவர் கூறினார். 

அதே போல், ‘இந்திரா தான் இந்தியா, இந்தியா தான் இந்திரா’ என்று காங்கிரஸ் தலைவர் தேவகந்தா பரூவா கூறினார். ஹிட்லர் 25 அம்ச பொருளாதார திட்டத்தை அறிவித்தார். 
ஆனால், இந்திரா காந்தி 20 அம்ச திட்டம் தான் அறிவித்தார். அந்த பற்றாக் குறையை நிரப்ப, சஞ்சய் காந்தி 5 அம்ச பொருளாதார, சமூக திட்டத்தை அறிவித்தார். 

இவ்வாறு அருண் ஜெட்லி கூறி யுள்ளார். அருண் ஜெட்லியின் இந்த பதிவை, பிரதமர் மோடி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings