தமிழ் மாணவர்களை வேறு மாநிலத்துக்கு ஏன் மாற்றினோம்? சிபிஎஸ்இ !

தமிழ் நாட்டைத் தவிர, அனைத்து மாநிலங் களிலும் நீட் (NEET) தேர்வு எழுதுபவர் களுக்கு அந்தந்த மாநிலத் திலேயே 

தமிழ் மாணவர்களை வேறு மாநிலத்துக்கு ஏன் மாற்றினோம்? சிபிஎஸ்இ !
தேர்வு மையத்தை ஒதுக்கீடு செய்துள்ளது மத்திய இடைநிலை கல்வி வாரிய மான சிபிஎஸ்இ.

இந்தத் தகவலை நேற்று உச்ச நீதிமன்ற த்தில் தெரிவித்துள்ள சி.பி.எஸ்.இ நிர்வாகம், தமிழ் நாட்டில் 2017-ம் ஆண்டில் 82,272 பேர் நீட் தேர்வை எழுதி உள்ளனர். 

இந்த ஆண்டு 10 சதவிகிதம் மட்டுமே அதாவது, 90,000 மாணவர்கள் மட்டும் நீட் தேர்வு எழுது வார்கள் என்று எதிர் பார்த்தோம். 

இதற்காக 170 தேர்வு மையங் களை ஏற்படுத்தி இருந்தோம். ஆனால், நாங்கள் எதிர் பார்த்ததை விட அதிகளவில் மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பி த்துள்ளனர். 
இதனால் கடந்த ஆண்டை விட 25,206 பேருக்குக் கூடுதலாக தமிழ் நாட்டில் தேர்வு மையத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக் கிறோம். 

இது கடந்த ஆண்டை விட 31 சதவிகிதம் அதிகம். நீட் தேர்வுக்கு விண்ணப் பிக்கக் கடைசி நாள் 09.04.2018. 

ஆனால், உச்ச நீதிமன்றம் ஆதார் இல்லாத மாணவர் களும் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்க வேண்டும் என்று நான்கு நாட்களை நீட்டித்தது. 

இதனால் எங்களுக்கு முன்னேற் பாடுகள் செய்ய போதுமான கால அவகாசம் குறைந்தது. இதனால் தமிழ் நாட்டில் கூடுதல் மையங் களை ஏற்படுத்த முடிய வில்லை. 

நீண்ட தூரத்தில் உள்ள ராஜஸ்தானில் நாங்களாகத் தேர்வு மையத்தை ஒதுக்க வில்லை. 

மாணவர் களின் விருப்பத்தின் பேரில் தேர்வு செய்திருந் தால் மட்டுமே ஒதுக்கீடு செய்திருக்க முடியும். 

நாங்களாக எந்த மையத்தையும் ஒதுக்கீடு செய்ய வில்லை. கணினி வழி யாகவே எல்லா மையங் களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ளது.
கடந்த ஆண்டில் தேர்வெழுதிய மாணவர் களின் எண்ணிக்கை அடிப்படை யிலேயே 8 முதல் 10 சதவிகித 

கூடுதல் இடங்க ளுடன் இந்த ஆண்டுக் கான தேர்வு மையங்களை அமைக்க முடிவு செய்தோம். 

இதில் தேர்வு மையத் தின் உள்கட்டமைப்பு, போதுமான தேர்வு அறைகள், தேர்வு பணிக்கான ஆசிரியர்கள், 

சுற்றுச் சுவர் உள்ள பள்ளியின் அமைப்பு, போதுமான இருக்கைகள் என எல்லா வற்றையும் கணக்கீட்டுத் தான் மையத்தை ஏற்படுத்தி உள்ளோம். 

இதற்காக வரிசை எண், தேர்வுத் தாள் என அனைத்தை யும் சம்பந்தப் பட்ட தேர்வு மையத்து க்கு அனுப்பி விட்டோம்.

இந்த ஆண்டு கால்நடை அறிவியல், மீன்வளம், சித்தா, ஹோமியோபதி எனப் பிற படிப்பு களுக்கும் 

நீட் கட்டாயம் என மாற்றி இருப்ப தால் நிறைய மாணவர்கள் விண்ணப் பித்துள்ளனர். 

இதனால் தமிழ் நாட்டில் உள்ள அனைத்துத் தேர்வு மையங்களும் நிறைந் துள்ளன. 

தமிழ் நாட்டில் உள்ள மாணவர் களை அருகில் உள்ள தேர்வு மையமாக எர்ணா குளத்துக்கு மாற்றி உள்ளோம்" என்று குறிப்பிட் டுள்ளது சி.பி.எஸ் இ.
நீதிமன்றத் துக்குத் தாக்கல் செய்யப் பட்ட விவரங்  களில் சென்னை, கோவை, மதுரை, நாமக்கல், சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் நகரங்களில் மையங் களை அமைத்து ள்ளோம். 

இதில் சென்னையில் 49 மையங் களில் 33,842 மாணவர்கள், கோவையில் 32 மையங் களில் 15,960 மாணவர்கள், மதுரையில் 20 மையங் களில் 11,800 பேர், 

நாமக்கல்லில் 07 மையங் களில் 5,560 பேர், சேலத்தில் 26 மையங் களில் 17,461 பேர், திருச்சியில் 12 மையங் களில் 9,420 பேர், 

திருநெல்வேலி யில் 10 மையத்தில் 4,383 பேர், வேலூரில் 14 மையத்தில் 9,054 பேர் என மொத்த மாக 170 மையங் களில் 1,07,480 பேர் 
தமிழ் நாட்டில் தேர்வு எழுத உள்ளனர் என்று சி.பி.எஸ்.இ வெளியிட் டுள்ளது.

கடைசி வரை தமிழ் நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் எவ்வளவு பேர் வெளி மாநிலங் களுக்குச் 

சென்று தேர்வெழுது கின்றனர் என்ற விவரத்தை மட்டும் வெளியிட வில்லை.
Tags: