நீட் தேர்வு தமிழக மாணவர்கள் 1500 பேர் !

மருத்துவப் படிப்புக்கு மாணவர் களை சேர்ப்பதில் வெளிப்படைத் தன்மையை கொண்டு வரும் வகையில் நாடு முழுவதும் தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வு எனும் நீட் தேர்வு முறையை மத்திய அரசு கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது.
நீட் தேர்வு தமிழக மாணவர்கள் 1500 பேர் !
இரண்டாவது ஆண்டாக இந்த முறை நீட் தேர்வு நாளை (ஞாயிற்றுக் கிழமை) நாடு முழுவதும் நடைபெற உள்ளது. மத்திய இடை நிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) இந்த தேர்வை பொறுப் பேற்று நடத்துகிறது. 

இந்த ஆண்டு நாடு முழுவதும் 13 லட்சத்து 26 ஆயிரத்து 725 மாணவ- மாணவிகள் நீட் தேர்வு எழுதுகிறார்கள். இதற்காக இந்தியா முழுவதும் 136 நகரங் களில் 2 ஆயிரத்து 225 தேர்வு மையங்கள் அமைக்கப் பட்டுள்ளன. 

தமிழ் நாட்டில் 1 லட்சத்து 7480 பேர் இந்த தேர்வை எழுத உள்ளனர். இவர்களு க்கு 10 நகரங்களில் 170 தேர்வு மையங்கள் ஏற்படுத்தப் பட்டுள்ளன.

தமிழ் நாட்டில் இந்த ஆண்டு சுமார் 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் நீட் தேர்வு எழுத விண்ணப் பித்திருந்தனர். அவர்களில் 1 லட்சத்து 7480 பேருக்கு மட்டுமே தமிழ் நாட்டுக்குள் தேர்வு மையங் களை ஒதுக்க முடிந்தது.

சுமார் 1500 மாணவ- மாணவி களுக்கு தமிழ் நாட்டுக்குள் தேர்வு மையத்தை ஒதுக்க முடிய வில்லை. இதைத் தொடர்ந்து 1,500 மாணவர் களுக்கும் வெளி மாநிலங் களில் தேர்வு மையம் ஒதுக்கப் பட்டுள்ளது.

நீட் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப் பித்த போதே எந்த நகரில் தேர்வு எழுத விரும்பு கிறீர்கள் என்ற விபரம் கேட்கப் பட்டிருந்தது. ஒவ்வொரு மாணவரும் 3 தேர்வு மையங்களை குறிப்பிட அறிவுறு த்தப்பட்டி ருந்தது. 
மாணவர்கள் குறிப்பிட்ட முதலாவது தேர்வு மைய நகரத்தை ஒதுக்கீட செய்ய முடியாத பட்சத்தில்  2-வது அல்லது மூன்றாவது தேர்வு மையத்தை அதிகாரிகள் ஒதுக்கீடு செய்தனர்.

இதனால் தான் தமிழகத்தை சேர்ந்த சுமார் 1,500 மாணவ- மாணவி களுக்கு வேறு மாநிலங் களில் நீட் தேர்வு மையத்தை ஒதுக்கீடு செய்ய நேர்ந்தது. 

அந்த வகையில் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங் களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப் பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

மராட்டியம், தெலுங்கானா, அரியானா, சிக்கிம் மாநிலங் களிலும் கூட தமிழக மாணவர்களுக்கு தேர்வு மையங்கள் ஒதுக்கப் பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியானது. 

ஆனால் ஒவ்வொரு மாநிலத்து க்கும், தமிழ் நாட்டைச் சேர்ந்த எத்தனை மாணவ- மாணவிகள் நீட் தேர்வு எழுத செல்கிறார்கள் 

என்ற விபரத்தை பத்திரிகை யாளர்களிடம் தெரிவிக்க தமிழக கல்வித் துறை அதிகாரிகள் மறுத்தனர்.

வெளி மாநிலங் களுக்கு செல்லும் மாணவர் களில் பெரும் பாலானவர் கள் அதாவது 75 சதவீதம் பேர் கேரளா சென்று நீட் தேர்வு எழுத தேர்வு மையத்தை குறிப்பிட்டி ருந்தனர். 

அதாவது 1,500 மாணவர் களில் சுமார் 1,200 பேர் கேரளா சென்று நீட் தேர்வு எழுத விருப்பம் தெரிவித் திருந்தனர்.
இந்த சுமார் 1,200 மாணவர் களில் பெரும் பாலானவர்கள் தூத்துக்குடி, நெல்லை, கன்னியா குமரி, திண்டுக்கல், ராமநாதபுரம், மதுரை, தேனி, திருச்சி, கோவை மாவட்டங் களைச் சேர்ந்தவர் களாவார்கள். 

கேரளாவில் இவர்கள் திருவனந்த புரம், கொல்லம், புணலூர், கங்கனாச்சேரி, கோட்டயம், கோழிக் கோடு, பாலக்கோடு ஆகிய நகரங் களை தேர்வு செய்தி ருந்தனர்.

எப்படியும் தமிழ் நாட்டில் தான் தேர்வு மையம் போடுவார்கள் என்ற நம்பிக்கை யில் முதலாவது விருப்ப தேர்வு மையமாக 

தமிழக நகரையும் 2-வது, 3-வது விருப்ப தேர்வு மையமாக கேரளாவில் உள்ள நகரங் களையும் பெரும் பாலானவர் கள் குறிப்பிட்டி ருந்தனர். 

தமிழ் நாட்டில் தேர்வு மையம் கிடைக்காத நிலையில் வெளி மாநிலங்கள் ஒதுக்கீடு செய்யப் பட்டதும், 1500 மாணவர் களும் தவிப்புக் குள்ளாகி விட்டார்கள்.

தமிழ் நாட்டில் தேர்வு மையம் ஒதுக்கக் கோரி ஐகோர்ட்டு உத்தர விட்டதும், இவர்கள் அனைவரும் வெளி மாநிலங் களுக்கு செல்ல வேண்டிய நிலை வராது என்ற உறுதியான நம்பிக்கை யுடன் இருந்தனர். 
ஆனால் சுப்ரீம் கோர்ட்டு, தமிழக மாணவர்கள் மற்ற மாநிலங் களுக்கு சென்றே நீட் தேர்வை எழுத வேண்டும் என்று உத்தர விட்டதால் தமிழக மாணவர்கள் 1500 பேரும் கடைசி கட்ட நெருக்கடிக் குள்ளானார் கள்.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு காரண மாக கேரளாவுக்கு 1,200 மாணவர்கள் செல்ல வேண்டிய நிலை ஏற்பட் டுள்ளது. 

தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், ஈரோடு பகுதியைச் சேர்ந்த 190 பேர் கர்நாடகா வுக்கும், சென்னை, வேலூர், கிருஷ்ண கிரியைச் சேர்ந்த 110 பேர் ஆந்திராவு க்கும் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. 

சில மாணவர்கள் மட்டும் ராஜஸ்தான், சிக்கிம் சென்று கொண்டிருக் கிறார்கள்.நீட் தேர்வுக் காக வெளி மாநிலங் களுக்கு செல்லும் 1,500 மாணவர் களுக்கும் 2 வி‌ஷயங்கள் பெரிய பிரச்சினை யாக உருவெடுத்தது. 

ஒன்று தொலை தூர பயணம், இரண்டாவது தங்கும் இட வசதி, மூன்றாவது தேர்வு மையத்தை கண்டு பிடிக்கும் அலைச்சல். 

இந்த மூன்று வித பிரச்சினைகளும் சேர்ந்து 1,500 மாணவ- மாணவிகளுக்கு கடும் மன உளைச் சலை ஏற்படுத்தின. 

இரு தினங் களுக்கு முன் இந்த விவகாரம் பூதாகர மாக சர்ச்சையை ஏற்படுத்தி விவாதத் துக்குரிய தாக மாறியது. 

இதைத் தொடர்ந்து வெளி மாநிலங் களுக்கு நீட் தேர்வு எழுத செல்லும் மாணவ- மாணவி களுக்கு ஏராளமான தனியார் அமைப்பு களும், தமிழ்ச் சங்கங் களும் போட்டி போட்டு உதவி களை வாரி வழங்க முன் வந்தன.
குறிப்பாக கேரளா வில் இருந்து ஏராளமான உதவிகள் அறிவிப்பு வந்தன. கேரளா முதல்- மந்திரி பினராயி விஜயன், 

தமிழக மாணவர் களுக்கு உதவ முக்கிய பஸ், ரெயில் நிலை யங்களில் உதவி மையங்கள் அமைக்கப் படும் என்று அறிவித்தார்.

தமிழக அரசும் வெளி மாநிலங் களுக்கு நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர் களுக்கு பயணக் கட்டணத் துடன் ரூ.1000 வழங்கப் படும் என்று அறிவித்தது. 
இன்று வெளி மாநிலங் களுக்கு புறப்பட்டு சென்ற நிலையில் உடனடி யாக பெரும் பாலான மாணவர் களால் அந்த தொகையை பெற இயல வில்லை. 

எனவே தேர்வு எழுதி விட்டு வந்த பிறகு அரசு அறிவித்துள்ள உதவித் தொகையை பெற்றுக் கொள்ள லாம் என்று அறிவுறுத்தப் பட்டுள்ளது.

இந்த நிலையில் தனியார் மற்றும் தன்னார்வ அமைப்புகள் சமூக வலைத் தளங்களில் வெளியிட்ட அறிவிப்பை நம்பி மாணவர்கள் இன்று காலை வெளி மாநிலங் களுக்கு புறப்பட்டு சென்றனர். 

சில நகரங்களில் மாணவர் களுக்கு எதிர் பார்த்த உதவிகள் கிடைத்தன. சில மாநிலங் களில் சில நகரங்களில் தமிழக மாணவர் களுக்கு உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது. 
குறிப்பாக எர்ணா குளத்தில் பல மாணவ- மாணவிகள் தங்கும் இட வசதி கிடைக் காமல் அவதிகுள்ளானார்கள். அவர்கள் உதவி மையங் களின் தொலை பேசி எண்கள் மூலம் உதவி பெற்று வருகிறார்கள்.

நாளை தேர்வு எழுத உள்ள நிலையில் சுமார் 1500 மாணவர்கள் பயணம் மற்றும் தங்கும் இடவசதி பிரச்சினை யால் சற்று கவனச் சிதறலுக்கு உள்ளாகி இருக்கி றார்கள்.
Tags: