காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப் பட்டனர் | Three terrorists were shot dead in Kashmir !

ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரின் புறநகர் பகுதியான டபேலா சட்டபால் என்ற 


பகுதியில் சில பயங்கர வாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையி னருக்கு தகவல் வந்தது.

இதை யடுத்து, அந்த பகுதியை இன்று காலை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். 

அவர்கள் மீது பயங்கர வாதிகள் துப்பாக்கி களால் சுட்டு தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் எதிர் தாக்குதல் நடத்தினர். 

சிலமணி நேரம் நீடித்த துப்பாக்கிச் சண்டையில் மூன்று பயங்கர வாதிகள் சுட்டுக் கொல்லப் பட்டனர்.

துப்பாக்கி சண்டை நடைபெற்ற பகுதியில் வேகமாக வந்த ஒரு வாகனம் விபத்துக் குள்ளானதில் ஆடில் அஹமத் யாடூ என்பவர் உயிரிழந்தார்.

கொல்லப் பட்ட பயங்கர வாதிகளிடம் இருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் வெடி குண்டுகள் கைப்பற்றப் பட்டது. 

இந்த மோதலில் துணை ராணுவப் படையை சேர்ந்த ஒரு வீரர் காய மடைந்தார். 

தொடர்ந்து அங்கு துப்பாக்கி சண்டை நீடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி யுள்ளன.
Tags:
Privacy and cookie settings