சொட்டுத் தண்ணீர் இல்லாமல் போன பெரு நகரம் !

0
இது கடந்த டிசம்பர் மாதம் வந்த அறிவிப்பு.

குடி தண்ணீர் - 2 லிட்டர்.

சமையலுக்கு - 4 லிட்டர்.

2 நிமிட குளியலுக்கு - 20 லிட்டர்.

துணி துவைக்க & பாத்திரம் கழுவ - 23 லிட்டர்.

கழிவறை உபயோக த்துக்கு - 27 லிட்டர்.

இன்னும் பிற தேவை களுக்கு - 4 லிட்டர்.

ஒரு நாளைக்கு சேமிக்க வேண்டியவை - 7 லிட்டர்.

Think Water. Think Less than 87 Litres a Day.

ஆம்...ஒரு நாளைக்கு ஒருவர் 87 லிட்டர் தண்ணீரை மட்டுமே உபயோகிக்க வேண்டும் என்று கடந்த டிசம்பர் மாதம் சட்டம் போடப்பட்டது. 

சொட்டுத் தண்ணீர் இல்லாமல் போன பெரு நகரம் !
மீறினால், அபராதத் தொகையோடு தண்டனை. அதிர்ச்சி யடைய வேண்டாம்... அது டிசம்பர் மாதம்.

இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்பிரிக்கா வில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறது. 
இந்திய கிரிக்கெட் அணியினர் 2 நிமிடங் களுக்கு மேல், குளிக்க தண்ணீர் பயன்படுத்தக் கூடாதென அதிகார பூர்வமாக அறிவிக்கப் பட்டது.

இப்பொழுது பிப்ரவரி 1 முதல் அதை இன்னும் குறைத்து ஒரு நாளைக்கு ஒருவருக்கு 50 லிட்டர் மட்டுமே உபயோகிக்க வேண்டும்! 

இப்பொழுதும் அதிர்ச்சி யடைய வேண்டாம்... நீங்கள் அதிர்ச்சி யடைய இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன.

உலகிலேயே முதன் முறையாக ஒரு பெரு நகரம் முற்றிலும்... முற்றிலும் என்றால் எதுவுமே இல்லாமல்... கொஞ்சம் கூட இல்லாமல்... 

சில சொட்டுக் கூட இல்லாமல் முற்றிலு மாக தண்ணீரில்லா நிலைக்குப் போகப் போகிறது. 
மிக விரைவில் எட்டப்பட விருக்கும் இந்த நாளை ஆங்கில த்தில் "டே ஜீரோ" (Day Zero) என்று சொல்கி றார்கள். 

வரும் ஏப்ரல் மாதம் 12-ம் தேதி அல்லது 21-ம் தேதி... இந்த நாளை எட்டி விடும் தென்னாப்பிரிக்கா வின் கடற்கரை நகரமான கேப்டவுன் (Cape Town).
தண்ணீர் பால் தான் நல்லது? உண்மையா?
கூடுதலாக வீணடிக்கப் படும் , அதாவது உபயோகப் படுத்தும் ஒவ்வொரு லிட்டரு க்கும் அபராதம் விதிக்கப் படுகிறது. 

இந்திய மதிப்பில் ஒரு லிட்டருக்கு 25,000 ரூபாய். இது டிசம்பருக் கான அபராதத் தொகை.

அந்த நாள் முதல் நகரின் எந்தக் குழாய் களிலும் தண்ணீர் வராது. அதனால், நகர் முழுக்க 200-க்கும் அதிகமான "தண்ணீர் பெறும் மையங்களை" அமைத்தி ருக்கிறது அரசு. 

வெளியி லிருந்து கொண்டு வரும் தண்ணீரை அதில் நிரப்பு வார்கள். வரிசையில் நின்று பெற்றுக் கொள்ளலாம். ஒரு நாளைக்கு ஒருவருக்கு 25 லிட்டர் மட்டுமே.

நீச்சல் குளங்களை நிரப்புவது, தோட்டத்து க்குத் தண்ணீர் விடுவது, கார்களை கழுவுவது எனத் தண்ணீர் உபயோகி க்கும் பல விஷயங் களுக்கும் தடை விதித் துள்ளது அரசு. 

ஒரு நாளைக்கு 2 நிமிடத்துக்கு மேல் யாரும் குளிக்கக் கூடாது. சில நாள்கள் குளிக்காமல் இருந்தால் இன்னும் சிறப்பு.
அதே போல் வறட்சிக் கட்டணம் வசூலி க்கிறது கேப்டவுன் நிர்வாகம். ஒவ்வொரு வீட்டுக்கும் மாதத்துக்கு 200 ரூபாய் வறட்சிக் கட்டணம் கட்ட வேண்டும்.
சேலஞ்சிற்கு மறுத்த நபரின் வங்கி கணக்கை வெளியிட்டு மிரட்டிய மோமோ !
கேப்டவுனு க்குப் பல காலமாக உயிர் ஆதாரமாக இருந்த தீவாட்டர்ஸ்க்லூஃப் (Theewaterskloof) அணை 10%க்கும் குறைவான நிலையை எட்டி பல மாதங்களா கிவிட்டன. 

நகருக்குத் தண்ணீர் வழங்கும் வாய்ப்பைக் கொண்டி ருக்கும் இன்னும் சில அணைகளும் 15% வந்து விட்டன. அது 13.5% எனும் நிலையை எட்டும் போது, "டே ஜீரோ" நிகழும்.

கேப்டவுன் வறட்சி

இது ஏதோ திடீரென எட்டப் பட்டு விட்ட நிலை அல்ல...கடந்த மூன்றாண்டு களாகவே மிகக் கடுமை யான வறட்சி யில் சிக்கி சின்னா பின்னமாகிக் கொண்டி ருந்தது கேப்டவுன். 

ஆனால், பிரச்னையைத் தீர்க்க அரசாங்கம் பெரும் முயற்சி களை எடுக்க வில்லை... அரசாங்கம் எடுத்த முயற்சி களுக்கு மக்களிடம் ஒத்துழைப்பு இல்லை. 

"இன்றைய நாள் தண்ணீர் இருக்கு... என்றோ வரும் நாளுக்காக..யாரு க்காகவோ... நான் ஏன் சிக்கன மாகத் தண்ணீரைக் கையாள வேண்டும்?" என்ற எண்ணம். இதோ வந்தே விட்டது அந்நாள்! 

சொட்டுத் தண்ணீர் இல்லாமல் போன பெரு நகரம் !
கல்விக்கூடங்கள் தண்ணீரி ல்லாமல் எப்படி நடக்கும்? மருத்துவ மனைகளின் நிலை? எதுவுமே தண்ணீரி ல்லாமல் எப்படி இயங்கும்? 

கேப்டவுனின் மொத்த மக்கள் தொகை 40 லட்சத்துக்கும் அதிகம்... அரசோடு இணைந்து பல சர்வதேச தன்னார்வத் தொண்டு நிறுவனங் களும் 
தினமும் சிறிதளவு ஒரு கோப்பை மது ஆரோக்கியமா?
இந்தப் பேரிடரைச் சமாளிக்க களத்தில் இறங்கி வேலை களைச் செய்து வருகின்றன. ஆனாலும், அதெல்லாமே தற்காலிக மாக

மக்களுக் கான நீரைக் கொடுக்கும்? நிரந்தரத் தீர்வுதான் என்ன?

காரணம்? எல்லாம் தான். பூமி வெப்ப மயமாதல், அரசியல், அரசு, மக்கள்...

சமீபத்தில் வெளியிடப் பட்டிருக்கும் ஒரு சர்வதேச ஆராய்ச்சி இப்படி யாகச் சொல்கிறது...

இந்த சர்வதேச சமூகம், உலக வெப்பத்தை பாரீஸ் ஒப்பந்த த்தின் படி 2 டிகிரி செல்சியஸைக் கடக்காத வகையில் பாதுகாத் தாலும் கூட... 

இதுவரை ஏற்படுத்திய காயங் களுக்கான கேடுகளைச் சந்திக்கத் தான் வேண்டி யிருக்கும். 

இதுவரை நாம் ஏற்படுத்தி யுள்ள பாதிப்பு களின் காரண மாக இந்த பூமியின் கால்பங்கு பகுதி யாவது கடும் வறட்சிக்குத் தள்ளப்படும்" என்று சொல்லி யிருக்கிறது. 
கேப்டவுனின் வறட்சி தண்ணீர் பிரச்னை மட்டுமே அல்ல. அது சமூகப் பொருளாதாரப் பிரச்னை. சர்வதேச அரசியல் பிரச்னை. உணவுப் பஞ்ச பிரச்னை. 
முதல் நாளே 40,000 வாடிக்கையாளர்கள் `ஐக்கியா’-வில்?
இந்த பூமியின் பிரச்னை. நமக்கு என்ன இதனால்? நமக்கு தான் இன்று குடிக்க தண்ணீர் இருக்கிறதே? என்று நிம்மதி பெருமூச்சு விடுபவர் களுக்குப் பெரும் அபாய மணியை அடிக்கி றார்கள் சூழலியலா ளர்களும், 

ஆராய்ச்சி யாளர்களும்... கேப்டவுன் வெறும் ஆரம்பம் மட்டும் தான். உலகின் பல பெரு நகரங் களும் இந்த நிலைக்கு இன்னும் சில வருடங் களில் வரும்...
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings