அரசியல் கடினம் என்பதை ரஜினி உணர்வார்... செல்லூர் ராஜூ !

0
அரசியலுக்கு வருவதை இன்று உறுதி செய்த நடிகர் ரஜினிகாந்த், இது காலத்தின் கட்டாயம் என்று கூறினார். 
அரசியல் கடினம் என்பதை ரஜினி உணர்வார்... செல்லூர் ராஜூ !
வரும் சட்டசபை தேர்தலுக்கு முன் தனிக்கட்சி துவங்கி, 234 தொகுதி களிலும் போட்டியிட உள்ளேன் என்று கூறி யுள்ளார். 

இதுகுறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் செல்லூர் ராஜூ இது ஐனநாயக நாடு, யார் வேண்டு மானலும் அரசியலுக்கு வரலாம். 

தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை கூறிய ரஜினி முதலில் மக்கள் பணி யாற்றட்டும். அரசியல் இயக்கத்தை நடத்துவது எவ்வளவு கடினம் என்பதை இனி அவர் உணர்வார். 
ஆர்.கே.நகர் தேர்தலில் பல கட்சிகளோடு சேர்ந்து போட்டி யிட்டும் திமுகவுக்கு டெபாசிட் காலியாகி விட்டது. 

தினகரனின் வெற்றியும் நிரந்தர மானதல்ல, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா வால் உருவாகிய மாபெரும் கட்சியான அதிமுகவை ரஜினியால் மட்டுமில்ல வேறு யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என்றார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings