புத்தாண்டுக்கு காவல் துறையின் கட்டுப்பாடுகள் !

0
உலகம் முழுவதும் புத்தாண்டு தயாரிப்புகள் நடந்து வருகிறது. ஆனால் அதே நேரத்தில் பெரு நகரங்களில் புத்தாண்டு கொண்டா ட்டத்தின் 
புத்தாண்டுக்கு காவல் துறையின் கட்டுப்பாடுகள் !
போது ஏதாவது அசம்பாவித சம்பவங்கள் நடந்து அதனை சீர் குலைக் கின்றன. இதனை தடுக்க சென்னையில் காவல்துறை அதிரடியில் இறங்கி யுள்ளது.

சென்னையில் புத்தாண்டு கொண்டாட் டத்துக்கு நட்சத்திர ஹோட்டல்கள், கிளப்புகள் போன்றவற்றக்கு காவல்துறை 14 நிபந்தனை களை விதித்துள்ளது. 

இதனை மீறுபவர் களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என எச்சரித் துள்ளது.

காவல் துறையின் 14 நிபந்தனைகள்:

1. பொழுது போக்கு இடங்களில் புத்தாண்டை கொண்டாட அனுமதி கோரி விண்ணப்பிப் போருக்கு 31.12.2017 மாலை 6 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை சிறப்பு உரிமம் வழங்கப்படும். 

நள்ளிரவு 1 மணியுடன் நட்சத்திர ஹோட்டல்கள், கேளிக்கை விடுதிகளில் உணவு வழங்குதல் மற்றும் மதுபான விற்பனையை நிறுத்திக் கொள்வதுடன் கொண்டாட்டங் களையும் முடித்துக் கொள்ள வேண்டும்.
2. நட்சத்திர ஹோட்டல், உணவு விடுதிகள், கேளிக்கை விடுதி களுக்கு வரும் வாகனங்கள் முறையாகச் சோதனை செய்யப்பட வேண்டும். 

அனைத்து நுழைவு வாயில் களிலும் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப் பட்டு வாகனங்களின் விபரங்கள் பதிவு செய்யப்பட வேண்டும்.

3. அனுமதி வழங்கப் பட்டுள்ள இடங்களைத் தவிர மற்ற இங்களில் மதுவகை களைப் பரிமாறக் கூடாது.

4. நீச்சல் குளத்தின்மீதோ அதன் அருகிலோ தற்காலிக மேடைகள் அமைத்தல் கூடாது.

5. கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்துவ தற்காகத் தற்காலிக மேடைகள் அமைக்கப்படும் பட்சத்தில் 
மேடையின் உறுதித் தன்மையை உறுதி செய்யும் வண்ணம் சம்பந்தப் பட்ட துறைகளி லிருந்து தகுதிச் சான்றிதழ் பெறப்பட வேண்டும்.

6. நீச்சல் குளங்களை 31.12.2017 அன்று மாலை 6 மணி முதல் 1.1.2018 காலை 6 மணி வரை மூடி வைத்திருக்க வேண்டும்.

7. விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வெளி நாட்டைச் சேர்ந்தவர் களின் விபரங் களைச் சம்பந்தப் பட்ட ஹோட்டல் நிர்வாகம் சரிபாக்க வேண்டும்.

8. கேளிக்கை நிகழ்ச்சிகள் நடக்கும் அறையில் ஈவ்டீசிங் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க ஹோட்டல் நிர்வாகத்தினர் போதிய பணியாளர் களை நியமித்து கண்காணிக்க வேண்டும்.
9. நீச்சல் குளத்துக்குச் செல்லும் வழிகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்புத் தடைகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

10. அனுமதிக்கப் பட்ட எண்ணிக் கைக்கும் கூடுதலாக விருந்தினர் களை நிர்வாகிகள் உள்ளே அனுமதிக்க கூடாது.

11. மது அருந்தி விட்டு வாகனங்கள் ஓட்டுவதைத் தவிர்க்க வேண்டும். மது அருந்தி விட்டு வெளியே வரும் விருந்தினர் களை மாற்று வாகனம் மூலும் அனுப்பி வைக்க நிர்வாகிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.

12. குடிபோதை யில் அத்துமீறல் செயல் களில் ஈடுபடு பவர்களை விடுதி நிர்வாகம் உடனடி யாக அப்புறப் படுத்துதல் வேண்டும்.
13. நிர்வாகத் தினர் கேளிக்கை நிகழ்ச்சிகள் மிகுந்த நாகரிகத் துடனும் கண்ணியத் துடனும் நடத்து வதற்குத் தேவையாக முன் எச்சரிக்கை நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும்.

14. விதிமுறை களை மீறும் விடுதி நிர்வாகத் தினர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings