நினைவுகள் யாவும் மூளையில் இருந்து மறக்காமல் இருக்க !

0
சற்று முன் கேட்ட டெலிபோன் நம்பரை உடனே திருப்பிச் சொல்ல முடிகிறது. ஒரு மணி நேரம் கழித்து அதே நம்பர் மறந்து விடுகிறது.
நினைவுகள் யாவும் மூளையில் இருந்து மறக்காமல் இருக்க !
ஆனால் நமது சொந்த டெலிபோன் எண், பிறந்த தேதி போன்ற நம்பர்கள் என்றும் மறப்ப தில்லை. ஏன் இப்படி?

நமக்கு இரண்டு வித ஞாபகசக்தி இருக்கிறது. தற்காலிக நினைவு மற்றது நிரந்தர நினைவு. நினைவுகள் யாவும் மூளையில் நரம்பு செல்களில் சேமிக்கப் படுகின்றன. 
ஒரு டெலிபோன் நம்பரைக் கேட்டதும் அதற்கான ஒரு நரம்புக் கூட்டம் உடனே அதைப் பதிவு செய்வதில் முனைகிறது.

இந்த நரம்புக் கூட்டத்தை "ட்ரேஸ்' என்று (Trace) கூப்பிடுகிறார்கள். நமக்கு தற்காலிக நினைவுக் கென்று 

ஒரு ட்ரேஸும் அதே சமயம் நிரந்தர நினைவுக் கென்று இன்னொரு ட்ரேஸும் ஒரே சமயத் தில் மூளையில் உருவா கிறது.

மூளையில், தற்காலிக ட்ரேஸானது காம்மா கதுப் பிலும் நிரந்தர ட்ரேஸ்கள் ஆல்ஃபா பீட்டா என்ற கதுப்பிலும் காணப் படுகின்றன. இதே அமைப்பு ஈக்களி லும் காணப் படுகிறது என்றால் நம்ப முடிகிறதா?
நினைவுகள் யாவும் மூளையில் இருந்து மறக்காமல் இருக்க !
ஒரு சம்பவ த்தை அல்லது தகவலை முதல் முறையாக கேட்கும் போது அல்லது படிக்கும் போது அது இரண்டு வித டிரேஸிலும் பதிகிறது. 

தற்காலிக டிரேஸ் வேகமாக உருவா னாலும் அது உடனே கலைந்து விடுகிறது. நிரந்தர டிரேஸ் மெல்ல ஆசுவாச மாக உருவாகிறது.

அது முடிவடைய வேண்டு மானால் மீண்டும் அதே சம்பவ த்தை அல்லது படித்ததை நாம் அனுபவிக்க வேண்டும். 

நிரந்தர டிரேஸ் நரம்புக் கூட்டம், இரண்டாம் முறை, மூன்றாம் முறை தூண்டப்படும் போது அதன் டிரேஸ் முற்றுப் பெறுகிறது. முற்றுப் பெற்றதும் அது நிரந்தர நினைவாகி விடுகிறது.
தற்காலிக டிரேஸ் எத்தனை முறை தூண்டப்பட்டாலும், அது உடனே கலைந்து விடுகிறது. 

ஈக்குக் கூட தற்காலிக, நிரந்தர நினைவுகள் இருக்கிறது என்று கோல்டு ஸ்பிரிங் ஹார்பர் ஆய்வுக் கூடத்தின் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
நினைவுகள் யாவும் மூளையில் இருந்து மறக்காமல் இருக்க !
ஈயை சின்னக் குழாயில் வைத்து அதில் கெட்ட நாற்றமுடைய காற்றை அனுப்பும் போது கூடவே லேசாக மின்சார ஷாக் கொடுப்பார்கள். 

அதற்கப்புறம் ஈக்கு ஷாக் கொடுக்கும் போதெல்லாம் துர் நாற்றக்காற்றை அந்த ஈ எதிர் பார்க்கும்.

அல்லது துர்நாற்றக் காற்று வரும் போதெல்லாம் ஷாக் அடிக்குமோ என்று அஞ்சும். ஈயின் காம்மா கதுப்பிலும் ஆல்ஃபா பீட்டா கதுப்பிலும் 

இந்த அனுபவம் பதிகிறது என்று தெரிந்து கொண்டனர். நுட்பமான கத்தி மூலம் இந்த கதுப்புகளை ஒவ்வொனறாக வெட்டி நீக்கும் போது அதற்கேற்ப தற்காலிக அல்லது நிரந்தர நினைவுகள் மறை வதைக் கவனி த்தனர்.

ஒரு படி மேலே சென்று, நிரந்தர நினைவினை சேமிக்க உதவும் என்ஸை மினையும் அதற்கான ஜீனையும் கண்டுபிடித்தனர். 

என்ன ஆச்சரியம்! மனிதர்களுக்கும் கூட அதே ஜீனும் அதே என்ஸைமும் இருக்கிறது. நினை வினை சேமிக்கும் தந்திரம் ஈயில் தோன்றி பின் மனிதன் வரை வளர்ந்தி ருக்கிறது என்று தோன்றுகிறது.
நினைவுகள் யாவும் மூளையில் இருந்து மறக்காமல் இருக்க !
மாணவர்களுக்கு மட்டு மல்லாமல் எல்லாருக்கும் ஒரு சேதி; எதை நீங்கள் நிரந்தரமாக நினைவில் பதித்துக் கொள்ள விரும்புகிறீர்களோ 

அதை முதலில் தற்காலிக மாக நினைத்துப் பாருங்கள் மீண்டும் அதை மறுபடி மறுபடி மூன்று முறையாவது 

கொஞ்ச நேரம் இடைவெளி விட்டு நினைவு கூட்டிப் பாருங்கள் அப்புறம் அது மறக்கிறதா என்று பாருங்கள். மறக்க மாட்டீர்கள் அதற்கு நான் கியாரண்டி.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)