நார்ச்சத்தால் கிடைக்கும் பலன்கள் !

உடல் ஆரோக்கியத்துக்குச் சரிவிகித ஊட்டச்சத்து அவசியம். கொழுப்பு, கார்போ ஹைட்ரேட், புரதம், கால்சியம், நார்ச்சத்து, வைட்டமின்கள் என ஒவ்வொரு சத்தும் உடலுக்கு அவசியமே.
நார்ச்சத்தால் கிடைக்கும் பலன்கள் !
ஒவ்வொரு சத்தும் ஒரு வேலையைச் செய்கிறது. ஒவ்வொரு பகுதிக்கும் அரணாகச் செயல்படுகிறது. எந்தவொரு சத்தாக இருந்தாலும் அதைப் போதுமான அளவு எடுத்துக் கொள்வது அவசியம்.

இதயம், உடலின் வளர்சிதை மாற்றம் மற்றும் ரத்தச் சர்க்கரை அளவு போன்றவை சீராக இருக்க நார்ச்சத்து அவசியம். ஒரு நாளை க்குப் பெண் களுக்கு 20 – 30 கிராமும், ஆண் களுக்கு 30 – 40 கிராமும் நார்ச் சத்து அவசியம். 

ஒவ்வொரு 70 கிலோ கலோரியையும் ஒரு கிராம் நார்ச்சத்து சமன் செய்யும் என்றாலும், நாம் அளவுக்கு அதிகமான நார்ச்சத்துள்ள உணவுகளையே எடுத்துக் கொள்கிறோம். 

இதனால் ஏற்படும் உடல் பாதிப்புகள் பற்றிப் பார்ப்போம்.

நார்ச்சத்து அவசியம்
நாம் உண்ணும் உணவு செரிமானமாகிச் சிறுகுடல், பெருங்குடல் மற்றும் மலக்குடல் வழியாகச் சென்று கடைசியில் நச்சு மலமாக வெளியேறும். 

இந்தப் பாதையின் ஒவ்வொரு பகுதியிலும் உணவில் உள்ள சத்துகளை உடல் கிரகித்துக் கொள்ளும். இந்த உணவை உடல் கிரகித்துக் கொள்வதில் நார்ச் சத்துக்கு முக்கியப் பங்கு உள்ளது.

உண வில் உள்ள கொழுப்பு மற்றும் சர்க்கரையின் அளவு ரத்த நாளங்களால் அதிக அளவில் உறிஞ்சப் படுவதை நார்ச்சத்து தடுத்து, உணவில் உள்ள நல்ல சத்து களை ரத்தத்தின் வழியாக உள் உறுப்புகளுக்கு அனுப்பு கிறது. 
உடலுக்குத் தேவையற்ற நச்சுகளைக் குடல் பாதையின் வழியாக வெளியேற்ற உதவுகிறது. மேலும், உடலுக்குத் தேவையான நீர்ச்சத்தைப் பெறவும் உதவுகிறது. 

குடல் பாதையில் நச்சுகளை வெளியேற்றுவதில் நீருக்கு முக்கியப் பங்கு உண்டு. இதனால் வெளி யேற்றப்படும் மலத்தின் அளவு அதிகரித்து, செரிமான மண்டலம் சீராகச் செயல்பட உதவுகிறது. 

செரிமான மண்டலத்தில் நச்சு இருக்கும் கால அளவைக் குறைக்க உதவுவதுடன், மலச்சிக்கல் ஏற்படுவதையும் தடுக்கிறது.

வகைகள்

கரையக் கூடிய நார்ச்சத்துகள் மற்றும் கரைய முடியாத நார்ச்சத்துகள் என இரண்டு வகை நார்ச்சத்துகள் அனைத்து உணவிலும் உள்ளன. 

இவை இரண்டும் உடலுக்கு நல்லது. கரையக் கூடிய நார்ச்சத்துகள்: பீன்ஸ், ஓட்ஸ், அவரை வகைகள் மற்றும் பார்லி போன்ற உணவுப் பொருள்களில் காணப்படும். இதயத்தைக் காக்கும். சீரான ரத்த ஓட்டத்துக்கு உதவும்.

கரைய முடியாத நார்ச்சத்துகள்: முழுக் கோதுமை, சோளம் மற்றும் சணல் விதைகளில் இவை காணப்படும். இவை மலத்தைச் சிரமமின்றி வெளியேற்ற உதவும்.
உடலுக்குத் தேவையான அளவு நார்ச்சத்து எடுத்துக் கொள்வதால் கிடைக்கும் பலன்கள்

உடலுக்குத் தேவையான சத்துகளை உணவிலிருந்து பிரித்து, நச்சுகளைக் குடல் பாதையின் வழியாக வெளியேற்றுகிறது. செரிமான மண்டலம் சீராகச் செயல்பட உதவுகிறது.

போதிய அளவு நார்ச்சத்து இருந்தால் தான் உடலுக்குத் தேவையான நீர்ச்சத்து இருக்கும். உடலுக்குத் தேவையான அளவு நீர்ச்சத்தினைப் பெற உதவுகிறது.

உடலில் உள்ள கொழுப்பைக் குறைப்பதுடன், உடல் பருமனைக் குறைக்க உதவுகிறது. ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. 

டைப் 2 சர்க்கரை வராமல் காக்கக் கூடியது. மாரடைப்பு, நெஞ்சு வலி போன்ற இதயம் தொடர்பான நோய்கள் வராமல் தடுக்கும். வயிற்றில் நல்ல பாக்டீரி யாக்களை உண்டாக்குவதோடு, மலச்சிக்கல் பிரச்னையைப் போக்கும்.
மூளையில் ஏற்படும் பக்கவாதத்தைத் தடுக்கும். வயிறு மற்றும் குடல் புற்று நோய்கள் வராமல் காக்கும். உடலானது, உணவில் உள்ள கால்சியம் மற்றும் புரோட்டீன் சத்தினைப் பெற உதவுகிறது. 

தசைகளின் வளர்ச்சிக்கு உதவும். எலும்பின் வளர்ச்சியை அதிகரிக்கும். வாழ் நாளை அதிகரிக்கும்.
Tags: