ஓட்டுநர் பயிற்சி என்பது... மூலதனமா?

வாகனம் ஓட்டுவது பெண்ணுக்குச் சுதந்திர உணர்வை அளிக்கக் கூடியது. தான் அனுபவிக்கும் அந்த உணர்வை மற்றப் பெண்களும் உணர உதவுகிறார் சென்னையைச் சேர்ந்த பாரதி.
ஓட்டுநர் பயிற்சி என்பது... மூலதனமா?
இவர் கடந்த மூன்றரை ஆண்டுகளாக பெண்களுக்கு மட்டும் கார், இருசக்கர வாகனம் போன்றவற்றை ஓட்டுவதற்குப் பயிற்சி யளித்து வருகிறார்.

ஆர்வமே மூலதனம்

'நாம் எப்போதும் மற்றவர்களுக்குச் சுமையாக இருக்கக் கூடாது. பள்ளி நாட் களில் பகுதி நேர வேலைகளைச் செய்து பள்ளிக் கட்டணம், புத்தகம் போன்ற தேவை களை நானே பார்த்துக் கொண்டேன். 

பி.காம். படித்துக் கொண்டே மார்கெட்டிங் துறையில் வேலை செய்திருக்கிறேன். அப்போது தான் கார் ஓட்டக் கற்றுக் கொண்டேன். 

திருமணத்துக்குப் பிறகு உருவான சூழ்நிலை என் வாழ்வை மாற்றி விட்டது. கைக்குழந்தையுடன் என் பெற்றோர் வீட்டி லேயே தங்க வேண்டிய நிலை. அந்த நாட்கள் மிகவும் வலி மிகுந்தவை. 

அப்போது தான் இப்படி சும்மா இருக்கக் கூடாது, தைரியமாக ஏதாவது ஒரு விஷயத்தைச் செய்ய வேண்டும் என முடிவு செய்தேன் என்று இந்தத் துறைக்கு தான் வந்த கதையைச் சொல் கிறார் பாரதி.
கார் ஓட்டு வதையே மூலதன மாக மாற் றினார். மற்றவர்களுக்குக் கார் ஓட்டக் கற்றுத் தர முடி வெடுத்தார். இரண்டு மாதக் குழந்தையை வீட்டில் விட்டு விட்டு

ஒவ்வொரு டிரைவிங் ஸ்கூலாக சென்று வாய்ப்பு கேட்டார். பெண் பயிற்று நர்கள் குறைவாக இருப்ப தால் பாரதியைத் தேடி வாய்ப்புகள் வந்தன.

முயன்றால் முடியும்

இது வரை 300- க்கும் மேற்பட்ட பெண் களுக்கு இரு சக்கர வாகனப் பயிற் சியும், ஆறுபது பேருக்கு மேல் கார் ஓட்டுவ தற்கான பயிற் சியும் வழங்கி யிருக்கி றார் பாரதி.

குழந்தை களைப் பள்ளி க்கும் மாலை நேர வகுப்பு களுக்கும் அழைத்துச் செல்வது, பொருட்கள் வாங்க வெளியே செல்வது

போன்ற வற்று க்குத் தங்கள் வீட்டு ஆண் களையே நம்பி யிருக்க முடியாத நிலையில் பலர் இருசக்கர வாகனம் ஓட்டக் கற்றுக் கொள்கி றார்கள்.

கணவன், மனைவி இருவரும் வேலை க்குப் போகும் வீடுகளி லும் பெண் களுக்கு இருசக்கர வாகனம் அத்தியா வசியத் தேவை யாக இருக்கிறது.
“ஒருவர் 15 நாளி லேயே கார் ஓட்டக் கற்றுக் கொள்ள லாம். ஆனால், கொஞ்சம் பயம் உள்ள பெண்கள் மட்டும், தங்கள் மேல் முழு நம்பிக்கை வரும் வரை பயிற்சி எடுத்துக் கொள் வார்கள்.

பயிற்சி யின் போது சில பெண்கள் ஏதாவது தவறு செய்து விட்டால் ‘அவ்வளவு தான் நமக்கு இது சரிப்பட்டு வராது’ என்ற

முடிவுக்கு வந்து விடுவார்கள். சாலை விதிகள் குறித்துத் தெளிவு இல்லாத தாலும் பல பெண்கள் கார் ஓட்டத் தயங்குகிறார்கள்.

மாற்றுத் திறனாளி பெண்கள் மற்றவர்களை விட வாகனங்கள் ஓட்ட விரைவாகக் கற்றுக் கொள்வார்கள்.

என்னிடம் பயிற்சிக்கு வரும் பெண்களிடம் அவர்களைத் தான் நான் முன்னு தாரணமாகச் சொல்வேன் என்கிறார் பாரதி.
ஓட்டுநர் பயிற்சி மூலம் கிடைக்கும் வருமானத்தில் வாழ்க்கை நடத்தும் பாரதிக்குத் தனியாக ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி தொடங்க வேண்டும் என்பது கனவு. 

வாழ்க்கை தன்னைத் துரத்திய போது வீழ்ந்து விடாமல், தனக்குத் தெரிந்த தொழிலைப் பார்த்து வெற்றி நடைபோட்டு வரும் பாரதி, அந்தக் கனவையும் மெய்ப்படுத்துவார்.
Tags: