நடிகை தூக்கு போட்டு தற்கொலை !

பிரபல நடிகை தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச் சியை ஏற்படுத்தி யுள்ளது. அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் அழகான நடிகை பிடிஷா பெஸ்பரூபா (30).
நடிகை தூக்கு போட்டு தற்கொலை !
பல டிவி நிகழ்ச்சி களிலும், ஜக்கா ஜசோஸ் என்ற ஹிந்தி படத்திலும் நடித்து ள்ளார். சமீபத்தில் மும்பையி லிருந்து டெல்லியின் குர்கான் பகுதிக்கு இடம் பெயர்ந் துள்ளார்.

இந்நிலையில், பிடிஷாவின் தந்தை கடந்த திங்களன்று அவருக்கு போன் செய்துள்ளார். ஆனால், போனை எடுக்க வில்லை. 

பல முறை முயற்சித்தும் பலனில்லை. இதன் காரணமாக ஏதோ நடத்தி ருக்கிறது என்ற பயத்தில் காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு இது தொடர் பாக கூறியுள்ளார்.

அவரிடம் பிடிஷா இருக்கும் முகவரியை பெற்றுக் கொண்டு, கடந்த திங் களன்று குர்கானில் உள்ள அவரது வீட்டிற்கு போலீசார் சென்றனர். 

அங்கு கதவு பூட்டியி ருந்தது. அதன் பின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்த போது பிடிஷா, தூக்கில் பிணமாக இருந்துள்ளார். 

இதன் காரணமாக, அவரது தந்தை தனது மகள் தற்கொலை செய்தி ருக்க மாட்டாள் என்று கூறியி ருக்கிறார். மேலும், அவரது தற்கொலை குறித்து புகார் ஒன்றையும் அளித்துள்ளார்.
அந்த புகாரின் அடிப்படையில் பிடிஷாவின் மொபைல் போன், ஃபேஸ்புக் உள்பட சமூக வலை தளங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும், தேவைப்பட்டால் பிடிஷாவின் கணவரை தொடர்பு கொண்டு விசாரணை மேற்கொள் ளப்படும் என்று போலீஸ் தரப்பில் கூற ப்பட் டுள்ளது. 

ஆனால், தற்கொலைக் கான காரணம் குறித்து இதுவரை தெரிய வில்லை என்பது குறிப் பிடத் தக்கது. சமீப கால மாக நடிகை கள் தற்கொலை செய்து கொள்வது நாளுக்கு நாள் அதிக ரித்து வருகிறது.
Tags: