பைபாஸ் சிகிச்சைக்குப் பின் பின்பற்ற வேண்டிய சில வழிகள் !

அறுவைச் சிகிச்சைக்குப் பின் முதல் சில வாரங்களில் படிக்கட்டு களைப் பயன்படுத்தும் தேவை ஏற்பட்டால், அதற்குப் பதிலாக லிஃப்ட்டைப் பயன் படுத்தலாம்.
படி ஏற வேண்டிய கட்டாயம் இருந்தால் மெதுவாக ஏறிச் செல்லலாம். ஒரு சில படிகளைக் கடந்த பிறகு சிறிது ஓய்வு எடுக்க வேண்டும். மூச்சு அடைப்பது போன்று இருந்தால் ஓய்வு எடுப்பது அவசியம்.

முற்றிலும் குணமான பின்பு படிகளில் ஏறுவதை உங்களது அன்றாடச் செயல்களில் ஒன்றாகக் கருதிக் கொள்ளலாம். இந்த நிகழ்வுகள் சாதாரண மானவை தான்.

அதிக பசியின்மை, உணவை ருசிக்கும் உணர்ச்சி குறைந்து விட்டதைப் போன்றோ அல்லது ருசி உணர்ச்சியே இல்லாதது போலவோ உணரலாம். மலச்சிக்கல் ஏற்பட்டால் உடனடி யாக மருத்து வரை அணுகலாம்.

இரவில் தூங்க முடியாத வர்கள் பகலில் தூங்கு வதைத் தவிர்க்கவும். பகல் தூக்கம் உங்களின் தூங்கும் பழக்கத்தையே மாற்றி விடும். பல வகை யான குழப்ப மான உணர்ச்சிகளை அனுபவிக்க நேரிடும். கவலை, மன அழுத்தம் போன்றவை ஏற்படுவது சகஜம்.

இந்த உணர்ச்சி கள் உங் களைத் தொடர்ந்து பாதித்து தூக்க த்தைக் கெடுக்கும் நிலையில், மருத்து வரின் உதவியை நாடலாம். அறுவைச் சிகிச்சை செய்த இடத்தில் ஒரு சிறு வீக்கம் இருக்கும்.

ஆனால் நாளடை வில் மறைந்து விடும். முன் கையில் அறுவை செய்தி ருந்தால் விரல்கள் மரத்துப் போய் விடும்.
தோள் களிலோ, முதுகின் மேற் புறத்திலோ (இரு தோள் பட்டை களுக்கு இடையில்) தசையில் வலி அல்லது இறுக்கம் இருப்ப தாக உணரலாம். இதற்காக கொடுக்கப் பட்டிருக்கும் மாத்திரையைச் சாப்பிட்டு வந்தால் குணமாகி விடும்.

பாதங்களில் வீக்கம் உண்டாகும். குறிப்பாக கால்களில் துளையிடப் பட்டிருந்தாலும் வீக்கம் உண்டாகும். காலைத் தூக்கும் போது வீக்கம் குறைய லாம். நிற்கும் போது வீக்கம் தோன்ற லாம்.

வீக்கம் தொடர்ந்து இருந்து வந்தாலோ, நிலைமை மோசமாகத் தோன்றி னாலோ உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும்.
Tags: