இளம் மனைவியை கண்டு பிடித்து தருமாறு புகார் !

வேறொரு வரை திருமணம் செய்து கொண்ட தன் இளம் மனைவியை கண்டு பிடித்து தருமாறு போலீஸ் புகார் செய்துள்ளார் தானேவை சேர்ந்த சதீஷ் ஆப்தே. வயது 62. இவர் 23 வயது லிசா ஆப்தேவை கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் செய்தார். 
திருமணத்தின் போது இவர்கள் எடுத்த செல்ஃபி புகைப்படம் அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது. இதையடுத்து அவர்கள் செல்ஃபி ஜோடி என்றே அழைக்கப் பட்டனர்.

இது காதல் திருமணம் என்று சதீஷ் கூறியதால், லவ்வுக்கு வயசு ஒரு பிரச்னையே இல்லை என்று பெருமையாகக் கூறிக்கொண்டனர் அந்தப் பகுதியினர். 

ஆனால் யார் கண்பட்டதோ, இந்த ஜோடி இப்போது பிரிந்திருக்கிறது. என் மனைவி வீட்டை விட்டு வெளியேறி வேறு யாரையோ திருமணம் செய்து கொண்டார். 

இதற்கு காரணம் என் மைத்துனி மோனிகா தான். ஏனென்றால் அவருக்கும் என்னை திருமணம் செய்ய வேண்டும் என்று ஆசை இருந்தது. 

அதோடு வீட்டில் இருந்த நகைகளையும் மோனிகா எடுத்துக் கொண்டு ஓடி விட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தானே போலீசில் புகாரில் கூறியிருக்கிறார் சதீஷ்.

இதையடுத்து லிசா பெற்றோர் தரப்பிலும் புகார் கொடுக்கப் பட்டது. அதில், சதீஷ் பாலியல் ரீதியாக லிசாவை டார்ச்சர் செய்தார்.  அதோடு எங்கள் மகளை மிரட்டி திருமணம் செய்து கொண்டார் என கூறியிருந்தனர். 

இப்போது மீண்டும் புகார் கொடுத்திருக்கிறார் சதீஷ். லிசாவுக்கு என் மீது அதிக காதல் அதிகம். அவர் குடும்பத்துக்கு எங்கள் காதலில் விருப்பமில்லை. 
அதனால் அவரை குஜராத்தில் உள்ள ஒருவருக்கு ரகசியமாக திருமணம் செய்து கொடுத் துள்ளனர். லிசா இன்னும் என் மனைவி தான். நாங்கள் விவாகரத்து பெறவில்லை. 

அவரை கண்டுபிடித்துக் கொடுக்க வேண்டும் என கூறியுள்ளனர். விசாரணை நடத்தி வருகின்றனர் போலீசார்.
Tags:
Privacy and cookie settings