ஓசூரில் படப்பிடிப்புக்கு சென்று திரும்பிய நடிகை பலி !

ஓசூரில் நின்று கொண்டி ருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் படப்பிடிப்பு க்கு சென்று திரும்பிய துணை நடிகை மற்றும் டிரைவர் பலியா னார்கள். மற்றொரு துணை நடிகை படுகாயம் அடைந்தார்.
ஓசூரில் படப்பிடிப்புக்கு சென்று திரும்பிய நடிகை பலி !
இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:-

கர்நாடக மாநிலம், யஷ்வந்த்பூரை சேர்ந்தவர் பால கிருஷ்ணா சிங். இவரது மகள் அனுஷாசிங் (வயது 20). பெங்களூரு அருகே உள்ள கெங்கேரி எம்.ஏ.புரா பகுதியை சேர்ந்தவர் பவானி (20). 

துணை நடிகை களான இவர்கள் இருவரும், துபாயில் நடந்த தமிழ் திரைப்பட படப் பிடிப்பில் நடித்து விட்டு, நேற்று முன்தினம் இரவு சென்னை விமான நிலைய த்திற்கு வந்தனர்.

பின்னர் அங்கிருந்து வாடகை காரில் பெங்களூரு வுக்கு புறப் பட்டனர். சென்னை மீனம் பாக்கம் அண்ணா தெருவை சேர்ந்த ஹரி கிருஷ்ணன் (29) என்பவர் காரை ஓட்டி சென்றார்.

நேற்று அதிகாலை 5.30 மணிய ளவில் ஓசூரில், தளி ஜங்ஷன் மேம் பாலத்தில் கார் வந்து கொண்டி ருந்தது. அப்போது மேம் பாலத்தில் இருந்து வேகமாக கீழே இறங்கிய கார், 

தர்கா தேசிய நெடுஞ் சாலை யோரம் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த லாரி மீது மோதியது. இதில் காரின் முன்பகுதி சுக்கு நூறாக நொறு ங்கியது.
2 பேர் பலி

இந்த விபத்தை அந்த வழியாக சென்ற பொது மக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந் தனர். அவர்கள் கார் அருகில் சென்று பார்த்த போது காரின் முன் பகுதியில் அமர்ந் திருந்த 

துணை நடிகை அனுஷாசிங் மற்றும் டிரைவர் ஹரிகிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்தி லேயே இறந்தது தெரிய வந்தது.

காரின் பின் இருக்கை யில் அமர்ந் திருந்த மற்றொரு துணை நடிகை பவானி, படுகாயத் துடன் உயிருக்கு போராடி கொண்டி ருந்தார்.

இதை யடுத்து உடனடி யாக அவரை மீட்டு ஓசூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக் காக தனியார் மருத்துவ மனையில் பவானி அனுமதிக்கப் பட்டார்.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ஓசூர் சிப்காட் போலீசார் விபத்தில் சிக்கிய வாகனங் களை அப்புறப் படுத்தி போக்கு வரத்தை சரி செய்தனர்.
டிரைவர் ஹரி கிருஷ்ணன் அதிவேக மாக காரை ஓட்டி வந்ததுடன், தூக்க கலக்க த்தில் இருந்ததால் இந்த விபத்து நடந்திரு க்கலாம் என்று போலீசார் தெரிவி த்தனர்.

இந்த விபத்து குறித்து ஓசூர் சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:
Privacy and cookie settings