சிறுநீர் கழிப்பதை தடுத்தவர் அடித்துக் கொலை !

டெல்லியின் வடக்கு பகுதியில் 32 வயது ரவிந்தர் குமார் என்னும் பேட்டரி ரிக்க்ஷா ஓட்டுநர், சாலையில் சி்றுநீர் கழிக்க வந்த நபர்களை தடுத்த தால் அடித்து கொலை செய்யப் பட்டுள்ளார்.
சிறுநீர் கழிப்பதை தடுத்தவர் அடித்துக் கொலை !
ரவிந்தர், டெல்லியின் குரு டெக் பஹதூர் மெட்ரோ நிலைய த்திற்கு வெளியே சிறுநீர் கழிக்க வந்த இரண்டு நபர்களை தடுத்ததால் அடித்து கொலை செய்யப் பட்டுள்ளார்.

நியூ கிஷோர் மார்க்கெட் காலனியில் அமைந்துள்ள ரவிந்தரின் இல்லம், சம்பவம் நடை பெற்ற இடத்திற்கு 150 மீட்டர் தொலைவில் தான் உள்ளது.

ரவிந்தருக்கு ஒரு வருடத் திற்கு முன்னர் திருமணம் நடை பெற்றுள்ளது; அவர் தனது மனைவி யுடன் அங்கு வசித்து வந்தார்.

சனிக்கிழமை மதியம் சுமார் 1.30 மணிக்கு ரவிந்தரும் அவரின் நண்பர்கள் பிரமோத் மற்றும் அரிஃப் ஆகியோரும் அந்த மெட்ரோ நிலைய த்திற்கு அருகில் மதிய உணவு சாப்பிட்டுக் கொண் டிருந்தனர்.

சிறிது தூரத்தில், மது அருந்திய நிலையில் கையில் பீர் பாட்டி லுடன் இரண்டு பேர், பொது இடத்தில் சிறுநீர் கழிக்க முயன்றனர்.
“நாங்கள் அவர்களை தடுக்க முயன்றோம். நாங்கள் இங்கு உணவருந்திக் கொண்டி ருக்கிறோம், 

நீங்கள் வேறேங் காவது சிறுநீர் கழியுங்கள் என்று கூறினோம் ஆனால் அவர்கள் எங்களை தவறாக பேசினாரகள்” என்கிறார் பிரமோத்.

அதில் ஒருவர் மாலை திரும்பி வரப்போவ தாக அச்சுறுத்தி சென்றார். ஆனால் அது அத்துடன் முடிந்து விட் டதாக நினைத்த ரவிந்தர் தனது வேலையை தொடர்ந்தார்.

பின் இரவு 8.30 மணிக்கு ரவிந்தர் தனது பணியில் ஈடு பட்டிருந்த போது இரண்டு டஜன் நபர்கள் அவரை சூழ்ந்து கொண்டு அடிக்க தொடங்கினர்.

அப்போது அவருடன் மற்றொரு ரிக்க்ஷா ஓட்டுநர் மனோஜும் உடனி ருந்தார். 

அவர்கள் செங்கல் மற்றும் துணியில் கற்களை சுற்றி அதை ஆயுதமாக பயன்படுத்தி ரவிந்தரை தொடர்ந்து தாக்கினார்கள் என கூறுகிறார் மனோஜ்
ரவிந்தருக்கு உடம்பில் அனைத்து பாகங் களிலும் காயம் ஏற்பட்டது. நான் உதவி கோருவதற்காக எனது வீட்டிற்கு ஓடி வந்தேன் ஆனால் அதற்குள் அவர்கள் சென்று விட்டனர் என்றார் மனோஜ்.

ஐஸ் கீரிம் கடைக்காரர் கலுராமும் சம்பவ இடத்தில் இருந்துள்ளார். கூட்டத்தில் ஒருவன் தான் புராடியிலிருந்து வருவதாகவும், மற்றொருவன் தான் சாத்நகரி லிருந்து வருவதா கவும் கூறியதாக 

கண்களில் அச்சம் நீங்காமல் தெரிவிக்கிறார் அந்த ஐஸ் கி்ரீம் கடைக்காரர். தாக்குதலை யார் தடுக்க வந்தாலும் அவர்களையும் விட்டு விக்க வில்லை. 

சில நிமிடங்கள் கழித்து உதவி கிடைத்த போது ரவிந்தர் அருகி லிருக்கும் மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப் பட்டார் ஆனால் போகும் வழியில் அவரின் உயிர் பிரிந்தது.

ரவிந்தர் ஒரு நல்ல மனிதர் அனைவரி டத்திலும் நன்றாக பழகுவார் என பக்கத்து வீட்டு காரரனான பூபென்ந்தர் கூறுகிறார்.

அவரின் மனைவி மற்றும் தாய் கடும் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். அனை வரும் சென்ற பிறகு அவரின் மகன் திரும்பி வரப்போவ தில்லை என்ற 
தருணத்தில் அவர்கள் பெரும் துயருக்கு ஆளாவார்கள் என கண்ணீருடன் அவர் தெரிவிக்கிறார். இந்த சம்பவம், அந்த பகுதி மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

நாங்கள் சிறு சிறு வேலைகளில் ஈடுபட்டு எங்கள் பிழைப்பை நடத்தி வருகிறோம். அதில் சிலர் பேட்டரி ரிக்க்ஷா ஓட்டுகிறோம். 
சிறுநீர் கழிப்பதை தடுத்தவர் அடித்துக் கொலை !
சிலர் காய்கறிகளை விற்பனை செய்கிறோம். ரவிந்தருக்கு ஏற்பட்ட நிலை அனைவருக்கும் ஏற்படக் கூடும் என மற்றொரு அண்டை வீட்டுக்காரர் தெரிவிக்கிறார்.

தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தங்களையும் தாக்கலாம் என்ற அச்சத்தில், சம்பவத்தை நேரில் கண்ட வர்கள் தங்கள் புகைப்ப டங்களை வெளியிட மறுத்து விட்டனர்.

இது தொடர் பாக போலிசார் விசாரணை களை மேற் கொண்டு வருகின்றனர்.
Tags:
Privacy and cookie settings