மரியானா பள்ளம் - ஆழ்கடலின் ஆச்சர்யம் | Mariana Trench - the deep sea wonder !

இந்த உலகில் மனிதனின் காலடி படாத இடம் ஆழ்கடல் தான். ஏன் மனிதனின் காலடி பட வாய்ப்பே இல்லாத இடமும், ஆழ்கடல் தான்னு சொல்லலாம். 
மரியானா பள்ளம்
கண்களுக்கு முழுமையாக தென்படாத, விண்வெளியைப் போன்று எண்ணிலடங்கா ரகசியங்களை தன்னுள் புதைத்து வைத்திருக்கின்றது, ஆழ்கடல்!

அது ஏன்? தெறிந்து கொள்ள ஆழ் கடலுக்குள் பயணிப்போம் வாருங்கள்...
ஆழ்கடல்! 

கடலுக்குள் நீந்தி மீன்களுக்கு அருகே ஜாலியாகச் சுற்றி வருகிறவர்களை 'நேஷனல் ஜியோகிராபிக்' (National Geographic) போன்ற சானல்களில் பார்த்திருப்பீர்கள். 

'ஸ்கூபா' (Scuba) என்ற சுவாசக் கருவியை அணிந்து கொண்டு இவர்கள் ஆழ்கடல் நீச்சல் செய்கிறார்கள். இதற்கு முறையான பயிற்சி தேவை. 'ஸ்கூபா டைவிங்' (Scuba Diving) மூலம் சாதாரணமாக, 10 மீட்டர் ஆழம் வரை கடலுக்குள் போகலாம்.

ரொம்ப மூச்சைப் பிடித்து, சாதிக்க நினைப்பவர்கள், 30 மீட்டர் வரை போகலாம். கடலுக்கடியில் ஆராய்ச்சி செய்பவர்கள், சுவாசக் கருவி துணையுடன் 1000 அடி வரை செல்கிறார்கள். 

ஆழ்கடலில் செல்வதற்கு நீரின் அழுத்தத்தைத் தாங்கக்கூடிய விசேஷக் கப்பல்களைப் பயன்படுத்துகிறார்கள். 

உலகின் உயரமான சிகரங்கள், பள்ளத்தாக்குகள், பாலைவனங்கள் என மனிதன் காலடி படாத இடமே கிடையாது. ஆனால் கடலின் ஆழத்தை அடைவதில் இன்னும் முழுமையான வெற்றியை மனிதன் அடையவில்லை. ஏன் கடலின் ஆழத்திற்குச் செல்ல முடிவதில்லை? 

கடலின் அடியிலும் வெளியிலிருப்பது போல ஏராளமான எரி மலைகள், பள்ளத் தாக்குகள், மாபெரும் மலைத் தொடர்கள், சிறு குன்றுகள் எல்லாம் இருக் கின்றன. 

கணக்கிலடங்காத எண்ணிக்கையில், கடல் வாழ் விலங்குகள் உயிர் வாழ்கின்றன. ஆனால், அவற்றைப் பற்றி எல்லாம் நாம் முழுமையாக அறிந்து கொண் டோமா என்றால் 'இல்லை' என்பதே பதில். 

பல்வேறு கிரகங் களுக்கு செயற்கைக் கோள்களை அனுப்பி ஆராய்ச்சி செய்து வரும் நாம், நமது பூமியி லிருக்கும் ஆழ்கடலை இன்னும் முழுமை யாக ஆராய்ச்சி செய்து முடிக்க வில்லை. 

ஏனெனில், விண்வெளிப் பயணத்தை விட மிகவும் கடின மானது ஆழ்கடல் பயணம் தான். இதற்கு முக்கியக் காரணம், கடலின் அழுத்தம். நாம் கீழே செல்லச் செல்ல நீரின் எடை அதிகரித்து, அந்த எடை எல்லாப் பக்கங்களி லிருந்தும் நம்மை அழுத்தும். 

தலைக்கு மேலே உள்ள அத்தனை தண்ணீரும் சேர்ந்து அழுத்தும். அத்துடன் நம்மைச் சுற்றிலும் உள்ள தண்ணீரின் எடையும் சேர்த்து அழுத்தும். 

அந்த அழுத்தம் கடல் மட்டத்தில் உள்ளதை விட இரண்டு மடங்காக இருக்கும். 20 மீட்டர் ஆழத்துக்குச் சென்றால் அழுத்தம் மூன்று மடங்காகி விடும். 30 மீட்டர் ஆழத்தில் அழுத்தம் நான்கு மடங்காகி விடும். 
அவ்வாறு ஒவ்வொரு பத்து மீட்டர் ஆழ த்திற்கும் கடலின் அழுத் தமும் இரு மடங்காக, அதிகரித்துக் கொண்டே செல்லும். தவிர, இன்னுமொரு பிரச்னை உண்டு. 


கடலின் ஆழத்தில் கடும் அழுத்தம் மட்டுமில்லை; சுமார் 800 மீட்டர் ஆழத்துக்குக் கீழே சென்றால் அதிக இருள் சூழ்ந்திருக்கும். கடல் நீரானது மிகுந்த குளிர்ச்சியாக இருக்கும்.

சூரிய ஒளியானது சுமார் இருநூறு மீட்டர் ஆழம் வரையே ஊடுருவும் என்றாலும், ஆயிரம் மீட்டர் ஆழம் வரை ஓரளவு வெளிச்சம் தெரியும். அதன் பின்னர் கும்மிருட்டு தான். நம்மால் சுவாசக் கருவி அணிந்து கொண்டு ஆயிரம் அடி வரை கூட இறங்க முடியும். 

ஆனால் நீண்ட நேரம் கடலின் ஆழத்தில் இருந்தால், கொப்புளங்கள், மூட்டுவலி போன்ற சில உடல் உபாதைகள் வரும் அபாயம் உண்டு. நீர் மூழ்கிக் கப்பல்கள் கூட ஒரு குறிப்பிட்ட ஆழத்து க்குக் கீழே பயணிக்காது. 



ஏனெனில், கடல் நீரின் அழுத்தத்தால் நீர் மூழ்கியும் வெடித்துச் சிதறி விட வாய்ப் பிருக்கிறது. இதனாலேயே ஆழ்கடல் குறித்த கேள்வி களுக்கு, வெகு நாட்களுக்கு விடை கிடைக்க வில்லை.

மரியானா அகழி

இந்த உலகி லேயே மிக ஆழமானப் பகுதி, மரியானா அகழியில் அமைந் துள்ள 'சேலஞ்சர் மடு' என்ற பள்ளம் தான். பசிபிக் கடலில் உள்ள ஆரம் போன்ற வளைவான மரியானா தீவுகளுக்குக் கிழக்கே அமைந் துள்ளது, மரியானா அகழி. 

வளர்பிறை போன்ற வடிவத்தில் அமைந் துள்ளதால், 'மரியானா நீள் வரிப்பள்ளம்' என்று அழைக்கப் படுகின்றது. 

இந்த அகழி யானது, பசிபிக் நிலத்தகடும், மரியானா நிலத் தகடும் சந்திக்கும் இடத்தில் அமைந் துள்ளது. இது 2550 கிலோ மீட்டர் நீளமும், 69 கிலோ மீட்டர் அகலமும் கொண்டது. 

இதன் ஆழம் 35,840 அடி ஆகும். சேலஞ்சர் ஆழப் படுகுழி 36200 அடி (அதாவது 11034 மீட்டர்) ஆழ முடையது.
உங்கள் ஒற்றை விரல் நகத்தின் மீது ஆயிரம் கிலோ எடையை வைத்தால் எப்படி இருக்கும்? (படிக்கும் போதே வலிக்கிறது அல்லவா?) இப்பகுதி யின் நீரினால் ஏற்படும் அழுத்தம் அந்த அளவுக்கு இருக்கும்.

(அதாவது 1086 பார்கள் அழுத்தம்)  சேலஞ்சர் மடுவில் உள்ள நீரின் வெப்ப நிலை, அதிக பட்சம் நான்கு டிகிரி செல்சியஸ் வரை. 

உலகிலேயே மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட்டை இதனுள்ளே வைத்தால், அதற்கு பிறகும் ஏழாயிரம் அடி மிச்ச மிருக்கும் என்றால், இதன் ஆழத்தைப் புரிந்து கொள்ளலாம். 

இந்த அளவிற்கு ஆராய்ச்சியாளர்களை பயமுறுத்த அங்கு என்ன உள்ளது என்று பார்த்தால்,...........................

உயர் அழுத்தம்

மரியானா அகழியானது 10 கிமீ-க்கும் அதிக ஆழம் கொண்டதால் அந்த இடத்தில் லித்தோஸ்பியர்-ன் தடிமன் மிகவும் குறைவு. 

(Lithosphere என்பது பூமியின் தட்டையான மேற்பகுதியான Crust க்கும் Asthenosphere-க்கும் இடையே உள்ள மெல்லிய அடுக்காகும். இதனால் அந்த இடத்தில் பல இயங்கும் எரிமலைத் தொடர்கள் அமைந்துள்ளன.

மேலும் உயர் அழுத்தத்தினால் அவை எப்போது வெடிக்கும் என்பது சரியாக கூற முடியாது இதுவே இங்க சென்று ஆராய்ச்சி செய்ய விரும்புபவர்களை அச்சப்பட வைக்கிறது.

மரியானா அகழியில் அழுத்தம் சுமார் 15750 psi (8 tons per Square inch) ஆகும். இது கடலின் மேற்பரப்பு வளிமண்டல அழுத்தத்தை விட 1000 மடங்கு அதிகமாகும்.

இதன் தாக்கத்தை புரிய வைக்க வேண்டுமென்றால் உங்கள் தலையில் 100 சராசரி எடைகொண்ட யானைகளை நிற்க வைப்பதற்கு சமம்!.

இந்த அளவு அழத்தில் நாம் ஒரு சராசரி ஆராய்ச்சி கலனை கொண்டு சென்றால் அவை பாதி தூரத்திலேயே நசுங்கி (Implode) விடும். இதனால் இதற்காகவே கலன்கள் சிறப்பு முறையில் வடிவமைக்கப் படுகிறது. 

இதுவரை மிகவும் தரமான முறையில் வடிவமைக்கப்பட்ட ஆழ்கடல் ஆராய்ச்சிக் கலனே மரியான அகழியில் மூன்று மணி நேரம் தான் தாக்குப் பிடிக்க முடியும்.

ராட்சத உயிரினங்கள்

உலகின் மிகப்பெரிய காடான அமேசானிலேயே இதுவரை 25% உயிரி வகைகளே கண்டறியப் பட்டுள்ளது என உயிரியலாளர்கள் கூறுகிறார்கள். 

2017 ல் கூட புதியதாக 381 புதிய உயிரினங்கள் கண்டுபிடிக்கப் பட்டதாக ஆய்வுக் கட்டுரை வெளியிடப்பட்டது. 

பூமியின் மேற்பரப்பில் உள்ள இடத்திலேயே பெரும்பாலான உயிரிகளைப் பற்றி அறிய முடியாத மனிதனால் யாராலும் செல்ல முடியாத இடத்தில் இருக்கும் உயிரினங்களை எப்படி கண்டு பிடிக்க இயலும். 

அறிவியலாளர்களின் கணிப்புபடி இதுவரை நாம் காணாத மட்டுமல்ல கணிக்கவே முடியாத அளவிற்கு விசித்திரமான உயிரினங்கள் இருக்கலாம் என கூறுகிறார்கள் (மேக்டலென் சுறா, ஆழ்கடல் ட்ராகன்மீன் போன்றவை). 

அவைகள் ஒரு வேளை தாக்கினால் விளைவுகள் மோசமாகிவிடும் என்பதே நிறைய பேரின் பயம்.

வெப்பநிலை

மரியானா அகழியின் அடிமட்டத்தில் சூரிஒளி பட்டு பல மில்லியன் ஆண்டுகள் ஆனதால் அங்கு வெப்பநிலை கிட்டத்தட்ட பூச்சியமே. எனவே அதோடு அழுத்தமும் இணைந்து மிக மோசமான விளைவை ஏற்படுத்தும்.

இதே போல் எரிமலை வெடிப்பினால் ஏற்படும் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் கலன் உருகக் கூட வாய்ப்புள்ளது.

முக்கியமாக மரியானாவில் இதுவரை சூழல் சம்மந்தப்பட்ட ஆராய்ச்சிகள் எதுவும் நடத்தப்படவில்லை என்பதால் மனிதனால் கணிக்க முடியாத பல வினோதமான பிரச்சனைகள் அங்கு இருக்கலாம்.................................... 

மவுன கிய எரிமலை

இந்த சமயத்தில் ஒரு பொது அறிவுத் தகவல் - உலகிலேயே மிக உயரமான இடம் எவரெஸ்ட் என்று நினைத்துக் கொண்டிரு க்கிறோம். பொதுவாக உயர அளவீடுகள், கடல் மட்டத் திலிருந்து அளவிடப் படுகின்றன. 

ஹவாய் தீவிலி ருக்கும் 'மவுன கிய' எனும் எரிமலை, கடல் மட்டத் திலிருந்து சுமார் 13802 அடி உயரம் உடையது.

இந்த எரிமலை கடலினுள் அமிழ்ந் துள்ளது. அங்கிருந்து கணக் கிட்டால், இதன் உயரமானது 33000 அடியாகும். எவரெஸ்ட்டின் உயரம் 29029 அடி தான். 

எனவே உண்மை யில், உலகிலேயே உயரமான இடம் மவுன கிய எரிமலை தான். கடல் மட்டத்தி லிருந்து மட்டுமே கணக்கீடுகள் எடுக்கப் படுவதால் மவுன கிய எரிமலை அந்தப் பெருமையை எவரெஸ்ட்டிடம் இழந்து விட்டது.

மவுன கிய எரிமலையில் ஏராளமான தொலை நோக்கிகள் நிறுவப் பட்டுள்ளன. நகரங் களின் வெளிச்சம், ஓசை போன்ற மாசுக்கள் இல்லாமல் இந்த எரிமலை யின் உச்சியில் நிலவும் சுற்றுப் புறமானது, வானியல் ஆராய்ச்சி யாளர்க ளுக்கு மிகவும் ஏற்றதாக இருக்கிறது.
தற்போது இந்தியா, சீனா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய ஐந்து நாடுகள் ஒருங் கிணைந்து, சுமார் 140 கோடி அமெரிக்க டாலர் செலவில், உலகின் மிகப் பெரிய தொலை நோக்கியை இந்த எரிமலையில் நிறுவி வருகின்றன.

இது தான் உலகின் மிகப்பெரிய தொலை நோக்கியாகும். இதன் மூலம் 500 கிலோமீட்டர் தொலை விலிருக்கும் ஒருவரின் சட்டையி லிருக்கும் பட்டனைக் கூட மிகத் துல்லிய மாக ஆராய முடியும். இந்த மிகப் பிரம்மாண்ட தொலை நோக்கியின் கட்டுமானம் 2022-ம் ஆண்டுதான் முடியும்.



சிம்போரஸோ எரிமலை

சரி. நாம் மீண்டும் மரியானா அகழிக்கு வருவோம். சேலஞ்சர் மடுவின் தரைப்பகுதி, பூமியின் மிக ஆழத்தில் இருந் தாலும், அது பூமியின் மைய த்திற்கு அருகில் இல்லை. ஏனென்றால், நமது பூமியின் ஒழுங் கற்ற வடிவமே இதற்கு காரணம். 
பூமியானது ஒரு ஒழுங்கற்ற (சிறிது பேரிக்காய் போன்ற) வடிவத்தில் இருக்கிறது. தன்னைத் தானே சுற்றி வரும் மைய ஈர்ப்பு விசையின் காரணமாக பூமத்திய ரேகைப் பகுதியில் சற்று உப்பிக் காணப் படுகிறது. 

பூமியின் துருவங் களின் விட்டமானது, பூமி மையத்திற்கு நெருக்க மாக உள்ளது. இதனால் பூமியின் மையத்திற்கு மிக அருகில் உள்ளது, ஆர்க்டிக் கடலின் தரை ப்பகுதியே ஆகும்.

இப்போது மீண்டு மொரு பொது அறிவுத் தகவல்- உலகின் உயரமான சிகரமான எவரெஸ்ட் தானே பூமியின் மையத்தி லிருந்து வெகு தொலைவில் இருக்கும் இடமாக இருக்கக் கூடும்? காதைத் தீட்டிக் கொள்ளுங்கள். 

இப்போது உங்களுக்கு இன்னொரு ரகசியம் சொல்கிறேன். ஈக்குவடாரில் உள்ள சிம்போரஸோ எனும் எரிமலை தான், பூமியின் மையத்தி லிருந்து அதிதொலைவு (20548 அடிகள்) உள்ள இடம். 

காரணம் இப்போது புரிந்தி ருக்குமே? எவரெஸ்ட்டை (29029 அடிகள்) விட உயரம் குறைவாக இருந்தாலும், இந்த எரிமலை யின் அமை விடமான ஈக்குவடாரில் பூமி உப்பலாகக் காணப் படுவதால் இது சாத்திய மானது. 

மரியானா பள்ளம் எப்படி ஏற்பட்டது?

இந்த மரியானா பள்ளம் எப்படி ஏற்பட்டது? சுருக்க மாக IBM என்றழைக்கப்படு கின்ற 'ஐஸு - போனின் - மரியானா ( Izu- Bonin- Mariana )' நிலத்தகடுகளினால் உண்டானது. 

பல மில்லியன் வருடங்களுக்கு முன்பு, பசிபிக் நிலத் தகடும் சிறிய மரியானா நிலத்தகடும் ஒன்றை யொன்று மோதிக் கொண்ட போது, பசிபிக் நிலத்த கடானது மரியானாவின் அடியில் சென்றது. 

இதனால் இந்த மாபெரும் அகழி உருவானது. இது சுமாராக 180 மில்லியன் வருடங்கள் பழமை யானது.

மரியானா அகழியின் தரையை தொட்ட சாதனை  யாளர்கள்

இங்கிலாந்துக் கடற் படையைச் சேர்ந்த சேலஞ்சர் என்ற கப்பல் தான் முதன் முதலில், இந்த இடத்தின் ஆழத்தை 26850 அடி என்று கண்டறிந்து, உலகுக்கு அறிவித்தது. 

1875 ம் ஆண்டு ஒலி அதிர்வு முறையில் இதைக் கணித்துச் சொன் னார்கள். இந்தக் கப்பலை பெருமைப் படுத்தும் விதமாகவே, இந்த ஆழ் குழிக்கு 'சேலஞ்சர் படுகுழி' எனப் பெயரிடப் பட்டது.

1995-ம் ஆண்டு, கைகோ என்ற ஆள் இல்லாத நீர் மூழ்கியும் அதன் பின்னர் 2009 ம் ஆண்டு நெரயஸ் என்ற மற்றுமொரு ஆள் இல்லாத நீர் மூழ்கியும் இந்த ஆழத்தை தொட்டு விட்டு வெற்றி யுடன் திரும்பின.
பனானா சாக்லேட் ஐஸ்கிரீம் செய்வது !
பூமிக்கு அப்பால் உள்ள நிலவிலேயே இதுவரை 12 பேர் கால் பதித்துள்ளனர். ஆனால் பூமியிலேயே உள்ள மரியானா அகழிக்கு இதுவரை சென்றவர்கள் 3 பேர் மட்டுமே. 



அதில் ஒருவர் உலகறிந்த, புகழ்பெற்ற திரைப்பட இயக்கு நரான ஜேம்ஸ் கேமரோன். மற்ற இருவர், அமெரிக்கக் கடற் படையைச் சேர்ந்த டான் வால்ஷ் மற்றும் ஜேக்குஸ் பிக்கார்டு ஆவர்.

'அதெப்படி? அதிக ஆழம் செல்லும் போது நீர்மூழ்கி கூட வெடித்துச் சிதற வாய்ப்பிருக்கிறது என்றீர்களே... 'என்பவர்களுக்கு, 

அதிக ஆழத்தில் நீரின் அழுத்த த்தைத் தாங்கக் கூடிய ஒரு கருவியை வடிவமைக்க வேண்டிய தேவை ஏற்பட்ட போது கை கொடுத்தவர் தான் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஜீன் பெலிக்ஸ் பிக்கார்டு. 

இவர் மேலே சொல்லப் பட்ட இருவரில் ஒருவரான ஜேக்குஸ் பிக்கார்டின் தந்தை யாவார். இவர் பலூனில் பறந்து பல சாதனை களை படைத்தவர். 

அவ்வாறு பலூனில் பறப்பதற் காக வடிவமைத் திருந்த கருவியில், நீர்க் குமிழியின் தத்துவ த்தைப் பயன் படுத்தி,  சிறிய மாற்றங் களைச் செய்து கடல் நீரின் அழுத்த த்தைத் தாங்கக் கூடிய ஒரு கருவியை வடிவமைத்தார். 

எடை குறைவாகக் காணும் இயல் புடைய திரவத்தை, ஒரு தொட்டியில் கேப்ஸ்யூல் வடிவிலான ஒரு இரும்பு உருளை யின் மேல் அடைத்து, ஆழ் கடலு க்குள் செல்ல ஏதுவாக இரும்பு பட்டை களையும், 

மேலே எழும்பி வருவதற் காக மின் மோட் டாரையும் இணைத்தார். ஆளி ல்லாமல் அனுப்பி பல முறை சோதனை செய்து வெற்றி கண்டார்.

இந்தக் கருவி, அதற்கு பிறகு பலரால் இன்னும் மேம்படுத்தப் பட்டது. முதன் முறையாக ஒரு மனிதனை ஏற்றிக் கொண்டு 13701 அடி ஆழம் வரைச் சென்று, சோதனை யில் வெற்றியும் காணப் பட்டது. ஆனால், அதிக ஆழம் செல்வ தற்கு இன்னும் மேம் படுத்தப்பட வேண்டி யிருந்தது. 

பல்வேறு சோதனை களுக்கு பிறகு 1960-ம் ஆண்டு, தங்களது எட்டாவது முயற்சியில், மரியானா படுகுழிக்கு உள்ளே புகுந்தனர் .ஜீன் பெலிக்ஸ் பிக்கார்டின் மகனான ஜேக்குஸ் பிக்கார்டும், அமெரிக்கக் கடற் படையைச் சேர்ந்த கேப்டன் டான் வால்ஷ் என்பவரும்.

அவர்கள் சென்ற நீர் முழ்கியின் பெயர் ட்ரெயிஸ்ட். அதில் இரண்டு மின் மோட்டா ர்கள் பொருத்தப் பட்டிருந்தன. வினாடிக்கு 0.914 நாட் என்ற வேகத்தில் அவர்கள் பயணி த்தனர்.

வான்டன் எனும் அமெரிக்கப் போர்க் கப்பல், அவர்கள் பயணித்த பேத்திஸ்க்கோப் ட்ரெயிஸ் டியுடன் தொடர்பி லிருந்தது. அந்தக் காலத்தில் பயன் படுத்தப் பட்ட கருவியின் மூலம் ஏழு வினாடிகள் கழித்து தான் தகவல் பரிமாறிக் கொள்ளப் பட்டது.



32500 அடிகள் இறங்கி யிருந்த போது, வெளிப் புறத்தில் ஏதோ சத்தம் கேட்டது. அதே நேரம் அவர்கள் இருந்த அறை குலுங்கியது. "நாம் தரையைத் தொட்டு விட்டோமோ?" என்றார் வால்ஷ்.

"இல்லையே, ஆழம் காட்டும் கருவியில் அவ்வாறு காட்டப் படவில் லையே" என்றார் பிக்கார்ட். அவர்களின் கலம் மெதுவாக கீழிறங்கிக் கொண்டி ருந்தது. கீழே தரை தென்பட வில்லை. ஒரு வேளை ஏதேனும் பெரிய கடல் மிருகத்தை மோதி விட்டோமோ? இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண் டார்கள்.
அவர்களின் எதிரிலிருந்த கருவிகள் எல்லாம் எந்தவித தவறையும் காட்ட வில்லை. உடனே பிராண வாயு உள் செலுத்தும் கருவி உள்பட, ஒலி எழுப்பக் கூடிய கருவிகள் அனைத் தையும் சிறிது நேரம் நிறுத்தி வைத்தனர். 

அந்த மயான அமைதி யிலும், வெளிப் புறத்தி லிருந்து எதுவோ உடைவது போன்ற ‘க்ரீச், க்ரீச்’ எனும் சப்தம் கேட்டுக் கொண்டே இருந்தது. 

இந்த சந்தர்ப்ப த்தில், உயிரைப் பணயம் வைத்து தொடர்ந்து கீழே செல்வது, இல்லை யெனில் திரும்ப சென்று விடுவது என்று இரண்டே வாய்ப்புகள் அவர்களிட த்திலிருந்தன. 

அவர்கள் தேர்ந்தெ டுத்தது முதலாவது வாய்ப்பை. தொடர்ந்து பயணித்து அவர்கள் மரியானா அகழியின் ஆழத்தை (35,797 அடி) அடைந்தனர். கிட்டத் தட்ட ஐந்து மணி நேர பயண த்தில் ஆழத்தைத் தொட்டு விட்டனர். 

சரித்திர முக்கிய த்துவம் வாய்ந்த மகத்தான சாதனை செய்யப் பட்டு விட்டது. ஆனால் அவர்கள் உணர்ந்த அந்த சத்தம் மட்டும் என்ன வென்று தெரிய வில்லை. 

வெளியே பார்க்க உதவும் துளை வழியே எட்டிப் பார்த்தார் வால்ஷ். அவர்களு க்கும் வெளிப்புற நீரின் அழுத்தத் திற்கும் இடையே இரு கண்ணா டிகள் மட்டுமே உண்டு. "அந்த சத்தம் எங்கிருந்து வந்தது தெரியுமா... கண்டு பிடித்து விட்டேன்." என்றார் புன் முறுவலுடன்.

வெளியே பார்க்க உதவும் கண்ணா டிகளில், வெளிப்புறக் கண்ணாடி விரிசல் விட்டிருந் திருக்கிறது. அந்த விரிசலின் ஒலியையே அவர்கள் கேட்டிருந் திருக்கி றார் கள். 
அந்த விரிசல் மட்டும் பெரிதாகி உடைந்து, உள்ளிரு க்கும் கண்ணா டியும் உடைந்தி ருந்தால் இருவரும் உயிருடன் தப்பித் திருக்க முடியாது. சில சரித்திரச் சாதனைகள் படைக்கப் படும் போது, சோதனை களும் தாமாக விலகி விடுகி ன்றன போலும்.
Tags: