டுகாட்டியை வாங்கும் ஹீரோ?

இந்தியா மட்டு மல்லாது, உலக ளவில் டீசல் கார்களின் மாசு அளவுகளில் மோசடி செய்த ஃபோக்ஸ் வாகன் நிறுவனம், தற்போது எலெக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் கார் களைத் தயாரிப்பதில் கவனம் செலுத்தி வருகிறது.



இந்த நிலையில், மாசு மோசடியில் பாதிக்கப் பட்ட கார்களை ரீ-கால் செய்து, அதைச் சரி செய்த தாலும், அதற்கான அபராதத் தொகையைச் செலுத்தி யதன் வெளிப் பாடாகவும், கடும் நிதி நெருக் கடியில் சிக்கித் தவிக்கிறது.

எனவே, தனது குழும நிறுவனங் களில் ஒன்றான டுகாட்டியை, இப்போது விற்பனை செய்யும் முடிவில் இருக்கிறது ஃபோக்ஸ்வாகன்.

கடந்த 2012-ம் ஆண்டில் தான், டுகாட்டியைக் கையகப் படுத்தியது ஃபோக்ஸ் வாகன். 
நான்கு சக்கர வாகனங் களைத் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று, 2 சக்கர வாகனங் களைத் தயாரிக்கும் நிறுவன த்தை விலைக்கு வாங்கியது, பலருக்கும் வியப் பளிக்கக் கூடிய விஷய மாகவே அப்போது பார்க்கப் பட்டது. 

அதற்கு, ஃபோக்ஸ் வாகனுக்கு டுகாட்டியின் இத்தாலிய டிஸைன் மற்றும் தொழில் நுட்பத் திறன் மீதான ஈர்ப்புதான் காரண மாக இருந்தது.



டுகாட்டியின் ஆண்டு வருமானம், சுமார் 100 மில்லியன் யூரோ என்றளவில் தற்போது இருக்கிறது.
அந்த நிறுவன த்தை வாங்கும் போட்டியில், சீனாவைச் சேர்ந்த டூ-விலர் தயாரிப் பாளர் களுடன் இந்தியாவைச் சேர்ந்த ஹீரோ மோட்டோகார்ப் நிறுவ னமும் உள்ளது. 

ஒரு வேளை டூகாட்டியை ஹீரோ வாங்கி விட்டால், அது அவர் களுக்கு மிகப்பெரிய மதிப்பையும், தொழில் நுட்ப ரீதியில் மிகப் பெரிய பலமாகவும் அமையும் என்பதே உண்மை!
Tags:
Privacy and cookie settings