ஆண்கள் உடல் கெடுவதற்கு காரணங்கள் !

ஆண்கள் அதிகமாக ஒய்வு இல்லாமல் வேலை பணம் என்று ஓடிக் கொண்டே இருப்பதால் அவர்களுக்கு அமைதி தேவைபடுகிறது. அந்த அமைதியை கெடுக்கும் சில காரணிகள்.
ஆண்கள் உடல் கெடுவதற்கு காரணங்கள் !
1. சக்தியை அதிகமாகச் செலவழிப்பது.

2 ஓய்வு இல்லாமல் உழைப்பது.

3. வேளைத் தவறிச் சாப்பிடுவது.

4. ஓட்டல் களுக்குப் போவது.

5. பணக் கவலை, மனக் கவலை .

6. தொத்து நோய்களை எதிர்க்கும் சக்தி உடம்பில் இல்லாதது.

ஆண் களுக்கு இடை இடையே சேஞ்ச் தேவை. தொடர்ந்து மூளை வேலை செய்து கொண்டி ருக்கவோ,

தொடர்ந்து உடம்பு வேலை செய்து கொண்டி ருக்கவோ அனு மதிக்கக் கூடாது.

தூங்குதல்,

நண்பர் களோடு அளவளா வுதல்,

பிரச்சனை களை மறந்து சிறு விளை யாட்டுக் களை விளை யாடுவது,

மற்றவர் களிடம் மனம் விட்டு பேசிச் சிரித்தல்,
வெவ்வேறு இடங் களுக்கு அடிக்கடி போதல்,

நடனம், நாடகம், கச்சேரி,

சினிமா பார்த்தல் ஆகிய வைகள் ஆண் களுக்கு அவசியம்.

இல்லா விட்டால் உடம்பு நன்றாக இருக்காது.

திராட்சைப் பழச்சாறு,

ஆப்பிள்,

பாதாம் பருப்பு,

வெண்டைக் காய்ச் சூப்பு ஆகியவை களை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் மூளையும்,

உடம்பும் எப்போதும் தெம்புடன் இருக்கும். வயிற்றில் பூச்சிகள் இருக்கும் . பூச்சிகள் வயிற்றில் இருக்க விடக் கூடாது. 
இதை அழிக்கும் மருந்து களை மருத்துவர் ஆலோசனைப் படி அடிக்கடி சாப்பிட்டு, வயிற்றி லுள்ள பூச்சி களைக் கொல்ல வேண்டும். இல்லா விட்டால்,

களைப்பும், ஞாபக மறதியும் அதிகமாக இருக்கும். காலையில் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். மாலை யிலும் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். 

காலை யிலும் மாலை யிலும் குளிர்ந்த நீரில் குளித்தால் உடம்பு சுறு சுறுப்பாக இருக்கும். தெம்பாக இருக்கும். நலமாக இருக்கும். 

வெந்நீரில் குளித்தால் சோர்வு தரும். நோயாளி கள் மட்டுமே வெந்நீரில் குளிக்க வேண்டும். மலச் சிக்கல் இருக்கவேக் கூடாது.

மலச் சிக்கல் பலச் சிக்கல். முறையற்ற உணவும்,

உணவு கொள்ளும் தவறான காலமும்,

மலம் கழிக்க வலுவில் முயற்சி மேற்கொள் ளாததுமே மலச் சிக்கலு க்கும் காரணம்.

காபி, டீ, அடிக்கடி சாப்பிடக் கூடாது.

அதிக நேரம் கண் விழிக்கக் கூடாது.

நிறையத் தண்ணீர் குடிக்க வேண்டும்.

குறிப்பிட்ட இரண்டு நேரத்தில்,

இரண்டு தடவை மலம் கழிக்க வேண்டும்.

அரைக்கீரை,

முளைக் கீரை,

மணத் தக்காளிக் கீரை,

அகத்திக் கீரை,
புளிச்சக் கீரை,

பொன்னாங் கன்னிக் கீரை,

சிறுகீரை,

ஆகிய கீரைகளில் தினசரி ஒன்றைச் சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.

சாப்பிட்டவுடன் பூவன் பழத்தைச் சாப்பிடலாம்.

இல்லா விட்டால் பேரீச்சம் பழத்தைச் சாப்பிடலாம்.
ஆக, சாப்பிட்ட வுடன் ஏதாவது ஒரு பழத்தைச் சாப்பிட வேண்டியது அவசியம்.

மிகச் சிறப்பாக நீண்ட காலம் வாழும் ரகசியம் உண்ணுதல் பாதி இரட்டிப்பு நடை மும்மடங்கு சிரிப்பு மற்றும் அளவிலா அன்பு செலுத்துதல்.
Tags: