தன் பெயரை கணவனின் பெயருடன் சேர்த்துள்ள பெண்களின் கவனத்திற்கு !

நம்மில் அதிகமான திருமணம் முடித்த பெண்கள் தமது பெயருக்குப் பின் தமது கணவனின் பெயரைப் போடுவதை வழக்க மாக்கிக் கொண்டு ள்ளார்கள். 
தன் பெயரை கணவனின் பெயருடன் சேர்த்துள்ள பெண்களின் கவனத்திற்கு !
இஸ்லாத்தைப் பொருத்த வரை இது அனுமதிக்கப் படாத பாவமான செயலாகும். ஏனெனில் நாளை மறுமை நாளில் எங்களின் பெயர்கள் தந்தை மாருடைய பெயருடன் இனைத்தே அழைக்கப் பட இருக்கின்றது. 

அது மட்டுமன்றி இது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டித் தந்த வழியும் அல்ல.

அதிகமான நமது பெண்கள் கணவனின் பிரபல்ய த்திற்காக தனது பெயருடன் கணவனின் பெயரை இணைப் பதையே கௌரவமாக நினைக் கிறார்கள். 
அதுவே தனது பெயருடன் இஸ்லாம் கூறித் தந்துள்ள முறைக்கு மாற்றமாக தனது தந்தையின் பெயரை உபயோகி க்காமல் கணவனின் பெயரை உபயோகிப் பதற்கான வாய்ப் பாகவும் எடுத்துக் கொள்கின் றார்கள்.

சரி இப்படி மார்க்க த்திற்கு மாற்றமாக நடப்பவர் களிடம் நான் ஒரு கேள்வியை கேற்க வினைகிறேன்;
உலகையே மாற்றிய மாபெரும் மனித மாணிக்க மான எமது உயிரிலும் மேலான கண்மனி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் 

அவர்களது மனைவி களின் பெயர்களில் எவருடை யதாவது பெயருக்குப் பின்னால் நபிகளாரது பெயர் உபயோகிப் படுகின்றதா?

மாற்றமாக அவர்களது தந்தை மார்களது பெயர்களே உபயோகி க்கப்படுகின்றது. உமது கணவர் நபிகளாரை விட எந்த விதத்திலும் மேலாகப் போவதில்லை. 

இஸ்லாம் இப்படி கணவர்மார்களுடைய பெயர்களை பாவிப்பதற்கு அனுமதி வழங்கியிருந்தால்
உண்மையில் நபியவர்களின் மனைவி மார்களல்லவா முதன் முதலின் கணவனின் பெயரை தமது பெயருக்குப் பின்னால் உபயோகித் திருப்பார்கள்.

உண்மையில் இது மிகத் தரங்குறைந்த இஸ்லாத்திற்கு முற்றிலும் மாற்ற மான அனுகு முறையாகும். 
தற்காலத் தில் இத்தகைய தவறுகள் திருமன அழைப்பு அட்டைகளில் பரவலாக காணக் கூடியதாக உள்ளது. 

இது மிகவும் கவலைக் குரிய விடய மாகும். யாரும் பெரிதாக கவனித்திராத மிகப்பெரிய தவறாகும். 

உதாரணமாக மணமகனின் தந்தையின் பெயர் முஹம்மத் என்றால் பெற்றோரின் பெயரை இடும் போது MR & MRS முஹம்மத் எனப் போட்டு விடுகி ன்றார்கள். 

அதை விட கொடுமையான விடயம் இன்னும் சில அழைப்பு அட்டை களில் மனமகளின் பெயருக்குப் பின்னால் மனமகனின் பெயரை இட்டு விடுகி ன்றார்கள்.
இவை அனைத்தும் இஸ்லாம் காட்டித் தந்திடாத கீழ்த் தரமான நடை முறைளாகும். 

இதன் பிறகாவது இத்தகைய தவறுகளை விடுவதில் இருந்து எங்களைப் பாது காத்துக் கொள்வோம். அடுத்தவர் களுக்கும் இதனை எத்தி வைப்போம். 

இவ்வுலகம் நிரந்தர மற்றதாகும் வெறுமனே பேருக்கும் புகழுக்கும் ஆசைப் பட்டு இஸ்லாத்தை விட்டு கொடுத்தால் நாளை மறுமையில் கைசேதப் படுவதை விட வேறு வழி இருக்காது.
எனவே இஸ்லாம் கூறிய பிரகாரம் எமது வாழ்க் கையை அமைத்துக் கொள்வோம் இன் ஷா அல்லஹ் வல்லவன் அல்லாஹ் அதற்கு துணை புரிவானாக.
Tags: