நந்தினியின் கணவர் கார்த்திக்கின் ஆசை... திடீர் திருப்பம் !

நடிகை நந்தினியின் கணவர் கார்த்திக் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. 
நந்தினியின் கணவர் கார்த்திக்கின் ஆசை... திடீர் திருப்பம் !
தற்கொலைக்குத் தூண்டிய தாக நந்தினியின் தந்தை ராஜேந்திரனிடம் விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்தனர். 

கார்த்திக் எழுதிய கடிதத்தில், தன்னுடைய கடைசி ஆசையாக ஒன்றையும் குறிப்பிட் டுள்ளது, நடிகை நந்தினிக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.

டி.வி சீரியல் தொடர்கள், தொகுப்பாளர், சாகச நிகழ்ச்சி என அசத்திக் கொண்டி ருப்பவர், நடிகை நந்தினி. 

இவரை, 'மைனா' என்று சொன்னால் தான் பலருக்கும் தெரியும். அந்த அளவுக்கு, மைனா கதா பாத்திரத்தின் மூலம் மக்கள் மனதைக் கவர்ந்தவர் நந்தினி. 

இவர், தி.நகரில் உள்ள ஜிம்முக்கு சென்ற போது, அதன் உரிமையாளர் கார்த்திக்கை காதலித்தார். இருவரும் கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் மதுரையில் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணம் முடிந்த சில நாட்களில் கார்த்திக்கின் சுயரூபம் நந்தினிக்குத் தெரிய வந்தது. கார்த்திக்கிற்கு வெண்ணிலா என்ற பெண்ணுடன் பழக்கம் இருந் துள்ளது. 
நந்தினியை கார்த்திக் திருமணம் செய்ததால், வெண்ணிலா தற்கொலை செய்து கொண்டார். 

அப்போது, வெண்ணிலா எழுதிய கடிதத்தின் அடிப்படையில் கார்த்திக்கை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது, நந்தினி குடும்பத் தினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இருப்பினும், கார்த்திக் மீதுள்ள காதலால், அனைத்தையும் நந்தினி மறந்து, புதிய வாழ்க்கையை ஆரம்பித்தார். 

ஆனால், அது நீடிக்க வில்லை. சில மாதங்களிலேயே நந்தினி- கார்த்திக் காதல் திருமணம், கசக்கத் தொடங்கியது.

நடிகை, நந்தினி
இந்தச் சமயத்தில் தான், தனியார் தொலைக் காட்சியில் நடந்த சாகச நிகழ்ச்சியில், கார்த்திக்- நந்தினி தம்பதி பங்கேற்றனர். 

உண்மையிலேயே நடிகை நந்தினியின் இல்லற வாழ்க்கையும் சாகசம் போலவே இருந்தது, கார்த்திக்கின் தற்கொலைக்குப் பிறகு தான் தெரிய வந்துள்ளது. 

இது குறித்து நம்மிடம் பேசிய நந்தினிக்கு நெருக்க மானவர்கள், திருமண வாழ்க்கை யில் நந்தினி அவசரப்பட்டு விட்டார் என்றே சொல்ல வேண்டும். 

கார்த்திக்கை குறித்த முழுமையான விவரங்கள் நந்தினி மற்றும் அவரது குடும்பத் தினருக்கு தெரியவில்லை. அவசர அவசரமாகத் திருமணம் செய்து கொண்டனர். 

அது, ஒரு ஆண்டுக்குள் இந்த முடிவை ஏற்படுத்தி விட்டது. வெண்ணிலா மூலம், நந்தினியின் வாழ்க்கையில் புயல் வீசத் தொடங்கியது. 
வெண்ணிலா தற்கொலைக்குப் பிறகு, நந்தினி மனம் உடைந்து விட்டார். அதன் பிறகும் கார்த்திக் திருந்தவில்லை. இது, நந்தினி க்கும் அவரது குடும்பத்து க்கும் மன வேதனையை ஏற்படுத்தியது. 

கடந்த இரண்டு மாதங்களாக கார்த்திக்கைப் பிரிந்த நந்தினி, நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வந்தார். அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் சோகம் இருந்தாலும் அதை வெளிக் காட்டாமல், நிஜத்தில் நடித்தார்.

நந்தினி பிரிந்து சென்ற பிறகும் கார்த்திக் கிடமிருந்து அவருக்கு பல்வேறு தொந்த ரவுகள் வந்தன. இதை, நந்தினியின் அப்பா தட்டிக் கேட்டுள்ளார். 

இதனால், இருவரு க்கும் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட் டுள்ளது. அப்போது கூட நந்தினி அமைதி யாகவே இருந்தார். கார்த்திக் தற்கொலை செய்து கொள்வார் என்று யாருமே எதிர் பார்க்க வில்லை. 

அவர், எழுதிய கடிதம் நந்தினியின் குடும்பத் தினருக்கு சிக்கலை ஏற்படுத்தி விட்டது என்றனர்.

கார்த்திக் எழுதிய கடிதத்தில், என் மரணத்துக்குக் காரணம், என் மாமனார் ராஜேந்திரன் தான் என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். 
மேலும், என்னையும் என் மனைவியையும் பணத்துக்காக ராஜேந்திரன் பிரித்து விட்டார். நான் பல முறை நந்தினியிடம் போனில் பேச முயற்சித்தேன். 

அதையும் அவர் தடுத்து விட்டார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலால் தான் தற்கொலை செய்து கொள்கிறேன். மேலும், நான் என் மாமனாரிடம் கெஞ்சிப் பேசினேன். 

அதையும் அவர் கேட்க வில்லை. இது, எனக்கு மேலும் மன உளைச்சலை ஏற்படுத்தியது. என்னுடன் நந்தினியைப் பேச விடாமல் தடுக்கும் வகையில் என்னுடைய போன் காலை பிளாக் செய்து விட்டார். 

எங்கள் இருவரு க்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட வைத்து விட்டார். நான் சாக, முழுக்க முழுக்க காரணம் என் மாமனார் ராஜேந்திரன் தான் என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த கடிதம், கார்த்திக் தன் அக்கா ரம்யாவுக்கு எழுதியது. அதில்... ரம்யா, அம்மாவைப் பார்த்துக் கொள். எனக்கு வாழத் தெம்பு இல்லை. 

இத்தனை நாள் பிணமாகத் தான் வாழ்ந்தேன். என்னால் வாழ முடிய வில்லை. இனிமேல் நான் இருப்பது வேஸ்ட். என் கௌரவம், மரியாதை போய் விட்டது. அம்மாவைப் பார்த்துக் கொள். 

நந்தினியின் கணவர் கார்த்திக்கின் ஆசை... திடீர் திருப்பம் !
என் கடைசி ஆசை என்ன வென்றால், வெண்ணி லாவைப் புதைத்த இடத்தின் அருகே என்னைப் புதைத்து விடுங்கள். 

வெண்ணிலா பக்கத்தில் என்னைப் புதையுங்கள். ஃப்ளீஸ் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட் டுள்ளார்.

இது குறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், கார்த்திக்கின் தற்கொலைக் கடிதத்தின் அடிப்படையில், 
நடிகை நந்தினியின் அப்பா ராஜேந்திரனிடம் விசாரணை நடத்த முடிவு செய்து ள்ளோம். விசாரணை க்குப் பிறகு, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். 

தற்கொலை என்றே வழக்கு பதிவு செய்யப்பட் டுள்ளது. விசாரணை க்குப் பிறகு அது மாறவும் வாய்ப்புள்ளது என்றார்.
Tags:
Privacy and cookie settings