கார்த்திக் தற்கொலை செய்ய நந்தினி காரணம்?

நடிகை நந்தினிக்கும் அவரது கணவர் கார்த்திகேயனுக்கும் சில நாள்களாகவே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தி யடைந்த கார்த்திகேயன், தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
கார்த்திக் தற்கொலை செய்ய நந்தினி காரணம்?
சென்னை, வளசரவாக்கம், எஸ்.வி.எஸ் நகர், மெயின்ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சாந்தி. இவரது மகன் கார்த்திக். இவர், தி.நகரில் ஜிம் நடத்தி வந்தார். 

இந்த ஜிம்மிற்கு சின்னத்திரை நடிகை 'மைனா' நந்தினி வந்துள்ளார். அப்போது, இருவருக்கும் காதல் மலர்ந்தது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் மதுரையில் பெற்றோர்கள் சம்மதத்துடன் இருவருக்கும் திருமணம் நடந்தது. 

திருமணம் முடிந்த சில மாதங் களிலேயே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக சொல்கின்றனர். இதனால் மனம் உடைந்த கார்த்தி, ஜிம்மை வேறுநபருக்கு விற்று விட்டதாக சொல்லப் படுகிறது.

இந்நிலை யில் வீட்டை விட்டு வெளியே சென்ற கார்த்திக், விருகம்பாக்க த்தில் உள்ள லாட்ஜில் தங்கி யுள்ளார். அவரைத் தேடிய சாந்தி, விருகம்பாக்கம் போலீஸில் புகார் கொடுத்தார். 
போலீஸார், விசாரணை நடத்தியதில் கார்த்திக், விருகம்பாக்கத்தில் உள்ள லாட்ஜில் தங்கி யிருப்பதாக தகவல் கிடைத்தது. 

அதன் பேரில் அங்குச் சென்ற போது கார்த்திக் தங்கியிருந்த அறையின் கதவு உள்பக்கம் மூடப்பட்டு இருந்தது. 

கதவை உடைத்து உள்ளே சென்ற போலீஸார், பாத்ரூமில் கார்த்திக் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

அவரது உடலை மீட்ட போலீஸார், அங்கு விசாரணை நடத்திய போது குளிர் பானத்தில் விஷம் குடித்து அவர் தற்கொலை செய்தது தெரிய வந்தது. 

அதோடு அந்த அறையில் தற்கொலைக்கு முன்பு கார்த்திக் எழுதிய கடிதமும் போலீஸிடம் சிக்கியது. 

அந்தக் கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கு நந்தினியின் தந்தையே காரணம் என்று குறிப்பிடப் பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
இது குறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், கார்த்திக் அம்மா சாந்தி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம். 

முதற்கட்ட விசாரணையில் நந்தினியை ஆசை, ஆசையாக கார்த்திக் காதலி த்துள்ளார். ஆனால், திருமணம் முடிந்த தொடக்கத் திலேயே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட் டுள்ளது. 

கார்த்திக்குக்கு ஏற்கெனவே வெண்ணிலா என்ற பெண்ணுடன் பழக்கம் இருந்தது. அந்தப் பழக்கத்தை கார்த்திக், நந்தினியிடம் மறைத் துள்ளார். 

நந்தினி, கார்த்திக் திருமணம் நடந்த தகவலை யறிந்த வெண்ணிலா, தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய தற்கொலைக் கடிதத்தில் கார்த்திக் பெயரை குறிப்பிட்டதால் போலீஸார் அவரைக் கைது செய்தனர். 

இதனால் நந்தினி மற்றும் அவரது குடும்பத்தினர் மனவேதனை அடைந்தனர். இதுவே, நந்தினி, கார்த்திக் இடையே கருத்து வேறுபாட்டுக்கு முக்கிய காரணமாக இருந்தது. 
இதைத் தவிர வேலை வாங்கி தருவதாகவும் கூறி கார்த்திக் சிலரை ஏமாற்றிய தாக கூறப் படுகிறது. இதனால், நந்தினி, கார்த்திக்கைப் பிரிந்து தன்னுடைய அம்மா வீட்டுக்குச் சென்று விட்டார். 

தொடர்ந்து கார்த்தி க்குக்கு சோதனைக்கு மேல் சோதனை ஏற்பட்டதால் மன உளைச் சலுக்கு ஆளானார். இதற் கிடையில் தனியார் தொலைக் காட்சி நடத்திய சாகச நிகழ்ச்சியில் கார்த்திக்கும், நந்தினியும் பங்கேற்றனர். 

அப்போது, கார்த்திக்குக்கு காலில் அடிப்பட் டுள்ளது. தற்கொலைக்கு முன்புகூட கார்த்திக் தன்னுடைய அம்மா சாந்தியுடன் மருத்துவ மனைக்கு சென்றுள்ளார். 

சிகிச்சைக்குப் பிறகு வீட்டுக்குத் திரும்பாமல் லாட்ஜுக்குச் சென்றுள்ளார். வீட்டுக்கு வராததால் சாந்தி, கார்த்திக்கின் செல்போனில் தொடர்பு கொண் டுள்ளார். 

அதற்கு அவர் பதிலளிக் காததால் போலீஸில் புகார் கொடுத் துள்ளார். இதன் பிறகே கார்த்திக் தற்கொலை செய்த விவரம் தெரிய வந்தது. 

கார்த்திக் எழுதிய கடிதத்தில் நந்தினியின் தந்தை உள்பட இன்னும் சிலரது பெயர்களை சூசகமாகச் சொல்லி யுள்ளார். 

இது தொடர்பாக கார்த்திக் அம்மா புகார் கொடுத்தால் நந்தினி உள்பட அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தப்படும் என்றார்.
சின்னதிரை மட்டு மல்லாமல் நந்தினி, வம்சம் படத்தில் கதாநாயகி யின் தோழியா கவும், கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற படத்தில் காமெடி நடிகர் சூரிக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது. 

நடிகை நந்தினியின் கணவர் கார்த்திக் தற்கொலை கோலிவுட் வட்டார த்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

இது குறித்து நந்தினியிடம் கேட்ட போது, என்னுடைய கணவர் கார்த்திக் தற்கொலை க்கு நானும், என்னுடைய குடும்பத் தினரும் காரணமல்ல. 

கார்த்திக்குடன் பழகிய வெண்ணிலா ஏற்கெனவே அவரை மிரட்டியி ருக்கிறார். கார்த்திக்கின் அனைத்து தகவல்களும் தெரிந்த பிறகு நானும், என்னுடைய குடும்ப த்தினரும் அமைதியாகவே இருந்தோம். 
கார்த்திக், தன்னுடைய தற்கொலை கடிதத்தில் என்னுடைய தந்தை பெயரைச் குறிப்பிட் டுள்ளதற்கு எந்தவித சம்மந்தமும் இல்லை. 

அவர், ஏன் அப்படி எழுதினார் என்று எனக்கு தெரியவில்லை. அவர், மீது இருந்த காதலால் எல்லா வற்றையும் பொறுத்தி ருந்தேன். 

அவருக்கு அனைத்து வகையிலும் என்னுடைய தந்தை உதவியாக இருந்தார். அவர் மீது பழிச்சொல்வதில் நியாயமில்லை. அனைத்தும் கடவுளுக்கு தெரியும்" என்றார் கண்ணீர் மல்க.
Tags:
Privacy and cookie settings