சார்ஜ் ஆகும் போது பேசினால் மொபைல் வெடிக்குமா?

சார்ஜ் செய்து கொண்டிருந்த போது மொபைலில் பேசியவர் ஷாக் அடித்து இறந்தார். இப்படி ஒரு செய்தியுடன் புகைப்படங்களை சமூக வலை தளங்களிலும், வாட்ஸ் அப்பிலும் கண்டு வருகிறோம்.
சார்ஜ் ஆகும் போது பேசினால் மொபைல் வெடிக்குமா?
உண்மையிலே மொபைல் சார்ஜ் ஆகும் போது பேசினால் ஷாக் அடிக்குமா? அது உயிரையே பறிக்குமா?

எது ஆபத்தான மின்சாரம்?

100 முதல் 200 மில்லிஆம்ப்ஸ் (0.1Amps -0.2 Amps) வரையிலான மின்சாரம் உண்மை யிலே ஆபத்தானது. உயிரையே பறிக்கக் கூடியது. 200 mA விட அதிகமான மின்சாரம் மயக்க மடையச் செய்யும். 

தீக்காயங் களை உண்டாக்கும். உடனடியாக முதலுதவி அளிக்கப் பட்டால் உயிர்ச் சேதத்தைத் தவிர்க்கலாம். செயற்கை சுவாசம் (Artificial respiration) இந்தச் சூழலில் உதவும்.

100 mA-க்குக் குறைவான மின்சாரம் வலியைக் கொடுக்கும். மூச்சு விட சிரமமாக்கும். 10 mA-க்குக் குறைவாக இருந்தால், மின்சாரத்தை உணர முடியும். வேறு ஒன்றும் ஆகாது.
பொதுவாக மொபைல் போன்கள் 3.7 வோல்ட் Li-ion பேட்டரிகளைக் கொண்டிருக்கும். ஐபோன் 6 மாடலில் 1810mA பேட்டரி இருக்கும். 

அதாவது ஒரு மணி நேரத்துக்கு 3.7வோல்டேஜ் அழுத்தத்தில் 1.8Amps மின்சாரம் தரும். இது ஆபத்தான மின்சாரம் தான்.

ஆனால், மொபைல் ஃபோன் சார்ஜ் செய்யும்போது பேசினால், அது ஏன் வெடிக்க வேண்டும்? அல்லது, மின்சாரம் பயனரின் மீது பாய வேண்டும்?

ஒரிஜினல் மொபைல் சார்ஜர்கள் பயன்படுத்து பவர்களுக்கு இந்தப் பிரச்னை வர வாய்ப் பில்லை. மொபைல் ஃபோன்களை சார்ஜ் போடும் போது உயர் அழுத்த பவர் பாயிண்ட்டில் தான் போடுகிறோம். 

அதில் ஏதேனும் ஷார்ட் சர்க்யூட் ஆனால், அது மொபைல் போனை பாதித்து, அதன் மூலம் யூஸரையும் தாக்கலாம். 

ஆனால், அதற்கும் மொபைல் போன் பேசுவதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. மொபைலை சார்ஜரில் இருந்து எடுக்கும் போது கூட மின்சாரம் தாக்கலாம். 
பெரும் பாலான சம்பவங்களில் போலி சார்ஜர்கள் பயன் படுத்தியதால் தான் மொபைலில் மின்சாரம் தாக்கியி ருக்கிறது. எனவே, முடிந்த வரை ஒரிஜினல் சார்ஜர் களையே பயன்படுத்த வேண்டும்.

ஒரிஜினல் சார்ஜர் இருந்தால் சார்ஜ் போடும்போது பேசலாமா?

அதைத் தவிர்க்கலாம். ஏன் என்பதற்கு சில காரணங்கள் இருக்கின்றன. சார்ஜ் போடும் போது மொபைல் சூடாவதைப் பார்த்திருப்போம். 

அதே போல் நீண்ட நேரம் பேசினாலும் மொபைல் சூடாகும். சார்ஜ் போட்டுக் கொண்டே நீண்ட நேரம் பேசுவதால், இன்னும் அதிகமாக சூடாகும். 

இது பேட்டரியின் ஆயுளை பாதிக்கும். காதுகளு க்கும் ஆரோக்கிய மானதல்ல. முன் பெல்லாம் பேட்டரி குண்டாக மாறுவதைக் கவனித்தி ருக்கலாம். 

இதுவும் சார்ஜ் போட்டுக் கொண்டே பேசியதால் வந்த வினை தான். இதைக் கண்டு கொள்ளாமல் விட்டால், அது ஒரு நாள் வெடிக்கலாம்.
தொடர்ந்து பேட்டரி சூடாகிக் கொண்டே போனால், அதன் கெப்பாசிட்டி குறையும். 10 மணி நேரம் சார்ஜ் போட்டாலும் பாதிதான் சார்ஜ் ஆகி யிருக்கும். அல்லது அரை மணி நேரத்திலே சார்ஜ் தீர்ந்து விடும்.

சார்ஜ் போட்டுக் கொண்டே பேசுவதால் உண்டாகும் ஹீட், சார்ஜரையும் பாதிக்கலாம்.

சார்ஜ் குறைவாக இருக்கும் போது கதிர் வீச்சின் அளவு அதிகமாக இருக்குமா?
சார்ஜ் ஆகும் போது பேசினால் மொபைல் வெடிக்குமா?
இதுவும் ஒரு கட்டுக் கதைதான். பேட்டரியின் அளவுக்கும் கதிர் வீச்சின் அளவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என அனைத்து மொபைல் நிறுவனங் களும் பல தடவை தெளிவுப் படுத்தியிருக் கிறார்கள்.

இறுதியாக, இதுவரைக்கும் நடந்த சம்பவங்கள் அனைத் திலும் டூப்ளிகேட் சார்ஜரோ அல்லது தரம் குறைந்த மொபைல் களோ தான் பயன் படுத்தப் பட்டிருக் கின்றன.

அவை ஆபத்தானவை என்பது உண்மையே. ஆனால், அதற்கும் மொபைல் சார்ஜ் போடும் போது பேசுவதால் தான் விபத்துகள் நடக்கின்றன என்பதற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.
Tags: